பளிச்சென்ற வெண்மை நிறத்திற்கான 5 பொருட்கள்!

azhagu kurippugal
azhagu kurippugalImage credit - pixabay
ம.வசந்தி

மங்கையர் மலரின் நீண்டகால வாசககயான எனக்கு, புதிய புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். ஊக்கப்படுத்துவதும் உற்சாகப்படுத்துவதும் செயலற்றவர்களையும் ,செயல்பட வைக்கும் என்பதால், மோட்டிவேஷன் கட்டுரைகள் எழுவது மிகவும் பிடித்தமான ஒன்று .எனது எண்ணங்கள் நேர்மறையான சிந்தனை கொண்ட   கல்கி குழுமத்தோடு ஒன்றிப் போவதால் அவர்களுடன் கைகோர்த்து வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

Updated on

முகத்தில் கரும்புள்ளிகள் திட்டுகள் இன்றி பளபளப்பாக வெண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசை. வெண்மையான சருமத்தைப் பெற தேவையான ஐந்து பொருட்கள் பற்றிய பதிவுதான் இக்கட்டுரை.

எலுமிச்சை சாறு

சருமத்தை பிரகாசமாக்க இயற்கையான வழிகளில் ஒன்றான எலுமிச்சை சாறு பளபளப்பான நிறத்தை தரக்கூடியது. எலுமிச்சை சாற்றை பிழிந்து சருமத்தில் சுமார் 10-15 நிமிடங்கள் தடவி பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். எலுமிச்சைசாறு அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது அல்ல என்பதை நினைவில் கொள்ளவும், எனவே இந்த வீட்டு வைத்தியத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகுவது அவசியம்.

பச்சை பால்

பச்சை பாலில் லாக்டிக் அமிலம் இருப்பதால் நிறத்தை பிரகாசமாக மாற்றுகிறது.  ஒரு பருத்தி துணியை பாலில் நனைத்து, அதை முகத்தில் தடவி, 10-15 நிமிடங்கள் விடவேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் சருமம், மென்மையான, வெண்மையான பிரகாசமான தோற்றம் அளிக்கும்.

தயிர்

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை மென்மையாகவும் பிரகாசமாகவும் மாற்றி, மிருதுவாகவும் மாற்ற உதவுகிறது. குளிர்வைக்கப்பட்ட தயிரை 15-20 நிமிடங்கள் தடவவேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ முகம் வெண்மையாக பிரகாசிக்கும்.

இதையும் படியுங்கள்:
வாழை இலை ஃபேஸ் பேக்கில் இத்தனை நன்மைகளா?
azhagu kurippugal

தேன்

தேன் அற்புதமான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற சக்திகள் கொண்டு, ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதால் சுத்தமான தேனை சருமத்தில் தடவி 10-15 நிமிடங்களுக்கு விடவேண்டும். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ முகம் பளபளப்பாகிறது

வெள்ளரிக்காய்

வெள்ளரிகள் இயற்கையான ப்ளீச்சிங் விளைவைக் கொண்டு இருப்பதால் சருமத்தின் நிறத்தை சமன் செய்ய உதவுகிறது. ஒரு வெள்ளரிக்காயை நறுக்கி, அதனை அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதனை 15-20 நிமிடங்கள் முகத்தில் ஓய்வெடுக்க விடவேண்டும். பின்னர், வெதுவெதுப்பான நீரில் கழுவ முகம் வெண்மை நிறத்திற்கு மாறுகிறது.

logo
Kalki Online
kalkionline.com