பழந்தமிழர்களின் மறக்கடிக்கப்பட்ட பாரம்பரிய கலை: துணங்கைக் கூத்து!

சங்ககாலத் தமிழர்களின் போர்க்கள வெற்றிகளையும் வழிபாட்டையும் விளக்கும் உன்னதக் கலை வடிவம்.
துணங்கைக் கூத்து - Thunangai Koothu
துணங்கைக் கூத்து - Thunangai Koothu
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

மிழர்கள் போற்றி வளர்த்த கலைகளில் கூத்தும் ஒன்று. இது இசைக்கலையோடு இணைந்து வளர்ந்த கலையாகும். இந்தக்கலை ஆண்கள், பெண்கள் என இருசாரார்க்கும் பொதுவாக இருந்தது. கூத்தர்கள் மக்களை தங்களுடைய ஆடல் பாடல்களால் மகிழ்வித்தனர்.

மக்களும் சரி, மன்னர்களும் சரி கூத்தர்களை பேணி வளர்த்தனர். மன்னர்கள் முன்பு ஆடி, தங்களுடைய கலை ஆற்றலை வெளிப்படுத்தி பரிசுகளைப் பெற்றனர். சங்க காலத்தில் அனைத்துத் துறைகளிலும் ஆடலும் பாடலும் பரவி இருந்தன.

துணங்கை, குரவை ஆகிய கூத்துக்களை பண்டைத் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆடி வந்துள்ளனர். புறநானூறு, குறுந்தொகை, கலித்தொகை, பதிற்றுப்பத்து, நற்றிணை, சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி ஆகிய தமிழ் இலக்கியங்களில் துணங்கை, குரவை ஆகிய இரு கூத்துகளைப் பற்றிய செய்திகள் உள்ளன. இக் கூத்துகள் அன்றைய மக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் ஆகியவற்றை மேம்படுத்தி உள்ளது.

துணங்கைக் கூத்து என்பது பண்டைய சங்க காலத் தமிழகத்தில் ஆடப்பட்ட ஒரு மிகப் பழமையான ஆடல் வடிவம் அல்லது கூத்துக்கலை ஆகும். இது கைகளை முடக்கி, விலாப்புறத்தில் அதாவது இடுப்பின் இரு பக்கமும் தட்டி, தோள்களை உயர்த்தி ஆடும் ஒரு தனித்துவமான நடன முறையாகும். சங்க இலக்கியங்களான பதிற்றுப்பத்து, குறுந்தொகை, மதுரைக்காஞ்சி மற்றும் புறநானூறு ஆகியவற்றில் இக்கூத்து பற்றிய பல செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மகளிர் ஆடிய துணங்கை:

பண்டைய காலத்தில் இளம் பெண்கள் பலர் ஒன்றாகக் கூடி கைகோர்த்துக்கொண்டு, இசையின் தாளத்திற்கு ஏற்ப இறை வழிபாட்டின் ஒரு பகுதியாக இதனை ஆடினார்கள். பெண்கள் இக்கூத்தை ஆடினாலும் அதனை ஒரு ஆடவர் தொடங்கி வைக்க வேண்டும் என்ற மரபு இருந்தது.

துணங்கைக் கூத்து - Thunangai Koothu
துணங்கைக் கூத்து - Thunangai KoothuImage credit: Gemini

நடனத்தைத் தொடங்கி வைக்கும் ஆடவர், ஆடும் பெண்ணின் கையைப் பிடித்துக் கொடுப்பார். இதற்கு 'தலைக்கை தருதல்' என்று பெயர். சாதாரண மக்கள் முதல் நாட்டின் அரசர்கள் வரை இக்கூத்தில் தலைக்கை தந்து சிறப்பித்துள்ளனர். உதாரணத்திற்கு சேர மன்னனான ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் துணங்கைக் கூத்திற்கு தலைக்கை கொடுத்து ஆடியதை நச்செள்ளையார் என்ற புலவர் பதிற்றுப்பத்தில் பாடியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
ஒரே கூரையின் கீழ் தனித்தனியா? குடும்ப உறவுகளை இணைக்கும் 20 நிமிட அதிசயம்!
துணங்கைக் கூத்து - Thunangai Koothu

குறுந்தொகை மற்றும் மதுரைக்காஞ்சி போன்ற நூல்களின்படி, நெய்தல் நிலப் பகுதிகளில் பரத்தையர் (ஆடல் மகளிர்) தங்களுக்குள் தழுவிக்கொண்டு இக்கூத்தை ஆடியதாகவும் அறியமுடிகிறது.

துணங்கைக் கூத்து மிகப்பழமையான, வீரமும் வழிபாடும் கலந்த வட்டாரக் கலை வடிவமாகும். இக்கூத்தின் முக்கிய அம்சம், நடனம் ஆடுபவர்கள் தங்களது இரு கைகளையும் மடக்கிக்கொண்டு, விலாப்புறத்தில் தட்டி ஓசை எழுப்பி ஆடுவதாகும். கைகளை விலாவில் தட்டி எழுப்பும் ஒலியே இதற்கு முக்கிய இசையாக அமைந்தது.

சங்க இலக்கியங்கள் துணங்கைக் கூத்தை இரு வேறு சூழல்களில் குறிப்பிடுகின்றன. ஒன்று மறத்துணங்கை அதாவது போர்க்களக் கூத்து; மற்றொன்று அகத்துணங்கை அதாவது வழிபாட்டுக் கூத்து. முருகப் பெருமான் சூரபத்மனை வென்ற பிறகு போர்க்களத்தில் துணங்கைக் கூத்து ஆடியதாக இலக்கியங்கள் கூறுகின்றன. புறநானூற்றில், போர்க்களத்தில் வீரர்கள் மட்டுமின்றி பேய்களும் இக்கூத்தை ஆடியதாக 'பேய்த்துறக்கம்' என்ற சூழலில் பாடல்கள் விவரிக்கின்றன.

ஆடவர் ஆடிய துணங்கை / போர்த்துணங்கை:

போர்க்களத்தில் எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெற்ற பிறகு, அரசர்களும் அவர்களது வீரர்களும் இணைந்து ஆடிய வெற்றிக் கூத்து இது என்று கூறப்படுகிறது. இதனை 'வென்றாடு துணங்கை' என்றும் அழைப்பார்கள்.

ஆடும் முறை:

வீரர்கள் தங்களது வலிமையான தோள்களை உயர்த்தி, கைகளை விலாவில் தட்டி வீராவேசத்துடன் இக்கூத்தை ஆடுவார்கள்.

சேர மன்னர்களான ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மற்றும் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஆகியோர் போர்க்களத்தில் வீரர்களுடன் இணைந்து துணங்கைக் கூத்தாடியதாக பதிற்றுப்பத்து இலக்கியம் விரிவாக எடுத்துரைக்கிறது. துணங்கை என்பது மகிழ்ச்சி, வழிபாடு மற்றும் போர்க்கள வீரம் ஆகியவற்றை வெளிப்படுத்த முடக்கிய கைகளால் விலாவில் புடைத்து, தோளோச்சி ஆடிய சங்க காலத் தமிழர்களின் பாரம்பரியக் கலையாகும்.

துணங்கைக் கூத்தின் சிறப்புகள்:

இக்கூத்தில் பெண்களே பெரும்பாலும் பங்கேற்று ஆடினர் என்பதைப் பழந்தமிழ் இலக்கியச் சான்றுகள் காட்டுகின்றன. குறிப்பாக விழா காலங்களிலும், இறைவழிபாட்டின் போதும், போர்க்களச் சூழல்களிலும் மற்றும் போர்க்கள வெற்றியின் பொழுதும் இக்கூத்து நிகழ்த்தப்பட்டதாக இலக்கியச் சான்றுகள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
எறும்புகள் வீட்டை முற்றுகையிடுவது ஏன்? தடுக்கும் எளிய வழிகள்!
துணங்கைக் கூத்து - Thunangai Koothu
logo
Kalki Online
kalkionline.com