இயற்கையைப் போற்றிக் காத்திட 13 கட்டளைகள்!

Nature
Nature
செ. கலைவாணி

செ.கலைவாணி ஓய்வுபெற்ற தமிழாசிரியை 'சிதறிய பரல்கள் கவிதை நூல்' அடர்வன மின்மினி துளிப்பா நூல் கலையும்கைவண்ணமும் கைவினை நூல் இம்மூன்று நூல்களை வெளியிட்டுள்ளேன் என் கவிதைகள் தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன முன்னணி பெண்கள் மாத வார மின்னிதழ்களில் முன்னணி செய்தித்தாள்களில் எனது கைவேலைகள் குறித்து செய்திகள் வந்துள்ளன. துளிப்பா பேரிகை விருது கவிப்பறவை விருது சதகக்கவிஞர் விருது கவித்தென்றல் விருது போன்று பலவிருதுகள் வாங்கியுள்ளேன். என் மூச்சுக் காற்றே தமிழன்னை தான் வாழ்நாள் முழுவதும் தமிழன்னைக்குக் கவிதையாரம் சூட்டுவதே என்பணி.

Updated on

எல்லோர்க்கும் பொதுவாய்

இயங்குது இயற்கை.

இயற்கைக்கு இடையூறு

இழைக்காமல் தவிர்த்திடுக...

1. நெகிழி பயன்பாட்டை

நீக்கியே ஒழித்திடுக.

2. உயிர்வளி நல்கும்

உயர்மரத்தை வெட்டாதீர்.

3. மழைநீரைச் சேகரித்து

மண்ணிற்குள் புகவிடுவீர்.

4. வயலில் இலைதழையை

உரமாக்கி மகிழ்ந்திடுக.

5. கழிவுநீர் ஆற்றில்

கலக்காது காத்திடுவீர்.

6. ஆழ்துளைகளால் மண் நீரை

அபகரித்து வீணாக்காதீர்.

7. கனிமவளம் தேடி

கற்பாறைகள் சிதைக்காதீர்.

8. ஆகாயத்தாமரை நீர்நிலைகளில்

வளரவிடாமல் செய்திடுக.

இதையும் படியுங்கள்:
கனமழையால் நிலத்தின் சத்துகள் அடித்துச் செல்லப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
Nature

9. தாமரைக் குளங்களைத்

தரமாய்ப் பேணிடுக.

10. நீர்நிலை யோரங்களில்

பனைதனையே வளர்த்திடுக.

11. ஆற்று  வண்டல்மண்ணை

ஆழமாகக் களவாடாதீர்.

12. மரக்கன்றுகளை நடுக

மழைவளம் பேணுக

13. புள்ளினங்களைக் காத்தே

பூமியைச் செழிப்பாக்குக.

logo
Kalki Online
kalkionline.com