பழுப்பு கடல் பாசிகள்: உணவு, மருந்து மற்றும் விவசாயத்தில் முக்கிய பங்கு!

important role in food, medicine and agriculture!
Seaweeds
Published on

ழுப்பு கடல் பாசிகள் (brown algae) பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை மீன்கள் மற்றும் பிற கடல் உயிரினங்களுக்கு உணவும், அடைக்கலமும் வழங்குகின்றன.

உலகின் சில பகுதிகளிலும் வடக்கு ஐரோப்பாவிலும் இவை பண்ணை வாழ்க்கை மிருகங்களுக்கான உணவாக பயன்படுகின்றன. பழுப்பு கடல் பாசிகளின் பல இனங்கள் கனிமங்களால் வளமானவை, மேலும் கார்போஹைட்ரேட்கள் மற்றும் உயிரணுக்கள் (விட்டமின்கள்) கொண்டவை.

கடல் தீவுகளிலும் கிழக்கு நாடுகளிலும், சீனாவிலும் ஜப்பானிலும் வசிக்கும் மக்களுக்கு  இவை உணவாக பயன்படுகிறது. ஜப்பானியர்கள் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட கடல் பாசி இன வகைகளை உணவாகவும், பலவற்றை உரமாகவும் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட கெல்பிலிருந்து இனிப்புக் கேக் தயாரித்து, மற்றவற்றை காய்கறியாக பயன்படுத்துகின்றனர்.

ஜப்பானில் பொதுவான உணவாக கருதப்படும் “கொம்பு” (இது லாமினேரியா (laminaria) மற்றும் பிற கெல்புகளின் உற்பத்தியால் தயாரிக்கப்படுகிறது) காய்கறியாக வழங்கப்படுகிறது; மேலும் சர்க்கரையால் பூசப்பட்டு இனிப்பாகவும் மாற்றப்படுகிறது. இளம் லாமினேரியா பட்டைகள் உண்ணப்படுகின்றன, மேலும் Nereocystis இன் பட்டைகளும் பம்புகளும் “சீட்ரான்” எனப்படும் இனிப்புச் செடியை தயாரிக்க பயன்படுகின்றன. தெற்கு அமெரிக்காவில் Durvillea என்ற வகை உலர்த்தி உப்பிட்டு விற்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பாம்பு செடியின் 7 ஆரோக்கிய நன்மைகள்: வீட்டில் வைக்க வேண்டிய முக்கிய தாவரம்!
important role in food, medicine and agriculture!

பயன்பாடுகள்:

உணவு மற்றும் ஊட்டச்சத்து: பழுப்பு கீரைகள் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமங்களால் செழிப்பாக உள்ளன. இவை கடல் உணவாக மட்டுமின்றி, ஆற்றலூட்டும் மற்றும் ஆரோக்கியம் மேம்படுத்தும் உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

தொழில்நுட்ப மற்றும் மருந்து தயாரிப்பு: சில பழுப்பு பாசிகளில் இருந்து பெறப்படும் வேதியியல் பொருட்கள் மருந்து, அழகு பொருட்கள் மற்றும் வேதி வாயு தொழில் நுட்பங்களில் பயன்படுத்தப் படுகின்றன. உதாரணமாக, கெல்பின் போன்ற பொருட்கள் பலவிதமான தொழில்களில் பயன்படுகின்றன.

விவசாய பயன்பாடுகள்: பழுப்பு பாசிகள் உரம் மற்றும் நிலத்தைச் சீரமைக்கும் பொருளாகவும், விவசாயத்தில் பயனுள்ளதாகவும் கருதப்படுகின்றன.

சுற்றுச்சூழல் மற்றும் பசுமை தொழில்கள்: கடல் சூழலை மேம்படுத்துவதோடு, பழுப்பு பாசிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு,  நீர் சுத்திகரிப்பு, மண் சீரமைப்பு அல்லது திட மாசுபாட்டை அகற்றும் நடவடிக்கைகளில் பங்காற்றுகின்றன. இது சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் முக்கிய பங்காற்றும் செயல்முறையாகும்.

கேல்புகள் (Kelps) என்பது பெரிய, பழுப்பு நிற கடல் களைகள் (seaweeds) என அழைக்கப்படும் பொதுப்பெயர் ஆகும். இவை ஐயோடின் (iodine), கனிம உப்புகள் (mineral salts), புரோமின் (bromine) மற்றும் பொட்டாஷ் (potash) ஆகியவற்றின் முக்கிய மூலாதாரமாகும். லேமினேரியா (Laminaria), ஃப்யூகஸ் (Fucus) மற்றும் மற்ற சில கடல் களைகள் ஐயோடினின் மூலாதாரமாக செயல் படுகின்றன. நீரோசிஸ்டிஸ் (Nereocystis), மாக்ரோசிஸ்டிஸ் (Macrocystis), பெலகோஃபைகஸ் (Pelagophycus) மற்றும் இதற்கு ஒத்த சில கடல் களைகளிலிருந்து பொட்டாஷ் பெறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
புறாக்கள் மனிதர்களுடன் நெருக்கமாக இருப்பதற்கான காரணங்கள் என்ன?
important role in food, medicine and agriculture!

சில கடல் களைகள், அதிக அளவு நைட்ரஜன் (nitrogen), பொட்டாசியம் (potassium) மற்றும் பிற கனிமங்கள் உள்ளதால் உரமாக (fertilizer) பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இவை குறைந்த அளவிலேயே பாஸ்பரஸ் (phosphorus) கொண்டுள்ளன. இக்கடல் களைகள் வயல்களில் பரப்பப்பட்டு உழுதுப் புதைக்கப்படுகின்றன அல்லது உலர்த்தி எரிக்கப்படுகின்றன. இவ்வாறு எரிக்கப்பட்ட பின்னர் கிடைக்கும் கரி (ash), மண்ணுறையாக (soil fertilizer) பயன்படுகிறது.

இதன் மூலம், பழுப்பு பாசிகள் உணவு, தொழில்நுட்பம், மருந்து, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பல்வேறு வகைகளில் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com