பொங்கல் பண்டிகைக்கு வீட்டின் கூரையில் பூ காப்பு: காப்பு கட்டுதலில் மறைந்திருக்கும் மருத்துவ பாதுகாப்பு!

கிராமங்களில் தை திருநாளை வரவேற்க வீட்டின் கூரையில் பூ காப்பு கட்டிய பிறகு பொங்கல் கொண்டாட்டம் தொடங்குகிறது.
பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகைwww.malaimurasu.com
Published on

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதால் தான் பொங்கல் விழா கொண்டாட்டம் மூன்று நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. இதற்கான தொடக்கமே காப்பு கட்டும் நிகழ்ச்சி.

மார்கழி கடைசியில் பழையதை போக்க போகிப் பண்டிகையும், பின் புதியவை புகுவதற்கு தை மாதமும் உதவுகிறது.

தை திருநாளை வரவேற்க வீட்டின் கூரையில் பூ காப்பு கட்டிய பிறகு பொங்கல் கொண்டாட்டம் தொடங்குகிறது.

கூரைப்பூவின் வேறு பெயர்கள் :

சிறு பீளை, பூளைப் பூ, தேங்காய் பூக் கீரை, பொங்கப்பூ, சிறுகண்பீளை, கற்பேதி , பாஷாண பேதி, பீளை சாறி மற்றும் கண் பீளை முதலியன ஆகும்

காப்பு கட்டுவதின் நோக்கம் :

ஆயுத பூஜைக்கு பழம் வாங்குவதுபோல பொங்கல் அன்று கூரைப்பூ வாங்கி வாசலில் வைக்கின்றனர். எதற்காக அதை வைக்கிறோம்? என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை ?அதன் பயனறிந்து கூரைப் பூ பயன்படுத்தி பொங்கல் கொண்டாடுவதும் இன்றும் கிராமங்களில் தான் நடக்கிறது.

அதன் பயன்பாடு மகத்துவத்தை அவர்கள் தான் நன்குணர்ந்து உள்ளனர். அப்படி அதில் என்ன இருக்கு என்கிறீர்களா? வாங்க அது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
நாடு போற்றும் பொங்கல் திருநாள்!
பொங்கல் பண்டிகை

கூரைப் பூவில் ஆறு விதமான தாவரங்கள் உள்ளன .

அதன் ஒவ்வொன்றுக்கும் பல்வேறு குணங்கள் உண்டு.

மா இலை - காற்று மண்டலத்தில் ஆக்ஸிஜன் செறிவை அதிகப்படுத்தி காற்றை சுத்தப்படுத்தும்.

கூரை பூ என்ற கண்ணுப் பீளைப் பூ - இது பூச்சிகள் வருவதை தடுக்கும். சீரான சிறுநீர் போக்கை ஏற்படுத்தும். விஷம் முறிவுக்கு உதவும்.

வேப்பிலை - நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது கொசுக்களை தடுக்கும்.

ஆவாரம் பூ - ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ ?என்ற பழமொழிக்கேற்ப, ஆவாரம் பூ சர்க்கரை, தோல் வியாதிகளை தடுக்கும்.

தும்பைச் செடி - மார்கழி பனி முடிந்து கோடை துவங்கும் நேரத்தில் ஏற்படும் காலநிலை பிணிகளை குணமாக்கும்.

பிரண்டை செடி - வயிற்றுப் புண்ணை குணமாக்கும்.

இந்த ஆறு பொருட்களையும் மஞ்சள் துணியில் கட்டி வீட்டின் முன் தொங்கவிட்டால் மங்கலம், பாதுகாப்பு, ஆரோக்கியம் கிடைக்கும் என முன்னோர்கள் கூறிச் சென்று உள்ளனர்.

கிராமங்களில் அம்மை, அக்கி, மஞ்சள் காமாலை நோய்களிலிருந்து பாதுகாக்க கூரைப் பூக்கைளை இன்றும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆங்கில மருந்துகளுக்கு அடங்காமல் நம்மை ஆட்டி வைக்கும் நோய்கள் வந்த பிறகுதான், பாட்டி வைத்தியம், நாட்டு வைத்தியத்தை தேடிக் கொண்டிருக்கிறோம். நாமே தொலைத்து நாமே தேடிக் கொண்டிருக்கும் மருத்துவ புத்தகங்களில் கூரைப்பூவின் பக்கமும் ஒன்று.

நம் பாரம்பரியத்தை பாதுகாக்கும் கடமையை உணர்ந்து பொங்கலன்று வாசலில் கட்டி நோய்கள் வராமல் தடுக்க பயன்படுத்துங்கள்.

முன்னோர்களின் அறிவார்ந்த செயலாகத்தான் இது பார்க்கப்படுகிறது. தமிழர்களாகிய நாம் இயற்கை சார்ந்த வாழ்வியலை பின்பற்றியே வந்துள்ளோம். மருத்துவ வளர்ச்சி அடையாத காலகட்டத்தில் இயற்கை மூலிகைகள் மூலமாகத்தான் நமக்கு ஏற்பட்ட நோய்களிலிருந்து விடுபட்டுள்ளோம்.

பல்வேறு முக்கிய அம்சங்களைக் கொண்ட பொங்கல் பண்டிகையில் குறைப்பு கொத்து என்பது மிகவும் பிரசித்தம். பொங்கல் திருநாள் அன்று கிராமங்களில் வீடு தோறும் கூரையில், தலைவாசலில் கூரைப்பூ கொத்துசொருகி வைப்பார்கள். இது காலம் காலமாக இருந்து வரும் வழக்கம்.

தை மாதத்தில் வரும் கிருமிகளை விரட்டவும், நோய் தொற்றுகளை தடுக்கவும், உடலுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கவும் இது உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
தைப்பொங்கல்…!
பொங்கல் பண்டிகை

தைப் பொங்கல் நாளில் இதனை வாசலில் கட்டி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்ய கொண்டாடுங்கள்.

அனைவருக்கும் தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com