பாடல்கள் பாடி வழிபடும் 'பாது' திருவிழா! யார் இந்த 'பாது'?

Bhadu festival
Bhadu festival
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

பாது திருவிழா (Bhadu Festival) என்பது மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு வங்காளத்தில் கொண்டாடப்படும் ஒரு சமூக விழாவாகும். வங்காள நாட்காட்டியில் ஐந்தாவது மாதமான பத்ராவின் முதல் நாளிலிருந்து இந்தத் திருவிழா தொடங்கி, அம்மாதத்தின் இறுதி நாள் வரை நடைபெறுகிறது. இத்திருவிழா நடைபெறுவதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. வாங்க, அந்தக் கதையை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

லாரா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் மோரல். வத்ராமா என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தையை, மோரலும் அவரது மனைவியும் பத்ரேஸ்வரி (பத்ராவதி) என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். அவளைச் செல்லமாக, பாது என்ற பெயர் கொண்டும் அழைத்தனர்.

பத்ரேஸ்வரியைப் பற்றிக் கேள்விப்பட்ட காசிபூர் (தற்போதைய புருலியா மாவட்டத்தில் உள்ள ஊர்) மன்னர் நீலமணி சிங், அவளைத் தத்தெடுத்து வளர்க்க விரும்பினார். 

ஆனால் அவள் அரசருடன் சென்று இருக்க விரும்பவில்லை. அவளது வளர்ப்பு பெற்றோருக்கும் அவளைத் தத்து கொடுக்க விருப்பமில்லை. இருப்பினும், அரசன் அவளை, இளவரசி என்று ஊர் முழுவதும் அறிவித்தான். பதினாறு வயதான போது, பாது பக்கத்துக் கிராமத்திலுள்ள ஒரு மருத்துவரின் மகனான அஞ்சன் என்பவரைக் காதலித்தாள். அதனை ஏற்காத மன்னன், அஞ்சனை ஒரு அடையாளம் தெரியாத இடத்தில் சிறையில் அடைத்தான்.

Bhadu festival
Bhadu festival

பாது தனது இரண்டு தோழர்களுடன் ராயம் முழுவதும் பயணம் செய்து சிறைச்சாலைகளுக்கு அருகில் அவளது காதலைப் பற்றி பாடினாள். அஞ்சன், எப்படியும் தனது குரலைக் கேட்பார் என்று நம்பி பல்வேறு சோகப் பாடல்களை பாடினாள். இவ்வகை பாதுவின் பாடல்கள் அனைத்தும் 'ராதா பாவம்' என்று கூறப்படுகிறது.

ஒரு நாள், அவளது உள்ளம் உருகும் பாடலைக் கேட்ட மன்னனின் உள்ளமும் கரைந்தது. அவன் அஞ்சனை விடுவித்தான். மேலும், அஞ்சன் அவளைத் திருமணம் செய்து கொள்வதற்கும் ஒப்புக் கொண்டான். 

ஆனால், எதிர்பாராத விதமாக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வரும் வழியில் அஞ்சன் கொள்ளையர்களால் கொல்லப்பட்டான். தனது காதலன் இறந்ததை அறிந்து வருத்தமடைந்த பாது, யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினாள். அவள் மறைந்து போய் விட்டதாகக் கருதப்படுகிறது. 

அதன் பிறகு, இளவரசி பாதுவைத் தெய்வமாக வழிபடத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாகவே, இந்த ‘பாது திருவிழா’ நடத்தப்பெறுகிறது. இளவரசி பத்ரேஸ்வரி லட்சுமி தேவியின் உருவகமாக கருதப்படுகிறாள்.

இதையும் படியுங்கள்:
தமிழர் கட்டடக்கலை சிறப்பைக் கூறும் தூங்கானை மாடக் கோயில்!
Bhadu festival

மேற்கு வங்காளத்தின் புருலியா, பாங்குரா, பிர்பூம் மற்றும் பர்தாமான் மற்றும் ஜார்கண்டின் ராஞ்சி மற்றும் ஹசாரிபாக் போன்ற மாவட்டங்களில் விமரிசையாக இந்த பாது திருவிழா பெரும்பாலும் கொண்டாடப்படுகிறது.

வங்காள நாட்காட்டியின் ஐந்தாவது மாதமான பத்ராவின் முதல் நாளில் அவளது உருவத்தை உருவாக்கி அதன் முன் வழிபாடு செய்கின்றனர். அந்த மாதம் முழுவதும், பாதுவின் உருவச் சிலை முன்பு பாடி ஆடுவார்கள். பத்ராவின் கடைசி நாளில், அந்த உருவச் சிலையை ஆற்றங்கரைக்கு எடுத்துச் சென்று, அந்த உருவச் சிலையைத் தண்ணீரில் கரைப்பார்கள். 

இந்த ஒரு மாதத் திருவிழாவில் பல தொழில்முறை பாடகர்கள் மட்டுமின்றி, பாடல் பாட ஆர்வம் கொண்ட அனைவரும் அங்கு வந்து பாடல்களைப் பாடி, வழிபாடு செய்ய முடியும். திருமணத்தை மையமாகக் கொண்டுள்ள பாடல்களை பாடுவது இத்திருவிழாவின் முக்கியச் சடங்காக இருக்கிறது. இத்திருவிழாவின் போது, இங்கு கண்காட்சிகள் மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் நடத்தப் படுகின்றன.

logo
Kalki Online
kalkionline.com