2025 ஆண்டின் மனதைத் தொட்ட சிறந்த 5 படைப்புகள்... ஒரு பார்வை!

2025-ம் ஆண்டில் முதல் ஐந்து வரிசையில் பரிசு பெற்ற புத்தகங்களையும் அதை எழுதிய எழுத்தாளர்களை பற்றியும் பார்க்கலாமா..
Best Books of 2025
Best Books of 2025

புத்தகம் எழுதுவது அத்தனை சுலபமான விஷயமில்லை என்பது நம் எல்லோருக்குமே தெரியும். எழுத்தாளர்கள், அவரவருடைய சூழ்நிலைக்கேற்றவாறும் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையிலும் தான் தங்களுடைய கற்பனைகளையும் நிஜத்தையும் புத்தகமாக எழுதுகிறார்கள். எல்லா எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களும் மக்களுக்கு பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு சில பேருடைய எழுத்துக்கள் மக்களின் மனதில் அழியாத படிக்கு படிந்து விடும். இன்னும் சில பேருடைய எழுத்துக்கள் எத்தனையோ பேரின் வாழ்க்கையை மாற்றி அமைத்திருக்கிறது. அந்த வகையில் 2025 ஆண்டிற்கான சிறந்த 5 புத்தங்களையும் அதை எழுதிய எழுத்தாளர்களையும் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்..

1. பானு முஷ்டாக் (தி ஹார்ட் லேம்ப்):

Banu mushtaq
Banu mushtaq

பானு முஷ்டாக் தன்னுடைய மனதைத் தொடும் சிறுகதைத் தொகுப்பின் மூலம் இலக்கிய உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் தி ஹார்ட் லாம்ப் என்ற சிறுகதை தொகுப்பு சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் சிறுகதை தொகுப்பாகும்.

மேலும் இந்த தொகுப்பானது கன்னடத்தில் எழுதப்பட்டு வரலாற்றில் உலக அளவில் பரிசு பெற்ற முதல் படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. தீபா பாஸ்தி அவர்கள் இந்த படைப்பை மொழி பெயர்த்துள்ளார். இதில் உள்ள அனைத்து கதைகளும் (12 ) தெற்கிந்தியாவில் உள்ள பெண்களின் வாழ்க்கையைப் பற்றிய நுண்ணறிவை எடுத்து காட்டுகிறது. அவர் நேரில் கண்ட மற்றும் அனுபவித்த தப்பான எண்ணங்கள், முரண்பாடுகள் மற்றும் சோதனைகளை இந்த கதைகள் படம் பிடித்து காட்டுகின்றன.

2. அருந்ததி ராய் (அன்னை மேரி என்னிடம் வருகிறார்):

arundhati roy
arundhati roy

அருந்ததி ராய் அவர்களின் இந்த நினைவுக் குறிப்பானது அவருடைய படிப்படியான வாழ்க்கையைப் பற்றியும் அவருடைய தாயுடனான உறவின் தாக்கத்தை பற்றியும் எடுத்துரைக்கிறது. ராயின் ரசிகர்கள், விருது பெற்ற இந்த நாவலில் எழுதப்பட்ட செயல்முறையான பின்னணியைப் பார்த்து ரசிக்கிறார்கள். மேலும் அருந்ததி ராயைப் பற்றி குறைவான நேர்மறை பார்வை கொண்டவர்கள், இந்த கதையை படிக்கும் போது, எழுத்தாளரின் தாயாரான மேரி ராயின் ஒரு கவர்ச்சிகரமான கதாபாத்திர ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றே சொல்லலாம்.

3. கிரண் தேசாய் (சோனியா மற்றும் சன்னியின் தனிமை):

kiran desai
kiran desai

புகழ்பெற்ற புக்கர் என்ற பரிசை வென்ற கிரண் தேசாய் அவர்கள் முதன் முதலில் ஒரு புத்தகத்தை வெளியிட்டு கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் ஆகிவிட்டன. தேசாயின் சிறந்த படைப்புகளில் பாராட்டப்படும் தொகுப்பு தான் இந்த ‘தி லோன்லினஸ் ஆஃப் சோனியா அண்ட் சன்னி’. இந்த கதை பல தலைமுறைகள் மற்றும் நாடுகளை உள்ளடக்கி எழுதப்பட்டிருக்கிறது. இந்தக் கதை, உலகில் தங்கள் வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் இரண்டு இளைஞர்களுக்கு இடையேயான ஒரு நல்ல பழைய காதல் கதையாகும். மேலும் நவீனமயமாக்கல் என்ற தலைப்பிலிருந்து இனம் மற்றும் பாலினம் வரை அனைத்தையும் தொடுகிறது. ஒரே நேரத்தில் விரிவான மற்றும் அதே சமயத்தில் தப்பிக்கும் தன்மைக்கான சரியான ஆதாரமாகும்.

இதையும் படியுங்கள்:
புத்தகம் படிக்கையில் மனதின் சில வாசல்கள் திறக்கும்; பாரதி பாஸ்கர்.
Best Books of 2025

4. வீர் தாஸ் (தி அவுட்சைடர்: (எ மெமாயர் ஃபார் மிஸ்ஃபிட்ஸ்):

vir das
vir das

இந்த வீர்தாஸ் என்கிற எழுத்தாளர், தற்போது அதிக அளவில் விற்பனையாகும் தன்னுடைய நினைவுக் குறிப்பில், தன்னுடைய ஆரம்பகால குழந்தைப் பருவம், பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட போராட்டங்கள் மற்றும் இறுதியில், தன்னை வித்தியாசமாக வளர்த்த விஷயங்கள், அவருடைய வெற்றிக்கு அவர் எப்படி எந்த வகையில் கடமைப்பட்டிருந்தார் என்பதை பற்றியெல்லாம் மிக அழகாக விவரித்திருக்கிறார். மீள்தன்மையின் சக்திவாய்ந்த கதையான இந்தப் புத்தகம், தமக்கு தானே உண்மையாக இருக்கத் தோன்றுபவர்களுக்கு மிகவும் பொருந்தும்.

இதையும் படியுங்கள்:
அப்துல் கலாமிற்கு, வறுமையிலும் நண்பன் போல் கை கொடுத்த அந்த ஒரு புத்தகம்..!
Best Books of 2025

5. சஞ்சேனா சத்தியன் (தேவி வளாகம்):

Sanjena Sathian
Sanjena Sathian

நீங்கள் முற்றிலும் கட்டுப்பாடற்ற பெண்கள் பற்றிய புத்தகங்களை படிக்க விரும்புவீர்களேயானால், சஞ்சேனா சத்தியனின் காடஸ் காம்ப்ளெக்ஸைத் தவிர வேறு எதையும் படிப்பதற்கான அவசியமில்லை. குழந்தைகள் வேண்டாம் என்று உணர்ந்த பிறகு, தனது திருமணத்தை விட்டு வெளியேறிய 32 வயதான சஞ்சேனா சத்யனின் விசித்திரமான வாழ்க்கையின் உண்மை என்ன?

அவருடைய நண்பர்களும் உறவினர்களும் அவரை கணவருடன் பார்த்ததாகவும் மேலும் அவள் கர்ப்பமாக இருப்பதைக் கண்டதாகவும் சத்தியம் செய்கிறார்கள். இதன் விளைவாக என்ன நடக்கிறது என்பதை காட்டும் ஒரு த்ரில்லர் கட்டுரை தான் இந்த கதை.

நீங்களும் முடிந்தால் இந்த கதைகளை எல்லாம் படித்து பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com