ராஜஸ்தானில் 1000 இந்திரா உணவகங்கள்!

ராஜஸ்தானில் 1000 இந்திரா உணவகங்கள்!
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

ரு பக்கம் விரைவில் சட்டமன்றத் தேர்தல். இன்னொரு பக்கம், சச்சின் கோஷ்டி. இரண்டையும் சமாளிக்க ரொம்பவே திணறிக் கொண்டிருக்கிறார் ராஜஸ்தான் முதலமைச்சர் அஷோக் கெலாட்.

கடந்த பா.ஜ.க. ஆட்சியின்போது முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா, சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் நம் ஊர் அம்மா உணவகம் போல “மொபைல் அன்னபூர்ணா” உணவகங்கள் நடத்தினார். மக்கள் மத்தியில் அவற்றுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி கண்டு, காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தவுடன், முதலமைச்சராகப் பொறுபேற்றுக் கொண்ட அஷோக் கெலாட், அந்த மொபைல் உணவக திட்டத்தை நிறுத்திவிட்டார்.

இப்போது தேர்தல் வருகிறது என்றதும்  அந்தத் திட்டத்தை தூசு தட்டி, “இந்திரா ரசோய் அதாவது இந்திரா உணவகம்” என்ற பெயரில் மீண்டும்  ஆரம்பித்திருக்கிறார்.

இந்த உணவகங்களில் எட்டு ரூபாய்க்கு சாப்பிடலாம். அரசாங்கம் ஒரு சாப்பாட்டுக்கு 14 ரூபாய் மானியம் வழங்குகிறது. இதற்காக அஷோக் கெலாட் அரசு 14 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.

இங்கே ஒரு சாப்பாடு என்பது 100 கிராம் தால், 100 கிராம் சப்ஜி, 250 கிராம் சப்பாத்தி மற்றும் ஊறுகாய் அடங்கும்.

இப்போது ராஜஸ்தான் முழுக்க சுமார் 850 இந்திரா உணவகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பெண்கள் சுய உதவிக் குழுக்களால் நடத்தப்படுகின்றன.

தேர்தல் அறிவிப்பு வருவதற்குள்ளாக மாநிலம் முழுவதிலுமாக உள்ள இந்திரா உணவகங்களின் எண்ணிக்கையை ஆயிரம்  ஆக்கிவிடவேண்டும் என்று  சொல்லி இருக்கிறாராம் முதலமைச்சர் அஷோக் கெலாட்.

இன்னொரு விஷயம் தெரியுமா? முதலமைச்சரே அடிக்கடி இந்திரா உணவகங்களுக்கு விசிட் அடித்து, அங்கே சாப்பிடுகிறார். அதன் புகைப்படங்களை, வீடியோவை சமூக ஊடகங்கள் உள்ளிட்ட  பல்வேறு வகையான மீடியா மூலமும்  பகிரப்படுமின்றன! தன் கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கியஸ்தர்களை இந்திரா ரசோய்களில் சாப்பிட்டு, அவற்றை பிரபலப்படுத்தும்படி முதலமைச்சர் சொல்லி இருக்கிறார்.

இந்திரா உணவக சாப்பாட்டு ருசி நாக்கு மூலமாக வயிற்றை அடைந்து, அது விரல்கள் மூலமாக ஓட்டாக மாறும் என்பது அஷோக் கெலாட்டின் நம்பிக்கை போலும்! 

logo
Kalki Online
kalkionline.com