கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்கம்: பவளப்பாறைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

The danger facing coral reefs
Coral reefs
Published on

வளப்பாறைகள் பார்ப்பதற்கு வெறும் பாறைகள் போலத் தெரிந்தாலும், இவை உண்மையில் 'பாலிப்கள்' எனப்படும் சிறிய உயிரினங்களால் உருவாக்கப்பட்ட ஒரு அதிசயம் உலகமாகும். இவற்றை கடலின் மழைக்காடுகள் என்று அழைக்கிறார்கள்.

பவளப்பாறைகளின் முக்கியத்துவம்:

மீன்களின் இல்லம்: கடலில் மிகச்சிறிய இடத்தையே (1 சதவிகிதத்துக்கும் குறைவு) இவை ஆக்கிரமித்துள்ளன. ஆனால், கடலில் உள்ள 25 சதவிகித மீன்கள் வாழ்வதற்கும், முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்கும் பவளப்பாறைகளையே நம்பியுள்ளன.

கடற்கரை பாதுகாப்பு: சுனாமி, புயல் மற்றும் பெரிய அலைகள் கரையைத் தாக்கும்போது, இந்தப் பவளப்பாறைகள் ஒரு இயற்கைச் சுவர் போலச் செயல்பட்டு அலையின் வேகத்தைக் குறைக்கின்றன. இது கடற்கரை கிராமங்களைக் காக்கிறது.

இதையும் படியுங்கள்:
வீட்டிற்குள் செடி வளர்க்க விரும்புபவர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!
The danger facing coral reefs

உணவு மற்றும் வருமானம்: உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உணவுக்காகவும், மீன்பிடித் தொழில் மற்றும் சுற்றுலா மூலமான வருமானத்திற்காகவும் பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளனர்.

மருத்துவப் பயன்: புற்றுநோய், மூட்டுவலி மற்றும் இதய நோய்களுக்கான பல மருந்துகள் பவளப்பாறைகளில் வாழும் உயிரினங்களில் கண்டறியப்படுகின்றன.

பவளப்பாறைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து:

வெளுப்பு நோய்: தற்போது பவளப்பாறைகள் மிகப்பெரிய ஆபத்தைச் சந்தித்து வருகின்றன. புவி வெப்பமடைவதால் கடலின் சூடு அதிகரித்து வருகிறது. அதிக வெப்பம் தாங்க முடியாமல் பவளப்பாறைகள் தங்கள் உடலில் உள்ள வண்ணப் பாசிகளை வெளியேற்றி விடுகின்றன. இதனால் அவை வெள்ளையாக மாறி, மெல்ல மெல்ல உயிரிழக்கின்றன.

அதிகரிக்கும் உயிரிழப்பு: 2025ம் ஆண்டின் கணக்குப்படி, உலகில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமான பவளப்பாறைகள் இந்த வெப்ப பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. சில இடங்களில் 40 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரையிலான பவளப்பாறைகள் அழிந்துவிட்டன.

மாசுபாடு: கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் ரசாயனங்கள் பவளப்பாறைகளின் வளர்ச்சியை பாதிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
கப்பலையும் உடைத்து உருக்குலையச் செய்யும் பலம் கொண்ட அதிசய 'அரபைமா' மீன்கள்!
The danger facing coral reefs

மன்னார் வளைகுடா: இது தமிழகத்தின் கடல் வாழ் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. தனுஷ்கோடிக்கும் தூத்துக்குடிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள 21 தீவுகளைச் சுற்றியுள்ள கடல் பகுதிதான் 'மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம்.' இது இந்தியாவின் முதல் கடல்சார் தேசிய பூங்காவாகும்.

தற்போதைய நிலை (2025 நிலவரம்): மன்னார் வளைகுடாவில் உள்ள பவளப்பாறைகள் கடந்த சில ஆண்டுகளாகப் பெரும் சவால்களைச் சந்தித்து வருகின்றன:

வெப்பநிலை உயர்வு: வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நீரின் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரித்து வருவதால், இங்கும் 'பவளப்பாறை வெளுத்தல்' அதிகமாகக் காணப்படுகிறது.

ஆக்கிரமிப்பு பாசிகள்: 'கப்பாபைகஸ்' (Kappaphycus) போன்ற அந்நிய கடல் பாசிகளின் வளர்ச்சியால், பவளப்பாறைகள் மூச்சு விட முடியாமல் திணறி வருகின்றன. இது பவளப்பாறைகளின் மேல் ஒரு போர்வை போலப் படர்ந்து அவற்றை அழித்துவிடுகிறது. அழியும் நிலையில் உள்ள 'கடல் பசுக்கள்' வாழ்வதற்கு இந்தப் பவளப்பாறை மற்றும் கடல் புல்வெளிகளே மிகவும் முக்கியம்.

இதையும் படியுங்கள்:
மண்ணின் மலட்டுத்தன்மையை நீக்கும் மண் புழு உரத்தின் மாயாஜாலம்!
The danger facing coral reefs

மீனவர்களின் வாழ்வாதாரம்: ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான மீனவக் குடும்பங்கள் இங்கு கிடைக்கும் மீன் வளத்தை நம்பியே உள்ளனர். பவளப்பாறைகள் அழிந்தால் மீன் உற்பத்தி பாதியாகக் குறைந்துவிடும். தமிழக அரசு, கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து சில முக்கியமான பணிகளைச் செய்து வருகின்றனர். பவளப்பாறைகள் அழிந்த இடங்களில் கடலுக்கு அடியில் செயற்கை பாறைகளை இறக்கி அதில் புதிய பவளங்களை வளர்க்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. உடைந்த பவளத் துண்டுகளைச் சேகரித்து, அவற்றைச் சிறு சட்டங்களில் கட்டி மீண்டும் கடலில் நடும் 'கடல் விவசாயம்' போன்ற பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

விழிப்புணர்வு: உள்ளூர் மீனவர்களுக்குப் பவளப்பாறைகளின் முக்கியத்துவத்தைக் கூறி, அவற்றைப் பாதிக்காத வகையில் மீன் பிடிக்கப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகளைக் கடலில் கொட்டாமல் தவிர்ப்பது புவி வெப்பமடைவதைக் குறைக்கப் பங்களிப்பதுடன் பவளப்பாறைகளைக் காக்கவும் உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com