ஒளி நிழலில் மறைந்த மாயை: ஃபேண்டம் சித்திரக்கலையின் அதிசயம்!

Phantom art
Phantom art
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on

ஃபேண்டம் சித்திரக்கலை (Phantom Art) என்றால் கண்களுக்கு நேரடியாகப் புலப்படாமல், பார்வை கோணம், ஒளி, நிழல் அல்லது சிறப்பான தொழில்நுட்பம் மூலம் வெளிப்படும் ஒரு விதமான மாயைச் சித்திரக்கலை ஆகும். இதை “மாயை ஓவியம்” (Illusion art) அல்லது “பேய் ஓவியம்” என்றும் சிலர் குறிப்பிடுவர்.

ஃபேண்டம் சித்திரக்கலையின் முக்கிய அம்சங்கள்

1. மறைபடம் (Hidden Image)

ஓவியத்தில் முதல் பார்வையில் ஒரு வடிவம் மட்டுமே தெரியும். ஆனால், மற்றொரு கோணத்தில் பார்க்கும்போது அல்லது ஒளி விழும் போது வேறு ஒரு உருவம் தோன்றும்.

2. ஒளி – நிழல் விளையாட்டு

சில ஓவியர்கள் ஒளி அல்லது நிழலின் பிரதிபலிப்பை பயன்படுத்தி, சுவரில் அல்லது தரையில் மறைந்திருக்கும் உருவங்களை வெளிக்கொணர்கிறார்கள்.

3. தொழில்நுட்பம் (Technique)

அனாமார்பிக் கலை (Anamorphic art), 3D சித்திரம், UV light painting போன்ற முறைகள் இதில் பயன்படுத்தப் படுகின்றன.

4. அர்த்தமுள்ள மாயை

இது வெறும் பார்வை மாயை அல்ல. சில கலைஞர்கள் இதன் மூலம் உணர்ச்சி, சமூகச் செய்தி, அல்லது மறைபொருள் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறார்கள். உதாரணமாக, சுவரில் வெறும் புள்ளிகள் போலத் தோன்றும் ஓவியம். ஆனால், விளக்கு ஒளி விழும் போது மனித முகமாக மாறுவது. மற்றும் தரையில் வரையப்பட்ட 3D ஓவியம், தூரத்தில் இருந்து பார்க்கும்போது பள்ளம் அல்லது பாலம் போல தோன்றுவது. ஃபேண்டம் சித்திரக்கலை என்பது கண்களையும், கற்பனையையும் ஏமாற்றும் அழகிய கலை வடிவம்.

ஃபேண்டம் சித்திரக்கலையின் வரலாற்றுப் பின்னணி:

1. பண்டைய காலம் (Ancient Period)

கிரேக்கக் கலைஞர் அபெல்லீஸ் (Apelles) மற்றும் சியூசிஸ் (Zeuxis) போன்றோர் கிமு 4ஆம் நூற்றாண்டில் மாயை உருவாக்கும் ஓவியங்கள் வரைந்தனர். உதாரணமாக திரையில் திராட்சைப் பழங்களை வரைந்தபோது பறவைகள் வந்து தின்ன முயன்றதாக சொல்லப்படுகிறது. இது பார்வை மாயை (Optical Illusion) கலைக்கான முதல் சான்றாகக் கருதப்படுகிறது.

2. ரெனசான்ஸ் காலம் (Renaissance, 14–17ம் நூற்றாண்டு)

இத்தாலிய கலைஞர்கள் லியோனார்டோ டா வின்சி, மிக்கேலாஞ்சலோ, அன்ட்ரியா பொஸ்ஸோ ஆகியோர் perspective மற்றும் light-shadow தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மூவாயிரம் (3D) மாயைச் சித்திரங்கள் வரைந்தனர். இவர்களின் வேலைகள் ஃபேண்டம் கலைக்கான அடிப்படையாக அமைந்தது.

3. நவீன காலம் (Modern Era)

20ஆம் நூற்றாண்டில் சால்வடோர் டாலி (Salvador Dalí) போன்ற சுரீயலிஸ்ட் (Surrealist) கலைஞர்கள் பார்வை மாயையை அடிப்படையாகக் கொண்ட “பேய் போன்ற உருவங்கள்” வரைந்தனர். இதே நேரத்தில், அனாமார்பிக் கலை (Anamorphic Art) என்ற வடிவம் பிரபலமானது. இதுவே இன்றைய Phantom Artக்கு நேரடியான வழி.

இதையும் படியுங்கள்:
ஒரே இரவில் எழுதப்பட்ட கோடெக்ஸ் கிகாஸ் (Devils Bible) மீதான மர்மம்..!
Phantom art

4. இன்றைய காலம் (Contemporary Phantom Artists)

சில நவீன கால கலைஞர்கள் “Phantom Art” என்ற பெயரில் கலைப் பணிகளை செய்கிறார்கள். Jonty Hurwitz (South African artist): சிறிய அளவிலான அனாமார்பிக் சிற்பங்களுக்காக பிரபலமானவர். Felice Varini (Swiss artist): சுவரில் வரையப்பட்ட புள்ளிகள், கோடுகள் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பார்த்தாலே ஒரு முழுமையான வடிவம் தோன்றும்.

இதையும் படியுங்கள்:
உலகம் அழியும்போதெல்லாம் தோன்றிய மர்மப் பெட்டி! - அது என்ன, யார் வைத்தது?
Phantom art

Shigeo Fukuda (Japan): நிழல் மூலம் உருவங்களை காட்டும் “Shadow Sculpture” கலைக்காக பிரபலமானவர். இதுவும் ஃபேண்டம் கலை வடிவம். ஃபேண்டம் சித்திரக்கலை ஒரே ஒருவரின் கண்டுபிடிப்பு அல்ல. அது பண்டைய மாயை ஓவியங்களில் இருந்து வளர்ந்து, ரெனசான்ஸ் கலைஞர்களின் பார்வை நுணுக்கங்களையும், நவீன தொழில்நுட்ப கலைஞர்களின் சிந்தனைகளையும் இணைத்துக் கொண்ட ஒரு நவீன கலை வடிவம் ஆகும்.

logo
Kalki Online
kalkionline.com