கூத்துக் கலையின் வகைகள் மற்றும் அதன் முக்கியத்துவம்!

Traditional dance of tamilnadu
Art of dance...
Published on

கூத்து என்பது தமிழ்நாட்டின் பழமையான கலை வடிவங்களில் ஒன்றாகும். கூத்துக்கலை தமிழர்களின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் முக்கியமான கலையாகும். இதைப் பற்றி சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூத்து என்பது பலவிதமான நடனங்கள் மற்றும் நாடகங்களை உள்ளடக்கிய சிறந்த கலை வடிவமாகும். இவை பெரும்பாலும் கிராமப்புறங்களில் திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் பொழுது திறந்த வெளியில் மேடைகள் மற்றும் திரைகள் இல்லாமல் நடத்தப்படும். கூத்தில் நடனம், பாடல் மற்றும் நடிப்பு ஆகியவை இணைந்து கதையை சொல்லும். பெரும்பாலும் புராணக் கதைகள், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் போன்றவை கதைக் கருவாக இருக்கும்.

கூத்து அகக்கூத்து, புறக்கூத்து என்று இரு வகைப்படும். இதில் வசைக்கூத்து புறக்கூத்தின் ஒரு வகையாகும். ஒருவரின் குறைகளை, பலவீனங்களை அல்லது தவறுகளை சுட்டிக்காட்டி நகைச்சுவையாகவோ அல்லது இகழ்ச்சியாகவோ வெளிப்படுத்தும் ஒருவகை கூத்து ஆகும். இது புகழ் கூத்துக்கு எதிர்மறையானது. அதாவது ஒருவரை பழித்து, விமர்சித்து, இகழ்ந்து அல்லது கேலி செய்யும் விதமாக ஆடப்படும் கூத்தாகும்.

ஒருவரின் குறைகளை சுட்டிக்காட்டி, அவர்களை திருத்திக் கொள்ளவும், சமூகத்தில் நல்லொழுக்கத்தை நிலைநாட்டவும் உதவும் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டது. வசை கூத்தில் வேத்தியல், பொதுவியல் என இரண்டு வகைகள் உள்ளன. கூத்தில் ஈடுபட்டோரை கூத்தர், பாணர், பொருநர், விறலியர் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகிறது. இன்றும் கூட கலைகளில் பங்கு பெறுவோரை 'கூத்தாடி' என்று அழைக்கும் வழக்கம் உண்டு.

வசைக் கூத்து என்பது பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் சமூகத்தில் உள்ள குறைகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு கருவியாகவும் இருந்தது.

இதையும் படியுங்கள்:
நாட்டுப்புறக் கலைகள்: நம் பண்பாட்டின் பெருமை!
Traditional dance of tamilnadu

வேத்தியல் கூத்து:

வேத்தியல் கூத்து என்பது அரசவையில் ஆடப்படும் கூத்து வகையைச் சேர்ந்தது. இது அரசர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டது. அரசர்களுக்குரிய சிறப்பு அம்சங்கள் மற்றும் அவர்களுடைய பெருமைகளை வெளிப்படுத்தும் வகையில் இக்கூத்து நடைபெறும். இதில் நடனம், இசை மற்றும் நாடகம் ஆகியவை அடங்கும்.

பொதுவியல் கூத்து:

பொதுவியல் கூத்து என்பது பொதுமக்களுக்காக ஆடப்படும் கூத்து. இதில் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள் ஆகியவை இடம் பெறும்.

சங்க கால வசைக் கூத்து:

சங்க இலக்கியங்களில் வசைக் கூத்து பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இது பெரும்பாலும் சமூகத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டவும், அதிகாரத்தில் உள்ளவர்களை விமர்சிக்கவும் பயன்படுத்தப்பட்டது.

சமய வசைக் கூத்து:

குறிப்பிட்ட மத நம்பிக்கைகளையோ அல்லது சடங்குகளையோ விமர்சித்து நடத்தப்படுவது சமய வசைக் கூத்து.

சமூக வசைக் கூத்து:

சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், மூடநம்பிக்கைகள் மற்றும் சமூக சீர்கேடுகளை விமர்சித்து பாடல்கள் பாடப்படுவது சமூக வசைக் கூத்து.

இதையும் படியுங்கள்:
கர்நாடகாவின் 'முடிசூட்டு நகரம்': பட்டடக்கல் கோவில்களின் சிறப்பு; அறியப்படாத வரலாறு!
Traditional dance of tamilnadu

வரலாற்று வசைக் கூத்து:

வரலாற்றில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, யாரையாவது விமர்சித்து பாடப்படும் கூத்து.

இன்றும் கிராமப்புறங்களில் கூத்துக்கலை தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகிறது. சமகால கூத்துக் கலைஞர்கள், கூத்துக் கலையை நவீனமயமாக்கி வருகின்றனர். இதன் வளர்ச்சிக்காக பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com