கருமையான கூந்தலுக்கு இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

Follow these tips for dark hair!
Follow these tips for dark hair!
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

கருமையான கூந்தல் வேண்டும் என்ற ஆசை எல்லா பெண்களுக்குமே இருக்கும். இளமையான தோற்றத்துடன் இருப்பது யாருக்குதான் பிடிக்காது? முடி கருமையாகவும், பளபளப்பாகவும் இருக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சில டிப்ஸை இந்தப் பதிவில் காண்போம்.

1. மருதாணி பவுடர், முட்டையின் வெள்ளைக் கரு, புளிக்காத தயிர் மூன்றையும் கலந்து தலையில் தேய்த்து இரண்டு மணிநேரம் வைத்து குளித்து வந்தால் இளநரை கருப்பாக மாறும்.

2. நார்த்தங்காய் சாறு எடுத்து அதை தலையில் தேய்த்துவிட்டு சில நிமிடத்திற்கு பிறகு சோறு வடித்த கஞ்சியில் சீயக்காய் சேர்த்து தேய்த்து குளித்தால் தலையில் உள்ள அழுக்குகள் நீங்கி முடி பளபளப்பாகும்.

3. தலைக்கு குளித்த பிறகு ஈரம் நன்றாக காய்வதற்கு முன் எண்ணெய் தடவாமல் இருந்தால் முடி செம்பட்டையாகாமல் இருக்கும்.

4. பெரிய நெல்லிக்காயை நன்றாக நறுக்கி இடித்து அதை ½ லிட்டர் நல்லெண்ணெய், ¼ லிட்டர் தேங்காய் எண்ணெய்யோடு சேர்த்து காய்ச்சி வடிகட்டி தலைக்கு தடவி வந்தால் முடி கருமையாக வளரும்.

5. மாதம் ஒருமுறை தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து இரவில் மென்மையாக தலைக்கு மசாஜ் செய்து விட்டு காலையில் சீயக்காய் தேய்த்து தலை குளித்து வர முடி செழிப்பாக வளரும்.

6. கூந்தல் எண்ணெய் பசையுடன் இருந்தால், எழுமிச்சைச் சாறு தடவி ஊற வைத்து பிறகு ஷாம்பு போட்டு குளித்தால் முடி நன்றாக வளரும்.

7. ஒரு கைப்பிடி வேப்பங்கொழுந்து, ஒருகைப்பிடி குப்பைமேனி, ஒரு துண்டு மஞ்சளை தண்ணீர் விட்டு அரைத்து பேஸ்ட் போல தலையில் தடவி நன்கு காய்ந்த பிறகு அலசி குளித்தால் முடி உதிர்வது குறையும்.

8. தண்ணீரை கொதிக்க வைத்து அந்த ஆவியில் தூய்மையான டவலை நனைத்து பிழித்து அதை தலையில் கட்டிக்கொண்டு பிறகு சிறிது நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளித்து விட கூந்தல் மென்மையாக பளபளக்கும்.

9. முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து வாரம் ஒருமுறை தலையில் தடவி குளித்து வர அடர்த்தியான கூந்தல் வளரும்.

இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணி கருமையான கூந்தலை பெறுங்கள்.

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கா? போச்சு!
Follow these tips for dark hair!
logo
Kalki Online
kalkionline.com