ஒரு நிருபரின் டைரி – 31.– எஸ். சந்திரமெளலி.சின்னத்திரையில் பகல் இரவு என்று வித்தியாசம் தெரியாமல் அழுகாச்சி தொடர்களும், விதம் எடுத்து, அரைத்த மாவையே அரைத்தாலும், டீவி சேனல்களும் அதுமாதிரியான தொடர்களை ஒளிபரப்புவதை நிறுத்தப்போவதுமில்லை; மக்களும் அவற்றை பார்க்காமல் இருக்கப்போவதில்லை. ஆனாலும், கடந்த ஒரு பத்தாண்டுகளில் இதுமாதிரி சீரியல்களுக்கு மாற்றாக நிறைய கேம் ஷோக்களும், ரியாலிடி ஷோக்களூம் வருகின்றன. அவற்றில் மட்டும் என்ன உருப்படியாக வாழ்கிறதாம்? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. பொழுது போகாதவர்களுக்கு அல்லது டீவி பார்ப்பதே வேலை என்று இருப்பவர்களுக்கு ஒரு சாய்ஸ் கிடைக்கிறதே! தட்ஸ் ஆல்!.ஆனாலும், கறுப்பு வெள்ளை தூர்தர்ஷன் காலத்தில் இருந்து எனக்கு குவிஸ் புரோகிராம்கள் என்றால் கொஞ்சம் பிடிக்கும். கல்லூரி நாட்களில் தூர்தர்ஷனின் குவிஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். ஒரு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட அனுபவம் சற்று வித்தியாசமானது. குவிஸ் நிகழ்ச்சிக்கு முன்பாக குவிஸ் மாஸ்டர் என்னை அழைத்தார். அவர் எனக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமான நண்பர்தான். என்னிடம்" ஆங்கிலத்தில் "what is the meaning of kangaroo?" என்று கேட்க, எனக்கு 'கங்காரு' என்ற ஆஸ்திரேலிய மிருகம் பற்றித் தெரியுமே ஒழிய, அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரியாது. எனவே, "I don't know" என்றேன். "சரி! நிகழ்ச்சியின்போது, நான் இந்தக் கேள்வியை உன் டீமுக்குக் கேட்பேன். நீ இதே பதிலைச் சொல்ல வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். நானும் தலை அசைத்தேன்..நிகழ்ச்சியின்போது, சொல்லி வைத்தாற்போலவே எங்கள் டீமுக்கு அந்த கேள்வி கேட்கப்பட்டது. நானும் "I don't know" என்று பதில் சொன்னேன்..குவிஸ் மாஸ்டர் "சரியான விடை! உங்கள் அணிக்கு முழு 10 மதிப்பெண்கள்" என்று சொன்னார். அப்போது படப்பிடிப்பில் இருந்த அனைவருக்கும் இதை ரொம்ப ரசித்தனர். ஒளிபரப்பானபோது, ரசிகர்களுக்கும் அதே அனுபவம் ஏற்பட்டிருக்கும். நிகழ்ச்சி முடிந்த பிறகு அந்த குவிஸ் மாஸ்டர், ஆஸ்திரேலியப் பழங்குடி இன மொழியில் ''கங்காரு என்றால் எனக்குத் தெரியாது" என்று அர்த்தமாம் என விளக்கம் கொடுத்தார்..அது சரி, விஷயத்துக்கு வருகிறேன். அமிதாப் பச்சன் குவிஸ் மாஸ்டராக இருந்து நடத்தின "கோன் பனேகா கரோர்பதி" ஒரு சூப்பர் டூப்பர் ஹிட்டான நிகழ்ச்சி. அமிதாப்பின் அந்த நிகழ்ச்சியை ஆர்வமாகப் பார்த்த கோடானுகோடி பேரில் நானும் ஒருவன், சாதாரணமான ஒரு கதையைக்கூட தங்கள் கைவண்ணத்தில் திரைக்கதை என்ற நாகாசு வேலை செய்து, ஒரு சினிமாவாக எடுக்கும் வெற்றிகரமான ஃபார்முலாவைக் கடைபிடித்து, நமக்கு மிகவும் பரிச்சயமான குவிஸ் நிகழ்ச்சியை ஒரு விறுவிறுப்பான ஃபார்மேட்டில் கொடுத்து அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சிதான் கோன் பனேகா கரோர்பதி. ஆரம்பம் முதலே போட்டியில் வென்று கோடீஸ்வரன் ஆகப் போவது யார் ? என்ற கேள்வி எல்லோருக்கும் டென்ஷனான சஸ்பென்ஸ் கொடுத்தது..ஏராளமானவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று, முதல் ரவுண்டிலேயே தோல்வி கண்டாலும், அவர்களுக்கெல்லாம் அமிதாப் பச்சனுடனான சந்திப்பே கோடி ரூபாய் பரிசு போலத்தான். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, படிப்படியாக வெற்றிப் படிக்கட்டில் ஏறி, உச்சியை அடைந்து ஜெயித்து ஒன்றுக்குப் பின்னால் ஏழு பூஜ்ஜியங்கள் எழுதப்பட்ட காசோலையை வாங்கின முதல் இந்தியக் குடிமகன் என்ற பெருமைக்குரியவர் மும்பையைச் சேர்ந்த ஹர்ஷ் வர்த்தன் நவாதே. (அவருக்கு முழுசாய் ஒரு கோடி ரூபாய் கிடைக்கவில்லை; ஜனவரி, பிப்ரவரி என்று ஒரு வரி விடாமல் பிடித்தம் செய்து மீதித் தொகையைத்தான் கொடுத்தார்களாம்).அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் பரிசுக்கான கேள்வி என்ன தெரியுமா?.இந்திய அரசியல் சாசனத்தின்படி பாராளுமன்ற நடவடிக்கைகளில் இவர்களில் யார் பங்கேற்க முடியும்?.(அ) சொலிசிட்டர் ஜெனெரல் (ஆ) அட்டர்னி ஜெனெரல்.(இ) கேபினட் செயலாளர் (ஈ) தலைமை நீதிபதி.சரியான விடை (ஆ) அட்டர்னி ஜெனெரல்..இதற்கு விடை தெரியாத நிலையில், நவாதே தன் நண்பருக்கு டெலிபோன் செய்து, சரியான விடையைக் கேட்டுத் தெரிந்துகொண்டு விடை அளித்தார்..கோடீஸ்வரன் ஆன ஹர்ஷ் வர்தன்னின் அப்பா மும்பை போலிசில் டெபுடி கமிஷனராக இருந்து ரிடையர் ஆனவர். அம்மா ஹவுஸ் ஒய்ஃப். போட்டியில் ஜெயித்தபோது ஹர்ஷ் வர்தன் ஏற்கெனவே இரண்டுமுறை எழுதி வெற்றி கிட்டாத நிலையில் மீண்டும் ஐ.ஏ.எஸ். பரிட்சைக்கு தன்னைத் தீவிரமாக தயார்படுத்திக் கொண்டிருந்தார். அதற்குப் படித்த விஷயங்கள், இங்கே கைகொடுத்தன. (ஐ.ஏ.எஸ். ஆகியிருந்தால் நேர்மையான வழியில் ஒரு கோடி சம்பாதிக்க எத்தனை வருஷங்கள் ஆகி இருக்கும் பாஸ்?).மும்பையைச் சேர்ந்த ஹர்ஷ் வர்தன் கரோர்பதியில் ஜெயித்தபோது, அவரது பேட்டி முதன் முதலில் மும்பை டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியானது. அதனைத் தொடர்ந்து கல்கிக்கு வாராவாரம் மும்பை செய்திகளை எழுதிக்கொண்டிருந்த ஜெயஸ்ரீராஜ், அவரை பேட்டி கண்டு கல்கியில் எழுதினார். அது வெளியாகி இரண்டு மாதங்கள் கழித்து, கிராஸ் வோர்டு புத்தகக் கடையில் சென்னைவாசிகளை நேருக்கு நேர் சந்தித்து உரையாடுவதற்கு வந்திருந்தார் ஹர்ஷ். சென்னையின் கே.பி.சி. நிகழ்ச்சி ரசிகர்கள் ஏராளமானவர்கள் அந்த நிகழ்ச்சிகு வந்திருந்தார்கள். அப்போது ஹர்ஷ் வர்தன் நவாதேவை பேட்டி காணும் வாய்ப்பு கிடைத்தது..அன்றைய தினம் அவர் சொன்ன மிக முக்கியமான ஒரு செய்தி: "கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் ஜெயித்த பிறகு என் வாழ்க்கை மாறிவிட்டது; ஆனால் நான் மாறவில்லை" என்பதுதான்.."ஹர்ஷ்! கரோர்பதி ஆன தருணம் எப்படி இருந்தது?"."அது என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு தருணம். ஒரு நிமிஷத்துக்கு எனக்கு ஒண்ணுமே புரியலை. அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் மத்தியில் ஒரே கைத்தட்டல்; சந்தோஷக் கூக்குரல்கள். அமிதாப் என்னை வாழ்த்தி, கைகுலுக்கிவிட்டு, கட்டித் தழுவினபோதுதான் என்ன நடக்குது என்பதையே நான் புரிந்துகொண்டேன். அன்றைக்குப் போட்ட ஆட்டோகிராஃப்கள் எத்தனை என்பது எனக்குத் தெரியாது! திடீரென்று வந்த செலிப்ரட்டி ஸ்டேடஸ் காரணமாக சந்தோஷம் ஒரு பக்கம் என்றாலும், அதனைத் தொடர்ந்து தினமும் ஏகப்பட்ட போன் கால்கள். எப்படித்தான் எல்லோருக்கும் என் போன் நெம்பர் கிடைத்ததோ தெரியவில்லை; இன்னொரு பக்கம் தினமும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் வருகின்றன. முழு விலாசம் தெரியாதவர்கள், கே.பி.சி. கரோர்பதி ஹர்ஷ்வர்தன் நவாதே, மும்பை" என்று எழுதினால் கூடப் போதும், தபால் துறை ஊழியர்கள் என்னிடம் டெலிவரி செய்துவிடுகிறார்கள். பள்ளிகள் கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் மத்தியில் பேச அழைக்கிறார்கள்; என் பங்கேற்பு அவர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் தரும் என்பதால் முடிந்தவரை நானும் கலந்துகொள்கிறேன் " என்றார்.."கரோர்பதியில் ஜெயித்தது லக்கா?"."எனக்கு ரொம்பவே தெய்வ நம்பிக்கை உண்டு. ஆனால், குருட்டு அதிர்ஷ்டத்தில் துளியும் நம்பிக்கை கிடையாது. நிறைய உழைக்க வேண்டும்; உழைப்பு நிச்சயம் அதற்கேற்ற ஊதியத்தைக் கொடுக்கும்" என்றார்..அறிவுபூர்வமான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜெயித்தவருக்கு மாடலிங் வாய்ப்புகளும், சினிமாவில் நடிக்கவும் அழைப்பது பற்றிக் கேட்டபோது, "சினிமாவில் நடிப்பதில் எனக்குத் துளியும் ஆர்வமில்லை. கண்டிப்பாக 'நோ' சொல்லிவிட்டேன். இன்னொரு தமாஷ் தெரியுமா? "சில பேர் எனக்கு பெண் கொடுக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டு என் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். சிலருக்கு என்னைவிட, நான் ஜெயித்த பணம்தான் அட்டிராக்ஷன். உள்ளூர் வங்கிகள் முதல் அயல்நாட்டு வங்கிகள் வரை தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி, ஜெயித்த பணத்தை எங்களிடம் முதலீடு செய்யுங்கள் என்கிறார்கள்; இன்னும் சிலர், பங்கு சந்தையில் முதலீடு செய்வதுதான் புத்திசாலித்தனம் என ஆலோசனை சொல்கிறார்கள். ஆனால், எனக்கு ரொம்ப நன்றாகவே தெரியும்; இந்த திடீர் புகழ் தாற்காலிகமானது; இன்னொருவர் கரோர்பதி நிகழ்ச்சியில் ஜெயித்துவிட்டால், எல்லோரு கவனமும் அவர் மீது நகர்ந்துவிடும்; சிவில் சர்வீஸ் தேவு எழுதி, அப்பா போலவே போலிஸ் துறையில் பணியாற்றுவதுதான் என் லட்சியம்" என்றார்..'கோடி ரூபாய் ஜெயித்திருக்கிறீர்களே! உங்களுக்கென்று என்ன வாங்கிக்கொண்டீர்கள்? உங்கள் பெற்றோர்களுக்கு என்ன வாங்கிக்கொடுத்தீர்கள்?" என்ற கேள்விக்கு,."நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, பல ஊர்களுக்கும் போகவேண்டி இருப்பதனால், எனக்கு புது டிரஸ் நிறைய வாங்கிக்கொண்டேன். என் பெற்றோர்களுக்கு ஒரு கார் வாங்கிக் கொடுக்கப் போகிறேன்" என்றார்.."கரோர்பதி நிகழ்ச்சிக்குப் பிறகு, பல தரப்பினரிடமும் குவிஸ் நிகழ்ச்சி பற்றிய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு உபயோகமான டிப்ஸ் கொடுங்களேன்"."நாள்தோறும் செய்தித்தாள், பத்திரிகைகள் படியுங்கள்; முக்கியமான விஷயங்களை மனதிலோ, டைரியிலோ குறித்து வைத்துக் கொள்ளுங்கள்; எந்த தகவலுமே உபயோகமில்லாத தகவல் இல்லை; எப்போதாவது, எங்கேயாவது பயன்படும்".கே.பி.சி. நிகழ்ச்சியில் அமிதாப், ஹர்ஷ் வர்தனிடம் கேட்க கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லி கோடி ரூபாய் ஜெயித்த பிறகு, அவரிடம் பலரும் பல கேள்விகளைக் கேட்டாலும், தன் வீட்டு வேலைக்காரப் பெண்மணி தன்னிடம் கேள்வி கேட்டதைப் பற்றி சொன்னார். "நான் கோடி ரூபாய் ஜெயித்த செய்தி எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள குடிசைப் பகுதி மக்களுக்கும் தெரிந்திருக்கிறது. அங்கேதான் எங்கள் வீட்டு வேலை செய்யும் பெண்மணியும் வசிக்கிறார். விஷயம் கேள்விப்பட்ட அவர், என்னிடம், "ஐயா! நீங்க நிறைய பணம் ஜெயிச்சிருக்கீங்களாமே?" என்று கேட்டார். "ஆமாம்! கோடி ரூபாய்! என்று பதில் சொன்னேன். நான் சொன்னது அவருக்குப் புரியவில்லை, மீண்டும் ஒரு கேள்வி கேட்டார், "கோடி ரூபாய்னா எவ்ளோ பெருசு?".நான், ஹர்ஷ் வர்தன் நவாதேவிடம் விடைபெறும்போது, என் மனசை குடைந்துகொண்டிருந்த ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டேன். "ஹர்ஷ்! வரி போக எவ்வளவு பரிசு கொடுத்தார்கள்?" ஹர்ஷ் கூலாக சொன்னார், " 45 லட்சம் ரூபாய் வரி பிடித்துக் கொண்டு மீதிதான் கைக்கு வந்தது. ஏறத்தாழ பாதி பரிசுப் பணத்தை வரியாக செலுத்தியது பற்றி எனக்கு துளியும் வருத்தமில்லை; நேர்மையான ஒரு குடிமகனாக அந்தக் கடமையை செய்த சந்தோஷம் கிடைத்தது!.இப்போது ஹர்ஷ் வர்தன் தான் விரும்பியபடி ஐ.பி.எஸ். ஆனாரா? இப்போது எப்படி இருக்கிறார்? என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறார்? என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் இணையத்தில் தேடிப்பார்த்தேன்..துரதிருஷ்டவசமாக அவர் ஐ.பி.எஸ். ஆகவில்லை. ஸ்காட்லாந்து சென்று எடின்பரோ பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முடித்தார். தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களில் முக்கிய பொறுப்புக்களில் இருந்துவிட்டு, தற்போது ஒரு டச்சு நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார், திருமணமாகிவிட்டது. மனைவி சரிகா மராத்தி சீரியல் நடிகை. இரண்டு குழந்தைகள்..அமிதாப்பின் கரோர்பதி நிகழ்ச்சியை உல்டா பண்ணி சன் டீ.வி.யில் சரத்குமார் நடத்தியது கோடீஸ்வரன் நிகழ்ச்சி. அமிதாப்பின் நிகழ்ச்சிக்குப் பின்னணியில் மூளையாக இருந்து நடத்தியவர் சித்தார்த்த பாசு. அதேபோல சரத்குமாரின் நிகழ்ச்சிக்கு மூளையாக இருந்தவர் போர்ன்விடா குவிஸ் புகழ் டெரிக் ஓ பிரயன். கொல்கத்தாகாரர். கோடீஸ்வரன் நிகழ்ச்சி சம்மந்தமாக அவர் சென்னை வந்திருந்தபோது, அவரை சந்தித்து பேட்டி கண்டேன்..அப்போது அவரிடம், "டான்சனியாவின் தலைநகரம் எது? தூங்காத மிருகம் எது? எந்த வருடம் டுனிசியா சுதந்திரம் அடைந்தது? கணவனும், மனைவியுமாக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்? என்பது போன்ற பொது அறிவுத் தகவல்கள் எல்லாம் ஒரு மனிதனுக்கு அவசியம்தானா? இந்த தகவல்களையெல்லாம் ஒருவர் தெரிந்து வைத்திருப்பதனால் அவருக்கு என்ன பலன்?" என்று கொஞ்சம் காட்டமாகக் கேட்டதும்,."என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? அறிவு என்பது ஒரு மனிதனுக்கு அழிவில்லாத பொக்கிஷம். ஒரு முறை அதை நீங்கள் பெற்றுவிட்டால் அதன் பிறகு அதை அழிக்கவே முடியாது" என்றார். உடனே, நான், நீங்கள் சொல்லும் இதே கருத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே எங்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண் கவிஞரான ஔவையார் ஒரு நாலு வரி செய்யுளில் சொல்லி இருக்கிறார்" என்று சொல்லிவிட்டு, நான் பள்ளிக்கூடத்தில் படித்த "வெள்ளத்தால் போகாது; வெந்தணலால் வேகாது" என்ற செய்யுளை சொல்லி, அதன் அர்த்தத்தையும் விளக்கினேன். ஆச்சரியப்பட்டுப் போனார் டெரிக்.."எனக்கு ஒரு உதவி செய்யுங்களேன்! அந்த செய்யுளை எனக்கு ஒரு காதிதத்தில் எழுதிக்கொடுங்கள். கோடீஸ்வரன் முதல் எபிசோடில் இதை பயன்படுத்திக் கொள்கிறேன்" என்றார். நானும் அப்படியே எழுதிக்கொடுத்தேன். கோடீஸ்வரன் முதல் எபிசோடை நான் பார்க்காததால், சரத்குமார் அதை சொன்னாரா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை..சில ஆண்டுகள் கழித்து மறுபடியும் சென்னை வந்திருந்த டெரிக்கிடம் கேஷுவலாகப் பேசிக்கொண்டிருந்தபோது, கோடீஸ்வரன் அனுபவம் பற்றிக் கேட்டேன். அவர் சொன்ன ஒரு வரி பதில், "அதை ஏன் இப்போது நினைவுபடுத்துகிறீர்கள்?".அதன் பிறகு டெரிக் ஓ பிரயன், திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்து எம்.பி.யாகி, மனுஷர் இப்போது படு பிஸி..(தொடரும்)
ஒரு நிருபரின் டைரி – 31.– எஸ். சந்திரமெளலி.சின்னத்திரையில் பகல் இரவு என்று வித்தியாசம் தெரியாமல் அழுகாச்சி தொடர்களும், விதம் எடுத்து, அரைத்த மாவையே அரைத்தாலும், டீவி சேனல்களும் அதுமாதிரியான தொடர்களை ஒளிபரப்புவதை நிறுத்தப்போவதுமில்லை; மக்களும் அவற்றை பார்க்காமல் இருக்கப்போவதில்லை. ஆனாலும், கடந்த ஒரு பத்தாண்டுகளில் இதுமாதிரி சீரியல்களுக்கு மாற்றாக நிறைய கேம் ஷோக்களும், ரியாலிடி ஷோக்களூம் வருகின்றன. அவற்றில் மட்டும் என்ன உருப்படியாக வாழ்கிறதாம்? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. பொழுது போகாதவர்களுக்கு அல்லது டீவி பார்ப்பதே வேலை என்று இருப்பவர்களுக்கு ஒரு சாய்ஸ் கிடைக்கிறதே! தட்ஸ் ஆல்!.ஆனாலும், கறுப்பு வெள்ளை தூர்தர்ஷன் காலத்தில் இருந்து எனக்கு குவிஸ் புரோகிராம்கள் என்றால் கொஞ்சம் பிடிக்கும். கல்லூரி நாட்களில் தூர்தர்ஷனின் குவிஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். ஒரு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட அனுபவம் சற்று வித்தியாசமானது. குவிஸ் நிகழ்ச்சிக்கு முன்பாக குவிஸ் மாஸ்டர் என்னை அழைத்தார். அவர் எனக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமான நண்பர்தான். என்னிடம்" ஆங்கிலத்தில் "what is the meaning of kangaroo?" என்று கேட்க, எனக்கு 'கங்காரு' என்ற ஆஸ்திரேலிய மிருகம் பற்றித் தெரியுமே ஒழிய, அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரியாது. எனவே, "I don't know" என்றேன். "சரி! நிகழ்ச்சியின்போது, நான் இந்தக் கேள்வியை உன் டீமுக்குக் கேட்பேன். நீ இதே பதிலைச் சொல்ல வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். நானும் தலை அசைத்தேன்..நிகழ்ச்சியின்போது, சொல்லி வைத்தாற்போலவே எங்கள் டீமுக்கு அந்த கேள்வி கேட்கப்பட்டது. நானும் "I don't know" என்று பதில் சொன்னேன்..குவிஸ் மாஸ்டர் "சரியான விடை! உங்கள் அணிக்கு முழு 10 மதிப்பெண்கள்" என்று சொன்னார். அப்போது படப்பிடிப்பில் இருந்த அனைவருக்கும் இதை ரொம்ப ரசித்தனர். ஒளிபரப்பானபோது, ரசிகர்களுக்கும் அதே அனுபவம் ஏற்பட்டிருக்கும். நிகழ்ச்சி முடிந்த பிறகு அந்த குவிஸ் மாஸ்டர், ஆஸ்திரேலியப் பழங்குடி இன மொழியில் ''கங்காரு என்றால் எனக்குத் தெரியாது" என்று அர்த்தமாம் என விளக்கம் கொடுத்தார்..அது சரி, விஷயத்துக்கு வருகிறேன். அமிதாப் பச்சன் குவிஸ் மாஸ்டராக இருந்து நடத்தின "கோன் பனேகா கரோர்பதி" ஒரு சூப்பர் டூப்பர் ஹிட்டான நிகழ்ச்சி. அமிதாப்பின் அந்த நிகழ்ச்சியை ஆர்வமாகப் பார்த்த கோடானுகோடி பேரில் நானும் ஒருவன், சாதாரணமான ஒரு கதையைக்கூட தங்கள் கைவண்ணத்தில் திரைக்கதை என்ற நாகாசு வேலை செய்து, ஒரு சினிமாவாக எடுக்கும் வெற்றிகரமான ஃபார்முலாவைக் கடைபிடித்து, நமக்கு மிகவும் பரிச்சயமான குவிஸ் நிகழ்ச்சியை ஒரு விறுவிறுப்பான ஃபார்மேட்டில் கொடுத்து அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சிதான் கோன் பனேகா கரோர்பதி. ஆரம்பம் முதலே போட்டியில் வென்று கோடீஸ்வரன் ஆகப் போவது யார் ? என்ற கேள்வி எல்லோருக்கும் டென்ஷனான சஸ்பென்ஸ் கொடுத்தது..ஏராளமானவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று, முதல் ரவுண்டிலேயே தோல்வி கண்டாலும், அவர்களுக்கெல்லாம் அமிதாப் பச்சனுடனான சந்திப்பே கோடி ரூபாய் பரிசு போலத்தான். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, படிப்படியாக வெற்றிப் படிக்கட்டில் ஏறி, உச்சியை அடைந்து ஜெயித்து ஒன்றுக்குப் பின்னால் ஏழு பூஜ்ஜியங்கள் எழுதப்பட்ட காசோலையை வாங்கின முதல் இந்தியக் குடிமகன் என்ற பெருமைக்குரியவர் மும்பையைச் சேர்ந்த ஹர்ஷ் வர்த்தன் நவாதே. (அவருக்கு முழுசாய் ஒரு கோடி ரூபாய் கிடைக்கவில்லை; ஜனவரி, பிப்ரவரி என்று ஒரு வரி விடாமல் பிடித்தம் செய்து மீதித் தொகையைத்தான் கொடுத்தார்களாம்).அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் பரிசுக்கான கேள்வி என்ன தெரியுமா?.இந்திய அரசியல் சாசனத்தின்படி பாராளுமன்ற நடவடிக்கைகளில் இவர்களில் யார் பங்கேற்க முடியும்?.(அ) சொலிசிட்டர் ஜெனெரல் (ஆ) அட்டர்னி ஜெனெரல்.(இ) கேபினட் செயலாளர் (ஈ) தலைமை நீதிபதி.சரியான விடை (ஆ) அட்டர்னி ஜெனெரல்..இதற்கு விடை தெரியாத நிலையில், நவாதே தன் நண்பருக்கு டெலிபோன் செய்து, சரியான விடையைக் கேட்டுத் தெரிந்துகொண்டு விடை அளித்தார்..கோடீஸ்வரன் ஆன ஹர்ஷ் வர்தன்னின் அப்பா மும்பை போலிசில் டெபுடி கமிஷனராக இருந்து ரிடையர் ஆனவர். அம்மா ஹவுஸ் ஒய்ஃப். போட்டியில் ஜெயித்தபோது ஹர்ஷ் வர்தன் ஏற்கெனவே இரண்டுமுறை எழுதி வெற்றி கிட்டாத நிலையில் மீண்டும் ஐ.ஏ.எஸ். பரிட்சைக்கு தன்னைத் தீவிரமாக தயார்படுத்திக் கொண்டிருந்தார். அதற்குப் படித்த விஷயங்கள், இங்கே கைகொடுத்தன. (ஐ.ஏ.எஸ். ஆகியிருந்தால் நேர்மையான வழியில் ஒரு கோடி சம்பாதிக்க எத்தனை வருஷங்கள் ஆகி இருக்கும் பாஸ்?).மும்பையைச் சேர்ந்த ஹர்ஷ் வர்தன் கரோர்பதியில் ஜெயித்தபோது, அவரது பேட்டி முதன் முதலில் மும்பை டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியானது. அதனைத் தொடர்ந்து கல்கிக்கு வாராவாரம் மும்பை செய்திகளை எழுதிக்கொண்டிருந்த ஜெயஸ்ரீராஜ், அவரை பேட்டி கண்டு கல்கியில் எழுதினார். அது வெளியாகி இரண்டு மாதங்கள் கழித்து, கிராஸ் வோர்டு புத்தகக் கடையில் சென்னைவாசிகளை நேருக்கு நேர் சந்தித்து உரையாடுவதற்கு வந்திருந்தார் ஹர்ஷ். சென்னையின் கே.பி.சி. நிகழ்ச்சி ரசிகர்கள் ஏராளமானவர்கள் அந்த நிகழ்ச்சிகு வந்திருந்தார்கள். அப்போது ஹர்ஷ் வர்தன் நவாதேவை பேட்டி காணும் வாய்ப்பு கிடைத்தது..அன்றைய தினம் அவர் சொன்ன மிக முக்கியமான ஒரு செய்தி: "கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் ஜெயித்த பிறகு என் வாழ்க்கை மாறிவிட்டது; ஆனால் நான் மாறவில்லை" என்பதுதான்.."ஹர்ஷ்! கரோர்பதி ஆன தருணம் எப்படி இருந்தது?"."அது என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு தருணம். ஒரு நிமிஷத்துக்கு எனக்கு ஒண்ணுமே புரியலை. அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் மத்தியில் ஒரே கைத்தட்டல்; சந்தோஷக் கூக்குரல்கள். அமிதாப் என்னை வாழ்த்தி, கைகுலுக்கிவிட்டு, கட்டித் தழுவினபோதுதான் என்ன நடக்குது என்பதையே நான் புரிந்துகொண்டேன். அன்றைக்குப் போட்ட ஆட்டோகிராஃப்கள் எத்தனை என்பது எனக்குத் தெரியாது! திடீரென்று வந்த செலிப்ரட்டி ஸ்டேடஸ் காரணமாக சந்தோஷம் ஒரு பக்கம் என்றாலும், அதனைத் தொடர்ந்து தினமும் ஏகப்பட்ட போன் கால்கள். எப்படித்தான் எல்லோருக்கும் என் போன் நெம்பர் கிடைத்ததோ தெரியவில்லை; இன்னொரு பக்கம் தினமும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் வருகின்றன. முழு விலாசம் தெரியாதவர்கள், கே.பி.சி. கரோர்பதி ஹர்ஷ்வர்தன் நவாதே, மும்பை" என்று எழுதினால் கூடப் போதும், தபால் துறை ஊழியர்கள் என்னிடம் டெலிவரி செய்துவிடுகிறார்கள். பள்ளிகள் கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் மத்தியில் பேச அழைக்கிறார்கள்; என் பங்கேற்பு அவர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் தரும் என்பதால் முடிந்தவரை நானும் கலந்துகொள்கிறேன் " என்றார்.."கரோர்பதியில் ஜெயித்தது லக்கா?"."எனக்கு ரொம்பவே தெய்வ நம்பிக்கை உண்டு. ஆனால், குருட்டு அதிர்ஷ்டத்தில் துளியும் நம்பிக்கை கிடையாது. நிறைய உழைக்க வேண்டும்; உழைப்பு நிச்சயம் அதற்கேற்ற ஊதியத்தைக் கொடுக்கும்" என்றார்..அறிவுபூர்வமான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜெயித்தவருக்கு மாடலிங் வாய்ப்புகளும், சினிமாவில் நடிக்கவும் அழைப்பது பற்றிக் கேட்டபோது, "சினிமாவில் நடிப்பதில் எனக்குத் துளியும் ஆர்வமில்லை. கண்டிப்பாக 'நோ' சொல்லிவிட்டேன். இன்னொரு தமாஷ் தெரியுமா? "சில பேர் எனக்கு பெண் கொடுக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டு என் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். சிலருக்கு என்னைவிட, நான் ஜெயித்த பணம்தான் அட்டிராக்ஷன். உள்ளூர் வங்கிகள் முதல் அயல்நாட்டு வங்கிகள் வரை தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி, ஜெயித்த பணத்தை எங்களிடம் முதலீடு செய்யுங்கள் என்கிறார்கள்; இன்னும் சிலர், பங்கு சந்தையில் முதலீடு செய்வதுதான் புத்திசாலித்தனம் என ஆலோசனை சொல்கிறார்கள். ஆனால், எனக்கு ரொம்ப நன்றாகவே தெரியும்; இந்த திடீர் புகழ் தாற்காலிகமானது; இன்னொருவர் கரோர்பதி நிகழ்ச்சியில் ஜெயித்துவிட்டால், எல்லோரு கவனமும் அவர் மீது நகர்ந்துவிடும்; சிவில் சர்வீஸ் தேவு எழுதி, அப்பா போலவே போலிஸ் துறையில் பணியாற்றுவதுதான் என் லட்சியம்" என்றார்..'கோடி ரூபாய் ஜெயித்திருக்கிறீர்களே! உங்களுக்கென்று என்ன வாங்கிக்கொண்டீர்கள்? உங்கள் பெற்றோர்களுக்கு என்ன வாங்கிக்கொடுத்தீர்கள்?" என்ற கேள்விக்கு,."நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, பல ஊர்களுக்கும் போகவேண்டி இருப்பதனால், எனக்கு புது டிரஸ் நிறைய வாங்கிக்கொண்டேன். என் பெற்றோர்களுக்கு ஒரு கார் வாங்கிக் கொடுக்கப் போகிறேன்" என்றார்.."கரோர்பதி நிகழ்ச்சிக்குப் பிறகு, பல தரப்பினரிடமும் குவிஸ் நிகழ்ச்சி பற்றிய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு உபயோகமான டிப்ஸ் கொடுங்களேன்"."நாள்தோறும் செய்தித்தாள், பத்திரிகைகள் படியுங்கள்; முக்கியமான விஷயங்களை மனதிலோ, டைரியிலோ குறித்து வைத்துக் கொள்ளுங்கள்; எந்த தகவலுமே உபயோகமில்லாத தகவல் இல்லை; எப்போதாவது, எங்கேயாவது பயன்படும்".கே.பி.சி. நிகழ்ச்சியில் அமிதாப், ஹர்ஷ் வர்தனிடம் கேட்க கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லி கோடி ரூபாய் ஜெயித்த பிறகு, அவரிடம் பலரும் பல கேள்விகளைக் கேட்டாலும், தன் வீட்டு வேலைக்காரப் பெண்மணி தன்னிடம் கேள்வி கேட்டதைப் பற்றி சொன்னார். "நான் கோடி ரூபாய் ஜெயித்த செய்தி எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள குடிசைப் பகுதி மக்களுக்கும் தெரிந்திருக்கிறது. அங்கேதான் எங்கள் வீட்டு வேலை செய்யும் பெண்மணியும் வசிக்கிறார். விஷயம் கேள்விப்பட்ட அவர், என்னிடம், "ஐயா! நீங்க நிறைய பணம் ஜெயிச்சிருக்கீங்களாமே?" என்று கேட்டார். "ஆமாம்! கோடி ரூபாய்! என்று பதில் சொன்னேன். நான் சொன்னது அவருக்குப் புரியவில்லை, மீண்டும் ஒரு கேள்வி கேட்டார், "கோடி ரூபாய்னா எவ்ளோ பெருசு?".நான், ஹர்ஷ் வர்தன் நவாதேவிடம் விடைபெறும்போது, என் மனசை குடைந்துகொண்டிருந்த ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டேன். "ஹர்ஷ்! வரி போக எவ்வளவு பரிசு கொடுத்தார்கள்?" ஹர்ஷ் கூலாக சொன்னார், " 45 லட்சம் ரூபாய் வரி பிடித்துக் கொண்டு மீதிதான் கைக்கு வந்தது. ஏறத்தாழ பாதி பரிசுப் பணத்தை வரியாக செலுத்தியது பற்றி எனக்கு துளியும் வருத்தமில்லை; நேர்மையான ஒரு குடிமகனாக அந்தக் கடமையை செய்த சந்தோஷம் கிடைத்தது!.இப்போது ஹர்ஷ் வர்தன் தான் விரும்பியபடி ஐ.பி.எஸ். ஆனாரா? இப்போது எப்படி இருக்கிறார்? என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறார்? என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் இணையத்தில் தேடிப்பார்த்தேன்..துரதிருஷ்டவசமாக அவர் ஐ.பி.எஸ். ஆகவில்லை. ஸ்காட்லாந்து சென்று எடின்பரோ பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முடித்தார். தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களில் முக்கிய பொறுப்புக்களில் இருந்துவிட்டு, தற்போது ஒரு டச்சு நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார், திருமணமாகிவிட்டது. மனைவி சரிகா மராத்தி சீரியல் நடிகை. இரண்டு குழந்தைகள்..அமிதாப்பின் கரோர்பதி நிகழ்ச்சியை உல்டா பண்ணி சன் டீ.வி.யில் சரத்குமார் நடத்தியது கோடீஸ்வரன் நிகழ்ச்சி. அமிதாப்பின் நிகழ்ச்சிக்குப் பின்னணியில் மூளையாக இருந்து நடத்தியவர் சித்தார்த்த பாசு. அதேபோல சரத்குமாரின் நிகழ்ச்சிக்கு மூளையாக இருந்தவர் போர்ன்விடா குவிஸ் புகழ் டெரிக் ஓ பிரயன். கொல்கத்தாகாரர். கோடீஸ்வரன் நிகழ்ச்சி சம்மந்தமாக அவர் சென்னை வந்திருந்தபோது, அவரை சந்தித்து பேட்டி கண்டேன்..அப்போது அவரிடம், "டான்சனியாவின் தலைநகரம் எது? தூங்காத மிருகம் எது? எந்த வருடம் டுனிசியா சுதந்திரம் அடைந்தது? கணவனும், மனைவியுமாக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்? என்பது போன்ற பொது அறிவுத் தகவல்கள் எல்லாம் ஒரு மனிதனுக்கு அவசியம்தானா? இந்த தகவல்களையெல்லாம் ஒருவர் தெரிந்து வைத்திருப்பதனால் அவருக்கு என்ன பலன்?" என்று கொஞ்சம் காட்டமாகக் கேட்டதும்,."என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? அறிவு என்பது ஒரு மனிதனுக்கு அழிவில்லாத பொக்கிஷம். ஒரு முறை அதை நீங்கள் பெற்றுவிட்டால் அதன் பிறகு அதை அழிக்கவே முடியாது" என்றார். உடனே, நான், நீங்கள் சொல்லும் இதே கருத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே எங்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண் கவிஞரான ஔவையார் ஒரு நாலு வரி செய்யுளில் சொல்லி இருக்கிறார்" என்று சொல்லிவிட்டு, நான் பள்ளிக்கூடத்தில் படித்த "வெள்ளத்தால் போகாது; வெந்தணலால் வேகாது" என்ற செய்யுளை சொல்லி, அதன் அர்த்தத்தையும் விளக்கினேன். ஆச்சரியப்பட்டுப் போனார் டெரிக்.."எனக்கு ஒரு உதவி செய்யுங்களேன்! அந்த செய்யுளை எனக்கு ஒரு காதிதத்தில் எழுதிக்கொடுங்கள். கோடீஸ்வரன் முதல் எபிசோடில் இதை பயன்படுத்திக் கொள்கிறேன்" என்றார். நானும் அப்படியே எழுதிக்கொடுத்தேன். கோடீஸ்வரன் முதல் எபிசோடை நான் பார்க்காததால், சரத்குமார் அதை சொன்னாரா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை..சில ஆண்டுகள் கழித்து மறுபடியும் சென்னை வந்திருந்த டெரிக்கிடம் கேஷுவலாகப் பேசிக்கொண்டிருந்தபோது, கோடீஸ்வரன் அனுபவம் பற்றிக் கேட்டேன். அவர் சொன்ன ஒரு வரி பதில், "அதை ஏன் இப்போது நினைவுபடுத்துகிறீர்கள்?".அதன் பிறகு டெரிக் ஓ பிரயன், திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்து எம்.பி.யாகி, மனுஷர் இப்போது படு பிஸி..(தொடரும்)