இந்த 7 விஷயங்கள் இப்போதான் நடக்குதுனு நினைச்சீங்களா… பழங்காலத்துலயும் இதே நிலைமைதான்!

modern problems that actually existed in ancient times
modern problems that actually existed in ancient times
Published on

இன்றைய காலகட்டத்தில் நாம் சந்திக்கும் பல பிரச்னைகளை பார்த்து இதுக்கெல்லாம் இந்த நவீன உலகம்தான் காரணம் என்று நாம் அடிக்கடி புலம்புவது வழக்கம். டிராபிக் நெரிசல், போலி செய்திகள் என பல விஷயங்களை நாம் புதுசு என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜத்தில் நாம் இப்போது சந்திக்கும் பல தலைவலிகளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் அனுபவித்திருக்கிறார்கள். 

காலத்தை தாண்டிய 7 பிரச்னைகள்!

1. போக்குவரத்து நெரிசல்: இப்போது நாம் ரோட்டில் காரில் செல்லும்போது படும் டிராபிக் அவஸ்தையை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ரோமானியர்கள் தங்கள் குதிரை வண்டிகளில் அனுபவித்தார்கள். ஜூலியஸ் சீசர் காலத்திலேயே ரோமில் பகல் நேரத்தில் வண்டிகள் செல்ல தடை விதிக்கும் அளவுக்கு டிராபிக் ஜாம் ஒரு பெரிய பிரச்னையாக இருந்துள்ளது.

2. துரித உணவகங்கள்: இப்போது நாம் ஆர்டர் செய்து சாப்பிடும் ஃபாஸ்ட் புட் கலாச்சாரம் பிற்காலத்தில்தான் வந்தது என நினைக்க வேண்டாம். பாம்பெய் நகரத்தின் இடிபாடுகளை தோண்டிப் பார்த்ததில் அங்கே தெருவுக்கு தெரு சூடான உணவுகளை உடனே வாங்கி சாப்பிடும் பல கடைகள் இருந்ததற்கான ஆதாரங்கள் ஏராளமாக சிக்கியுள்ளன.

3. போலி செய்திகள் மற்றும் வதந்திகள்: இன்று வாட்ஸ்அப்பில் பரவும் ஃபேக் நியூஸ்களைப் பார்த்து நாம் அலறிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் பழங்கால எகிப்து மற்றும் ரோமானிய அரசர்கள் தங்களின் அரசியல் எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே பல பொய்க் கதைகளையும் வதந்திகளையும் மக்கள் மத்தியில் வேண்டுமென்றே பரப்பி விட்டார்கள்.

4. சுற்றுச்சூழல் மாசடைதல்: இப்போதுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்சனை,  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. ரோமானியர்கள் அதிகமாக மரங்களை வெட்டி எரித்ததாலும், சுரங்கங்களில் வேலை பார்த்ததாலும் அப்போதே காற்றில் பெரிய அளவில் நச்சு கலந்தது.

இதையும் படியுங்கள்:
வாழைப்பழத்தில் கதிரியக்கம் உள்ளதா? பழங்கள் பற்றிய அதிர்ச்சிகரமான 8 உண்மைகள்!
modern problems that actually existed in ancient times

5. இளைஞர்களைப் பற்றிய குறைபாடு: இன்றைய இளைஞர்கள் எதற்கும் லாயக்கில்லை, மொபைலையே பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று இப்போது நாம் சொல்லும் அதே டயலாக்கைத்தான் சாக்ரடீஸ் போன்ற பழங்கால அறிஞர்களும் அப்போதைய இளைஞர்களைப் பார்த்து சொல்லியிருக்கிறார்கள். பெரியவர்களை மதிக்க மாட்டார்கள் என்று பல ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துள்ளார்கள்.

6. பொது சுவர்களில் கிறுக்குவது: இப்போது நாம் பொது சுவர்களில் பார்க்கும் கண்ட கண்ட கிறுக்கல்களும் மீம்ஸ்களும் பழங்கால பாம்பெய் நகரத்து சுவர்களில் அப்போதே வரையப்பட்டிருந்தன. யார் யாரை காதலிக்கிறார்கள், எந்த கடையில் சாப்பாடு நன்றாக இருக்கும் என்று சுவரில் கிறுக்கி வைக்கும் பழக்கம் அப்போதே இருந்துள்ளது.

7. வரி கட்டாமல் ஏமாற்றுவது: அரசாங்கத்திற்கு சரியாக வரி கட்டாமல் தப்பிக்க இன்றைய கோடீஸ்வரர்கள் செய்யும் அதே தந்திரங்களை பழங்காலத்து மக்களும் செய்திருக்கிறார்கள். தங்கள் வீட்டில் இருக்கும் தங்கம் மற்றும் பொருட்களை கணக்கில் காட்டாமல் மண்ணுக்குள் புதைத்து வைத்து அதிகாரிகளை ஏமாற்றி இருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; கதைகளற்றுக் கடந்து போகும் பால்ய காலங்கள்!
modern problems that actually existed in ancient times

காலங்கள் மாறினாலும், மனிதர்களின் அடிப்படை குணங்களும் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளும் பெரிய அளவில் மாறவே இல்லை என்பதுதான் வரலாறு நமக்கு சொல்லும் மிகச் சிறந்த பாடம். டெக்னாலஜி மட்டும்தான் இப்போது அசுர வளர்ச்சி அடைந்துள்ளது, ஆனால் மனித மனங்களின் செயல்பாடுகள் அந்த காலத்திலேயும் சரி இந்த காலத்திலேயும் சரி ஒரே மாதிரிதான் இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com