ராஜாவுக்கு ராஜா! ராஜ நாகம் ஏன் இவ்வளவு ஸ்பெஷல்னு தெரியுமா?

king cobra
king cobra
Published on

உலகத்திலேயே மிக நீளமான விஷப்பாம்பு ராஜ நாகம் (King Cobra). இதை பார்த்தாலே நமக்கு ஒருவித பயம் வந்துடும். அதோட விஷம் எவ்வளவு ஆபத்தானதுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா, ராஜ நாகம் வெறும் ஒரு விஷப்பாம்பு மட்டும் இல்லீங்க. அதை விட இதுக்கு நிறைய தனித்துவமான குணாதிசயங்களும், சிறப்பம்சங்களும் இருக்கு. அதனாலதான் இதை 'ராஜா'னு சொல்றாங்க. ராஜ நாகம் ஏன் ஒரு சாதாரண பாம்பு இல்லை தெரியுமா?

1. ராஜ நாகம் மற்ற பாம்புகளைப் போல முட்டைகளை சும்மா போட்டுட்டு போகாது. இது கூடு கட்டும் ஒரே பாம்பு இனம். ஆண், பெண் பாம்புகள் சேர்ந்து மரக்கிளைகள், இலைகள், புற்கள் இதையெல்லாம் பயன்படுத்தி தரையில ஒரு கூட்டை கட்டும். அப்புறம் முட்டைகளை அதுக்குள்ள வச்சு, பெண் பாம்பு முட்டைகளை பொரிக்கும் வரை காவல்காக்கும். இது ரொம்பவே ஆச்சரியமான ஒரு விஷயம்.

2. பொதுவா பாம்புங்க எலி, தவளை, பறவைகள்னு சாப்பிடும். ஆனா, ராஜ நாகம் மத்த பாம்புகளையே முக்கிய உணவா எடுத்துக்கும். அதனாலதான் இதுக்கு 'ராஜா'னு பேர் வந்துச்சு. நல்ல பாம்பு, கட்டுவிரியன் போன்ற விஷப்பாம்புகளை கூட இது வேட்டையாடி சாப்பிடும். இது இயற்கையின் உணவுச் சங்கிலியில ஒரு முக்கியமான பங்கு வகிக்குது.

3. ராஜ நாகம் பயங்கர விஷப்பாம்புதான். ஆனா, அது தானாகவே வந்து மனுஷங்களை கடிக்காது. அது தன்னை அச்சுறுத்தலா உணரும்போது மட்டும்தான் கடிக்கும். நம்மள விட்டு விலகி போகவே பெரும்பாலும் முயற்சி செய்யும். தற்காப்புக்காக மட்டுமே படமெடுத்து சீறும்.

இதையும் படியுங்கள்:
ராஜ ராஜேஸ்வரி அம்மனின் குதிரைப்படை தலைவி பன்றி முக வராகி!
king cobra

4. ராஜ நாகங்கள் ரொம்பவே புத்திசாலி பாம்புங்க. தன்னை யார் அச்சுறுத்துறாங்க, யார் இல்லன்னு அதுங்களுக்கு நல்லா தெரியும். அப்புறம், அதுங்களுக்கு ஒரு இடத்தோட அமைப்பு, எங்க ஆபத்து இருக்குன்னு நல்லா புரிஞ்சுக்கும். பாம்பு பிடிப்பவர்கள் கூட ராஜ நாகத்தை கையாளும்போது ரொம்ப எச்சரிக்கையா இருப்பாங்க.

5. ராஜ நாகங்கள் கிட்டத்தட்ட 18 அடி வரைக்கும் வளரக்கூடியது. இது உலகிலேயே மிக நீளமான விஷப்பாம்பு. அப்புறம், இதுங்க 20 வருஷத்துக்கும் மேல வாழக்கூடியது. இந்த நீளமும், வாழ்நாளும் இதுங்கள ஒரு தனித்துவமான உயிரினமா காட்டுது.

6. ராஜ நாகங்கள் சுற்றுச்சூழலுக்கு ரொம்பவே முக்கியமான ஒரு பங்கு வகிக்குது. இது மத்த பாம்புகளை சாப்பிடுறதுனால, பாம்புகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வச்சுக்குது. இது இல்லன்னா, மற்ற பாம்புகளின் எண்ணிக்கை அதிகமாகி சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com