இராமாயணத்தில் வரும் 'தண்டகாரண்யம்' எங்கிருக்கிறது?

Dandakaranya forest
Dandakaranya forestImg Credit: Flickr
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

இராமர் தனது 14 ஆண்டு கால வன வாசத்தின் போது, சீதை மற்றும் இலக்குவனுடன் சில காலம் தண்டகாரண்யத்தில் கழித்தார் என இராமாயண இதிகாசம் கூறுகிறது.

இந்தத் தண்டகாரண்யத்தில் இருக்கும் போதுதான், மாரீசன் தங்க மான் வடிவில் உலாவினான். சீதை, அந்தத் தங்க மானை பிடித்துத் தரும்படி கேட்டதால், இராமன் மற்றும் இலக்குவன் என்று இருவரும் தங்க மானைத் தேடிச் சென்றனர். சீதை தனிமையில் இருக்கையில், அங்கு வந்த இராவணன் சீதையைக் கவர்ந்து கொண்டு போய், இலங்கையின் அசோக வனத்தில் சிறை வைத்ததாக இராமாயணத்தின் ஆரண்ய காண்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.

தண்டகாரண்யம் (தண்டக+ஆரண்யம்) என்பது அடர்ந்த காட்டுப்பகுதி என்றும், தண்டனைக்குரியவர்கள் வசிக்கும் காடு என்றும் இரு விதமான பொருள் கொள்கின்றனர். இராமாயணத்தில் குறிப்பிடும் இந்தத் தண்டகாரண்யம் எனும் அடர்ந்த காடு, தற்போது எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியாவின், சத்தீஸ்கர் மாநிலத்தில் சுமார் 90,000 சதுர கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட அடர்ந்த காட்டுப்பகுதியாக தண்டகாரண்யம் அமைந்திருக்கிறது. இக்காட்டிற்கு மேற்கே அபூஜ்மார் மலை, கிழக்கே கிழக்கு மலைத் தொடர். மேலும், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், ஒடிசா, ஆந்திரா மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதிகளை உள்ளடக்கியதாக தண்டகாரண்யம் அமைந்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
இந்தியப் பெருங்கடலும், ராஜேந்திர சோழனின் கடற்படையும்: ஒரு அலசல்!
Dandakaranya forest

2000 ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் தனி மாநிலமாக உருவான போது, தண்டகாரணயத்தின் பகுதிகள் கங்கேர் (1999), தந்தேவாடா (2000) என்றிருந்தது. அதன் பின்பு பிஜப்பூர் (2007), நாராயண்பூர் (2007), கோண்டாகாவ் (2012), சுக்மா (2012) என்று தற்போது ஏழு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.

தண்டகாரண்யம் வனப்பகுதியில் வாழும் மக்களில் நான்கில் மூன்று பங்கினர் மலைவாழ் பழங்குடியின மக்கள் ஆவர். அவர்களில் முக்கியமான பழங்குடி இனங்களாக, கோண்டு மக்கள், முரியாக்கள், ஹல்பாக்கள் மற்றும் அபுஜ்மரியாக்கள் என்று நான்கு பழங்குடியின மக்கள் இருக்கின்றனர்.

தண்டகாரண்யப் பகுதி நள வம்சம், நாகர்கள், காகதீய வம்சம், சாளுக்கியர்கள் மற்றும் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டது என்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com