பணப்பயிர் சணலின் பயன்பாடுகள் தெரியுமா?

Jute Plant
Jute Plant
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on

ணல் தொழில்சார் பயன்களுக்காக வளர்க்கப்படும் பணப்பயிர் ஆகும். மிக வேகமாக வளரும் பயிர்களில் ஒன்று. 10,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே நார் திரிக்க பயன்பட்ட பயிராக சணல் விளங்கியது.

பயன்பாடுகள்:

1. சணல் தாள், துணி, உடை, உயிரியலாக சிதைவுறும் நெகிழி, நெய்வணம், உயிர் எரிபொருள், உணவு, கால்நடை தீவனம், காப்பீட்டுப் பொருட்கள் போன்ற பொருட்களை சணலை பதப்படுத்திப் பெறலாம்.

2. சணல் நாரிழைககள் துணிகள் நெய்யப் பயன்பட்டாலும், கம்பளி, பட்டு, பருத்தி, செயற்கை இழைகள் போன்றவற்றுடன் கலந்தும் நெய்யப்படுகிறது.

3. இதன் உள்ளிழைகள் கட்டையாக அமைவதால் விலங்கு படுக்கை உருவாக்கப் பயன்படுகிறது.

4. சணல் விதை எண்ணெய் உயிரகமேற்று திண்மையாக மாறுவதால் நெய்வணம் செய்யவும், குழைவைகளுக்கும், நெகிழிகளுக்கும், சமையல் பொருட்களுக்கும் ஈரப்பதத்தை ஊட்டும் பொருளாகவும் பயன்படுகிறது.

5. 2003ம் ஆண்டு ஆய்வில் சணல் விதைமணிகள் ஐரோப்பாவில் பறவை, விலங்கு தீவனமாகப் பயன்படுத்த அறியப்பட்டது.

6. சணல் முக்கியமாக கச்சா பருத்தியின் பேல்களை உருட்டி மடக்கவும், சாக்கு பைகள் மற்றும் துணி உற்பத்தி செய்யவும், கரடுமுரடான துணிகளை தயாரிக்கவும், பயன்படுகிறது.

7. இழைகள், திரைச்சீலைகள் நாற்காலி உறைகள் தரை விரிப்புகள், தளவிரிப்புகள், ஹெஸ்ஸியன் துணிகள் நெய்யவும், பயன்படுகிறது.

உணவாகப் பயன்பாடு:

பிலிப்பைன்ஸ் வடக்கு மாகாணங்களில் பிரபல உணவாக உள்ளது. அங்கு அது ‘சாலியோட்’ என அறியப்படுகிறது. சணல் இலைகளை மேற்கு கென்யாவில் லூய்ஹியா மக்கள் ‘ம்ரெண்டா’ அல்லது ‘மூரெரெ’ என அழைக்கின்றனர். அது ‘உகாலி’ யுடன் உண்ணப்படுகிறது. ‘உகாலி’ கென்யாவின் பெரும்பாலான சமூகங்களில் சத்துணவாக உள்ளது. சணல் இலைகளில் இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின் ‘சி’ ஆகியவை வளமாக உள்ளது. தாவரம் வைட்டமின் 'ஈ’ க்கு இணையானதொரு ஆண்டி_ஆக்ஸிடன்ட் நடவடிக்கையை கணிசமான டோக்கேபெரோல் உடன் கொண்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்:

1. சணல் இலை 100 சதவிகிதம் மக்கும் தன்மையுடன் இருப்பவை. மேலும், மறுசுழற்சியுடையவை. அதனால் சூழல்நட்பு கொண்டவை.

2. சணல் இயற்கையான தங்க மற்றும் பட்டுப் போன்ற பிரதிபலிப்பு கொண்டது. ஆகையால். ‘தி கோல்டன் ஃபைபர்‘ என அழைக்கப்படுகிறது.

Jute rope
Jute rope

3. சணல் தாவரத் தண்டின் தோலிலிருந்து பெறப்படும் விலை குறைவான தாவர இழையாகும்.

4. பருத்திக்கு பிறகு இரண்டாவது முக்கிய தாவர இழையாக உலக நுகர்வு உற்பத்தி மற்றும் கிடைத்தல் ஆகியவற்றின் வரையறைகளின் கீழ் அதன் பயன்பாடு வருகிறது.

5. சணலின் உயர் விறைப்பான வலு, குறைவான இழுவை, இழைகளில் தாக்குபிடிக்கும் தன்மையை உறுதியளிக்கிறது. ஆகையால் சணல் விவசாய பொருட்களை மொத்தமாக கட்டுவிக்க மிகப் பொருத்தமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
உடலில் மாயாஜாலம் செய்யும் வெண்டைக்காய் நீரின் 5 பலன்கள்!
Jute Plant

6. சணல் சிறப்பான தொழில் இழை, துணி வலை மற்றும் கோணிகளை தரமுடன் தயாரிக்க உதவுகிறது. அது மூலப்பொருட்களில் பயன்படும் இயற்கையான பன்முகம் கொண்ட துணிகளில் ஒன்றாக பேக்கேஜிங், ஜவுளி, கட்டுமானம் மற்றும் விவசாய துறைகளில் பயன்படுகிறது.

7. சணலின் சிறந்த உலக மூலாதாரம் கங்கையிலுள்ள கழிமுகப் பகுதியின் பெங்கால் கழிமுக சமவெளி பகுதியாகும்.

8. சணலின் நன்மைகள் திறனான இன்சுலேடிங் மற்றும் ஆண்டிஸ்டாடிக் குணங்களாகும். அதேபோல குறைவான வெப்பக் கடத்தி மற்றும் ஒரு மிதமான ஈரபத மீட்பும் ஆகும்.

9. சணல் இதர இலைகளுடன் கலக்கும் திறனை, செயற்கை மற்றும் இயற்கை இரு விதங்களிலும், செல்லுலோசிக் சாய வகைகளான இயற்கை அடிப்படை கொழுப்பு, சல்ஃபர், ரியாக்டிவ் மற்றும் பிக்மெண்ட் சாயங்களை ஏற்றுக்கொள்கிறது.

10. சணல் கம்பளியுடனும் கலக்கப்படலாம். தீப்பற்றுவதை தடுக்கும் இரசாயனங்களுடன் பதப்படுத்தும்போது தீப்பற்றுதலைத் தடுக்கும் குணங்களை மேம்படுத்தும்.

logo
Kalki Online
kalkionline.com