

நிச்சயதார்த்தம், முகூர்த்தம் எனத் திருமணக் கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், நலங்கு அல்லது Haldi என்று அழைக்கப்படும் அந்த மஞ்சள் சடங்குதான் ஒரு பெண்ணை உணர்வுப்பூர்வமாகத் திருமணத்திற்குத் தயார்படுத்துகிறது. மேக்கப், ஆடை அலங்காரம் என திருமண ஓட்டத்திற்கு நடுவே, மஞ்சள் பூசும் இந்தத் தருணம் ஒரு மணப்பெண்ணை அமைதி கொள்ளச் செய்கிறது.
மஞ்சள் பூசுவது என்பது வெறும் சடங்கு அல்ல; அது ஒரு பெண்ணின் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் உன்னத நிகழ்வு.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியப் பண்பாட்டில் மஞ்சள் ஒரு புனிதப் பொருளாகக் கருதப்படுகிறது. அதர்வண வேதத்திலும், ஆயுர்வேதத்திலும் மஞ்சளுக்குத் தனி இடம் உண்டு. திருமணம் என்ற புதிய அத்தியாயத்திற்குள் நுழையும் முன், ஒரு பெண் தனது பழைய நினைவுகளையும், கவலைகளையும் களைந்துவிட்டுத் தூய்மையடைய வேண்டும் என்பதையே இது குறிக்கிறது.
மஞ்சளின் அந்தத் தங்கம் போன்ற நிறம், 'பழையனவற்றை விடு; புதிய வாழ்விற்கு முழுமையாகத் தயாராகு' என எடுத்துரைக்கிறது.
நலங்கு சடங்கில் உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து மணப்பெண்ணுக்கு மஞ்சள் பூசுவார்கள். அக்காக்கள், தங்கைகள், அத்தைகள் என அனைவரும் அன்போடு அவள் கைகளிலும், முகத்திலும் மஞ்சளைத் தடவுவார்கள். இது ஒரு பாதுகாப்பு அரண்.
இந்து தர்மத்தின்படி, தொடுதல் மற்றும் மந்திரங்கள் மூலம் நேர்மறை ஆற்றல் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குக் கடத்தப்படுகிறது.
"நாங்கள் உன்னோடு இருக்கிறோம்" என்ற வாக்குறுதியை அந்த உறவுகளின் கரங்கள் மணப்பெண்ணுக்கு வழங்குவதை இது குறிக்கிறது.
மஞ்சள் பூசும் நிகழ்வு ஒருபோதும் நேர்த்தியாக இருக்காது. ஆடைகளில் மஞ்சள் கரைபடும், முகம் முழுவதும் மஞ்சள் பூசப்படும். இதுதான் இந்தச் சடங்கின் சாராம்சம்.
வாழ்க்கை எப்போதும் புகைப்படத்திற்குப் போஸ் கொடுப்பதுபோல அழகாக இருக்காது; சில நேரங்களில் அது குழப்பமாகவும், கரைகள் படிந்தும் இருக்கும். அந்தச் சவால்களை எதிர்கொள்ளப் பழகிக்கொள்வதற்கான ஒரு பயிற்சியே இந்த சடங்கு.
பிரம்மாண்டமான திருமண மண்டபங்களுக்கு நடுவே, மஞ்சள் சடங்கின் போது ஒரு பெண் தரையில் அமர வைக்கப்படுகிறாள். இது அவளது எளிமையையும், பணிவையும் பறைசாற்றுகிறது.
பூமித்தாய்க்கு அருகில் அமர்ந்து இந்தச் சடங்கைச் செய்வது, ஒரு பெண் தனது வேர்களை மறக்கக் கூடாது என்பதையும், திருமண வாழ்வு என்பது பொறுமையும் நிதானமும் கொண்டது என்பதையும் நினைவூட்டுகிறது.
மஞ்சள் சடங்கு என்பது மணமகனை ஈர்ப்பதற்காகச் செய்யப்படும் ஒன்று எனப் பலரும் தவறாக நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. இது பெண்ணுக்கான சடங்கு.
மஞ்சளை ஒரு பெண்ணின் உள்ளொளியைத் தூண்டும் பொருளாகப் பார்க்கின்றன. அவள் தன்னைத்தானே உணர்ந்து, தெளிவோடும், தைரியத்தோடும் புதிய வீட்டிற்குள் நுழைய இது ஒரு தன்னம்பிக்கைச் சடங்காக அமைகிறது.
இன்று நாம் இதனை ஒரு 'ப்ரீ-வெடிங் ஃபங்ஷன்' என்று ஒரு கடமையாகச் செய்கிறோம். ஆனால், இது ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான தருணம். எதிர்பார்ப்புகள், முகமூடிகள் எருமின்றி, தனது அன்புக்குரியவர்கள் நடுவே ஒரு பெண் தன்னை முழுமையாக ஒப்படைக்கும் புனிதமான வினாடி இது.