தலையில் தயிர் தேய்த்தால் முடி நீளமாக வளருமா... இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் சொல்லும் மாபெரும் பொய் இதோ!

curd for hair growth
curd for hair growth
Published on

இரவு நேரங்களில் தூங்காமல் இன்ஸ்டாகிராம், யூடியூபில் பியூட்டி ரீல்ஸ் பார்ப்பது நம்மில் பலருக்கும் ரொம்பவே பிடித்த ஒரு விஷயமாக மாறிவிட்டது. அதில் வரும் பல Influencers தங்களின் நீளமான, பளபளப்பான முடிக்கு காரணம் நமது வீட்டு பிரிட்ஜில் இருக்கும் ஒரு சாதாரண பொருள் தான் என்று உறுதியாகக் கூறுவார்கள். தற்போது இணையத்தில் ரொம்பவே ட்ரெண்ட் ஆகி வரும் அப்படிப்பட்ட ஒரு சமையலறைப் பொருள் தான் தயிர். 

இதை தலையில் தேய்த்தால் ஒரே இரவில் தலைமுடி பிரம்மாண்டமாக வளர்ந்துவிடும் என்று நம்பி பலரும் இதை ஆசையாக முயற்சித்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் சொல்லப்படும் இந்த விஷயத்தில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது? வாங்க தெரிஞ்சுக்கலாம்.

முடி வளருமா?

வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், வெறும் தயிரை உச்சந்தலையில் தடவுவதால் மட்டும் முடிகள் மிக வேகமாக வளர்ந்துவிடாது. நமது தலைமுடி வளரும் வேகம் என்பது நமது மரபணுக்கள், ஹார்மோன் பேலன்ஸ், அன்றாட உணவு மற்றும் நமது உடல் ஆரோக்கியம் போன்ற பல உள்நாட்டு விஷயங்களைச் சார்ந்தது. இதற்கு எந்த ஒரு மருத்துவ ரீதியான ஆதாரமும் கிடையாது. நீங்கள் எவ்வளவு தான் தயிரை தலையில் கொட்டி மசாஜ் செய்தாலும், உள்ளே இருக்கும் அந்த உயிரியல் மாற்றங்களை வெளியில் இருந்து கட்டாயப்படுத்தி மாற்றிவிட முடியாது.

இதையும் படியுங்கள்:
13 அடி நீளம் கொண்ட பன்ட் துப்பாக்கியின் வரலாறு தெரியுமா?
curd for hair growth

நீளம் குறையாமல் காக்கும் ரகசியம்!

அப்படியென்றால் இணையத்தில் சொல்லப்படும் எல்லாமே பொய்தானா என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அங்கே தான் ஒரு சிறிய ட்விஸ்ட் இருக்கிறது. தயிர் புதிய முடிகளை முளைக்க வைக்காது என்பது உண்மைதான், ஆனால் இருக்கும் முடிகளை உதிராமல் பாதுகாப்பதில் இது ஒரு மாபெரும் ஹீரோவாகச் செயல்படுகிறது. 

நமது முடி வறண்டு போய் நுனியில் உடையும்போது, முடி வளர்ந்தாலும் அதன் நீளம் நமக்குத் தெரியாது. தயிரை ஒரு டீப் கண்டிஷனராகப் பயன்படுத்தும்போது, அது முடியின் வறட்சியைப் போக்கி முடிகள் பாதியிலேயே உடைவதைத் தடுத்து நிறுத்துகிறது. இதனால் உங்களின் முடி வேகமாக வளர்வது போன்ற ஒரு பிரம்மை உங்களுக்கு ஏற்படுகிறது.

தயிரில் உள்ள விஷயங்கள்!

நமது தலைமுடி பெரும்பாலும் Keratin எனப்படும் ஒருவகையான புரதத்தால் ஆனது. தயிரில் உள்ள இயற்கையான புரதம் சேதமடைந்த முடிகளில் உள்ள சின்னச் சின்ன இடைவெளிகளை நிரப்பி முடியை ரொம்பவே ஸ்ட்ராங்காக மாற்றுகிறது. மேலும் இதிலுள்ள Lactic acid, நமது உச்சந்தலையில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை மென்மையாக நீக்கும் ஒன்றாக செயல்படுகிறது. இதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் பொடுகுத் தொல்லையை முற்றிலுமாக ஒழித்துக் கட்டிவிடுகின்றன. அதிக கொழுப்புள்ள தயிரை பயன்படுத்தினால் முடி ரொம்பவே மென்மையாக மாறிவிடும்.

இதையும் படியுங்கள்:
நுணுக்கங்கள் தான் ஆண்களின் உண்மையான அழகு!
curd for hair growth

உண்மையான தீர்வு உள்ளே இருக்கிறது!

உங்களுக்கு நிஜமாகவே தலைமுடி வேகமாக வளர வேண்டும் என்றால், தயிரை தலையில் தடவுவதை விட அதை தினமும் உணவில் ஒரு ஸ்பூன் சாப்பிடுவதுதான் மிகச் சிறந்த வழியாம். ஆமாம், தயிரை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்குத் தேவையான புரதம், கால்சியம் மற்றும் Vitamin B5 போன்ற சத்துக்கள் நேரடியாகக் கிடைக்கின்றன. இந்த சத்துக்கள் தான் உள்ளே இருந்து வலுவான முடியை உருவாக்குவதற்கான மிக முக்கியமான அடிப்படை ஆதாரங்கள் ஆகும்.

இதையெல்லாம் படித்துவிட்டு நாளை முதல் தலையில் தயிர் தேய்ப்பதை நிறுத்திவிட வேண்டாம். உங்களின் தலைமுடி வறட்சி இல்லாமல் ரொம்பவே சாஃப்ட்டாகவும், பளபளப்பாகவும் இதைத் தொடர்ந்து தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆனால் இதை தடவிய உடனே முடி நீளமாக வளர்ந்துவிடும் என்ற அதீத கற்பனைகளை மட்டும் சற்று ஓரம் கட்டிவிடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com