திருவிதாங்கூர் பாரம்பரியம்: நாகர்கோவிலின் 150 ஆண்டு கால பசுமை மண் வீடுகளின் ரகசியம்!

Traditional Mud Houses - பாரம்பரிய மண் வீடுகள்
Traditional Mud Houses - பாரம்பரிய மண் வீடுகள்AI Image
Updated on

து கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளின் இணையான வெவ்வேறு கலாச்சாரங்கள் சங்கமிக்கும் ஒரு இடமாக உள்ளது. வரலாற்றில் 'திருவிதாங்கூர்' சமஸ்தானத்தின் களஞ்சியம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர்தான் நாகர்கோவில்.

தமிழ்நாட்டில் இருப்பினும் ஊரின் ஒவ்வொரு அம்சத்திலும் பருவநிலை, தாவரம் , சடங்குகள், உடை, உணவு, பேச்சு வழக்கு மற்றும் மிக முக்கியமாக இங்குள்ள கட்டிடக்கலையிலும் கூட கேரளா நாட்டின் தாக்கத்தை உணரமுடியும்.

பழமை வாய்ந்த கட்டிடக்கலை

நாகர்கோவிலில் உள்ள சில பாரம்பரிய மண் வீடுகள் வீடுகள் தொன்மையான கட்டிடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். அதன் இயற்கை மூலப்பொருட்கள், சிறப்பான வெப்ப காப்பு, மழை நீரை தாங்கும் கூரைகள், மற்றும் பரண்அமைப்பு ஆகியவை இவற்றின் முக்கிய சிறப்புகள் ஆகும்.

இங்கு 100 ல் இருந்து 150 வருடம் பழமையான வெள்ளையடிக் கப்பட்ட இரண்டு அடுக்கு மாடி வீடுகள் இன்றளவும் வலுவாக நிற்பதை காணமுடிகிறது. இவ்வூரில்உள்ள எல்லாக் கிராமத்தையும் போன்று பறக்கைஎனப்படும் கிராமமும் அதன் செழிப்பான கட்டிடக்கலையினை உரக்கச்சொல்கிறது.

இந்த கிராமம் முழுவதும் ஒரு தனித்துவமான திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலையினை காட்சிப்படுத்துகிறது. அங்குள்ள சூழலுக்கும் வசித்த சமூகத்திற்கும் உகந்த ஒரு வாழ்க்கை முறையினையே முன்னோர்கள் எப்போதும் பின்பற்றினர். இவ்வகையில் இவ்வீடுகள் உண்மையில் அர்த்தம் உள்ள பசுமை வீடுகள்தான் இரண்டு மணி ஆகும்.

திட்டமிட்டு செய்த கட்டிடக்கலை

ஊரின் பிரதானமான வீதியில் தேர் செல்லும் வகையில் தேவையான அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிற வீதிகளும் போதுமான அகலம் கொண்டதாக உள்ளது.

இவ்வீதிகளின் இருபுறமும் உள்ள மண் வீடுகள் அவற்றின் திண்ணை, நம்மை வரவேற்கும். திண்ணை எனப்படுவது நாம் அனைவரும் அறிந்ததுதான். வீட்டு வாயிலில் அமைக்கப்படும் தாழ்வாரம் போன்ற ஒரு பகுதிதான் இது.

மேலும் இங்குள்ள வீடுகள் இரண்டு அடுக்குமாடி வீடுகளாக முதல் அடுக்கில் 'பரண்' என்னும் ஒரு அறையைப் பெற்றிருக்கிறது. இங்கு வசித்தவர்கள் பிரதானமாக விவசாய சமூகமாக இருந்தனர். தானியங்களை சேமிக்கவும் இந்தப் பரண் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் கனமான பருவமழை பொழிவதால் இதன் மேல் செங்குத்தான சாய்வு ஓட்டு கூரை அமைக்கப்பட்டு இருக்கிறது. இங்குள்ளபெரும்பாலான வீடுகள் இவ்வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன பரப்பளவில் மட்டுமே வேறுபடுகின்றன.

பெரும்பாலும் இப்பகுதியில் உள்ள வீடுகள் அவற்றின் திட்டமிடலிலும் கட்டுமான முறையிலும், ஒரு பொதுவான நடையை கொண்டுள்ளன. மட்டுமே மாறுபடும்.

Traditional Mud Houses - பாரம்பரிய மண் வீடுகள்
Traditional Mud Houses - பாரம்பரிய மண் வீடுகள்AI Image

மண்ணாலான அடித்தளம்

வசதி இல்லாதவரின் வீடு எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் ஒரு நிலையான வசிப்பிடத்திற்கான அடிப்படைத் தேவைகளை மட்டுமே கொண்டு கட்டப்பட்டது. காப் (Cop)அடித்தளம் வெறும் மண்ணை கொண்டு குறைந்த விலையில் வலுவாக அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூரில் கிடைக்கப்பெற்ற செம்மண் இதற்கு பயன்படுத்தப்பட்டது.

தாவர இடுபொருட்களை கொண்டு நிலைப்படுத்தப்பட்ட செம்மண்ணை சிறு பந்துகளாக வைத்து சுவர் எழுப்ப வைத்து சுவர் எழுப்புவதைப் போன்றே அடித்தளம் அமைக்கப்படும்.

ஆனால் வசதி படைத்தவர்கள் கல் கட்டுமானம் அல்லது கற்கள், மணல் / ஜல்லிக்கட்டு கொண்டு வீட்டின் அடித்தளம் அமைத்துள்ளனர்.

மேலும் கரையான்கள் மற்றும் ஈரப்பதம் அண்டாமல் அடித்தளத்தை காக்க பொதுவாக பயன்படுத்தப்பட்ட முறையில் ஒன்றுதான். 2 'அடர்த்தியான மண் தளத்தைவிட ஒரு அதிகமாக அகலத்தின் கொண்ட அமைக்கப்படும் மணல் படுக்கை இல்லை. இது வடிகால் போன்று செயல்பட்டு நீர் மற்றும் கரையான்கள் அண்டாமல் பாதுகாக்கிறது.

இதையும் படியுங்கள்:
மூர் மார்க்கெட் முதல் பட்டாணி சுண்டல் வரை... மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்!
Traditional Mud Houses - பாரம்பரிய மண் வீடுகள்

இப்பகுதியில் மண் கலவையில் நார்ப்பொருள்கள் சேர்ப்பதில்லை. மாறாத சரளை கற்கள் மிகுந்த மண்ணையே தேர்ந்தெடுத்தனர். சில சமயங்களில் மண் சுவற்றில் கூடுதல்வலிமைக்காக கற்கள் மற்றும் ஓடுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதை காணமுடியும்.

இப்பகுதியில் பின்பற்றப்பட்ட கட்டுமான முறையில் அடித்தளம் சுவர் மற்றும் கூரை முறைகளிலும் கூட சுண்ணாம்பு அரிதாகவே பயன்படுத்தப்பட்டதை காணலாம்.

இத்தகைய தொன்மையான கட்டிடக்கலையில் நாகர்கோவிலில் உள்ள மண் வீடுகள் சிறப்பானதாக இன்றளவும் பார்த்தால் இதனை பறை சாற்றுகிறது எனலாம்.

logo
Kalki Online
kalkionline.com