1986 இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் 20 முக்கிய அம்சங்கள்!

20 Important Features of Indian Environment Protection Act 1986!
20 Important Features of Indian Environment Protection Act 1986!

இன்றைய காலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது உலகளாவிய அக்கரையாக மாறியுள்ளது. நமது கிரகத்தைப் பாதுகாக்க வலுவான சட்டங்களும் தேவைப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு 1986 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தை இயற்றியது. இந்த புரட்சிகரமான சட்டம் இந்தியாவில் சுற்றுச்சூழல் நிர்வாகத்திற்கான அடித்தளமாக செயல்படுகிறது எனலாம். இந்தப் பதிவில் 1986 சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் 20 முக்கிய அம்சங்களையும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் பற்றி பார்க்கலாம். 

  1. குறிக்கோள் மற்றும் நோக்கம்: இச்சட்டத்தின் முதன்மை நோக்கம், சுற்றுச்சூழலை பாதுகாத்து மேம்படுத்துவதாகும். இதன் மூலமாக மனிதர்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்துகளைத் தடுக்கலாம். இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கான கட்டமைப்பை வழங்குகிறது.

  2. மாசுக்கட்டுப்பாடு வாரியங்கள்: இந்த சட்டம் சுற்றுச்சூழல் விதிகளை செயல்படுத்துவதற்கு பொறுப்பான மத்திய மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களை நிறுவுகிறது. 

  3. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA): இது சுற்றுச்சூழல் பாதிப்புகள் போதுமான அளவு கவனிக்கப்படுவதை உறுதி செய்து, ஒப்புதல் வழங்குவதற்கு முன், மேம்படுத்தும் திட்டங்களின் சுற்றுச்சூழல் விளைவுகளை மதிப்பிடுவதைக் கட்டாயமாக்குகிறது. 

  4. மத்திய அரசின் அதிகாரங்கள்: சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும், குறைக்கவும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு இச்சட்டம் அதிகாரம் அளிக்கிறது. 

  5. அபாயகரமான பொருட்கள்: விபத்துக்களை தடுக்கவும், மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அபாயங்களைக் குறைக்கவும், அபயகரமான பொருட்களை கையாளுதல், சேமித்தல் மற்றும் அகற்றுதல் ஆகியவற்றை இது ஒழுங்குபடுத்துகிறது.

  6. சுற்றுச்சூழல் தரநிலைகள்: இந்த சட்டம் பல்வேறு மாசு படுத்தல்களுக்கு சுற்றுச்சூழல் தரநிலைகளை அமைக்க வழிவகை செய்து, மாசு அளவுகள் ஏற்றுக் கொள்ளக் கூடிய வரம்புகளுக்குள் இருப்பதை உறுதி செய்கிறது. 

  7. தொழில்கள் மீதான கட்டுப்பாடுகள்: மாசுபாட்டைத் தடுக்க அல்லது கட்டுப்படுத்த தொழிற்சாலைகளின் இருப்பிடம், செயல்பாடு ஆகியவற்றின் மீது கட்டுப்பாடுகள் அல்லது தடைகள் விதிக்க இச்சட்டம் அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. 

  8. நுழைவு மற்றும் ஆய்வு அதிகாரம்: சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக, வளாகத்திற்குள் நுழைந்து ஆய்வு செய்யும் அதிகாரம் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

  9. தண்டனைகள்: சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் மற்றும் சிறை தண்டனை உள்ளிட்ட தண்டனைகளை பரிந்துரை செய்கிறது. 

  10. பொதுமக்களின் பங்கேற்பு: சுற்றுச்சூழல் தொடர்பான முடிவு எடுக்கும் செயல்முறைகளில் பொது மக்களின் பங்கேற்பின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்தி, பொது விழிப்புணர்வை ஊக்குவித்து, சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் பொதுமக்களை ஈடுபடச் செய்கிறது. 

  11. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி: தனி நபர்கள் மற்றும் சமூகங்கள் மத்தியில் பொறுப்புணர்வை வளர்ப்பதற்கும், நிலையான நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு திட்டங்களை இந்த சட்டம் ஊக்குவிக்கிறது. 

  12. சுற்றுச்சூழல் ஆய்வகங்கள்: இதன் மூலமாக மாசுபடுத்திகளின் பகுப்பாய்வு மற்றும் கண்காணிப்பை எளிதாகுவதற்கு, சுற்றுச்சூழல் ஆய்வகங்களை நிறுவி, பயனுள்ள மாசுக்கட்டுப்பாடு நடவடிக்கைகளை செயல்படுத்துகிறது. 

  13. ஒலி மாசுக் கட்டுப்பாடு: குடியிருப்பு, தொழில்துறை மற்றும் வணிகப் பகுதிகளில் இரைச்சல் அளவுகள் அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் இருப்பதை உறுதி செய்து ஒலி மாசுபாட்டை இந்த சட்டம் ஒழுங்குபடுத்துகிறது. 

  14. சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு: இது சுற்றுச்சூழல் சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை கண்டறிதல் மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது. 

  15. சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்பது: நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு அப்பால் மாசுக்களை வெளியிடுவதைச் சட்டம் தடைசெய்கிறது. மேலும் தொழிற்சாலைகள் மற்றும் தனி நபர்களின் மாசுக் கட்டுப்பாடு நடவடிக்கைகளை கட்டாயமாக்குகிறது.

  16. சுற்றுச்சூழல் இழப்பீடு: சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதற்கும், சிலரது செயல்பாடுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை சரி செய்வதற்கும், மாசுபடுத்துபவர்களிடம் இழப்பீடு வசூலிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. 

  17. விதிவிலக்குகள் மற்றும் தளர்வுகள்: சமூக மற்றும் பொருளாதாரக் காரணிகளை கருத்தில் கொண்டு சில சந்தர்ப்பங்களில் விதிவிலக்குகள் மற்றும் தளர்வுகளை வழங்குவதற்கான விதிகளை இச்சட்டம் வழங்குகிறது. 

  18. நிறுவனங்களின் குற்றங்கள்: இந்த சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட குற்றங்களுக்கு நிறுவனங்கள், அவற்றின் இயக்குனர்கள், மேலாளர்கள் மற்றும் பிற அதிகாரிகளை பொறுப்பாக்கி சுற்றுச்சூழல் அலட்சியத்தை உறுதி செய்கிறது. 

  19. சுற்றுச்சூழல் தீர்ப்பாயம்: சுற்றுச்சூழல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஒரு சுற்றுச்சூழல் தீர்ப்பாயத்தை சட்டம் நிறுவியுள்ளது.

  20. சர்வதேச ஒத்துழைப்பு: இது எல்லை தாண்டிய சுற்றுச்சூழல் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், உலகளாவிய சுற்றுச்சூழல் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் மற்ற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைக்க மத்திய அரசுக்கு உதவுகிறது. 

இதையும் படியுங்கள்:
AC வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!
20 Important Features of Indian Environment Protection Act 1986!

இப்படி பல கோட்பாடுகளை வகுத்துள்ள இச்சட்டம் மூலமாக, சுற்றுச்சூழலை பாதுகாத்து, நிலையான வளர்ச்சி நடைமுறைகளை ஊக்குவித்து, எதிர்கால தலைமுறையினருக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்ய பல வழிகளில் இச்சட்டம் பங்களித்துள்ளது. மேலும் இந்த சட்டமானது சுற்றுச்சூழல் பொறுப்பின் முக்கியத்துவத்தையும், நமது கிரகத்தை பாதுகாப்பதற்கான கூட்டு முயற்சியின் தேவையும் நமக்கு நினைவூட்டுகிறது. எனவே முடிந்த வரையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com