தமிழக நெல் விவசாயத்தின் நன்மை, தீமைகள்: இது உண்மையிலேயே லாபகரமானதா?

Pros and Cons of Paddy Farming in Tamil Nadu
Pros and Cons of Paddy Farming in Tamil Nadu

ந்தியாவின் தென் பகுதியில் அமைந்துள்ள நமது தமிழ்நாடு மற்றும் அதன் கிராமப்புறங்கள் பரந்து விரிந்த நெல் வயல்களைக் கொண்டு வளமான விவசாய நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. பல நூற்றாண்டுகளாகவே தமிழ்நாட்டில் நெல் சாகுபடி என்பது ஒரு பாரம்பரிய நடைமுறையாகவே இருந்து வருகிறது. இருப்பினும், நவீன மயமாக்கல் மற்றும் மாறி வரும் பொருளாதார முன்னேற்றங்களால், தமிழகத்தில் நெல் விவசாயம் உண்மையில் லாபகரமானதா? என்ற கேள்வி எழுகிறது.

நெல் விவசாயத்தின் நன்மைகள்: நெல் விவசாயம் தமிழ்நாட்டின் கலாசார கட்டமைப்பில் ஆழமாகப் பதிந்துள்ளது. இது ஒருவருக்கு வாழ்வாதாரத்தைக் கொடுக்கிறது என்பதைவிட, மக்கள் தங்கள் வாழ்க்கை முறையில் தலைமுறை தலைமுறையாக இதை ஒரு அங்கமாகவே பார்க்கின்றனர். இதனால் நெல் சாகுபடியானது மக்களிடையே சமூகம் மற்றும் நமது அடையாள உணர்வை வளர்க்கிறது.

அந்தக் காலத்தில் இருந்தே தமிழ்நாட்டில் நெல் என்பது ஒரு பிரதான பயிராக உள்ளது. நெல் சாகுபடி மாநில மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்து, உள்ளூர் வாழ்வாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் அளிக்கிறது. அதிகரித்து வரும் மக்கள் தொகையால் அரிசியின் தேவையும் அதிகமாக உள்ளது. இதனால் நெல் சாகுபடி விவசாயிகளுக்கு நம்பத்தகுந்த வருமான ஆதாரமாக உள்ளது.

நெல் சாகுபடி என்பது கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் செயல்முறையாகும். விதைத்தல் முதல் அறுவடை வரை நெல் விவசாயத்தில் பல்வேறு நிலைகளுக்கு குறிப்பிடத்தக்க பணியாளர்கள் தேவை. இது அந்தந்தப் பகுதிகளின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.

நெல் விவசாயத்தின் தீமைகள்: சமீப காலமாகவே தமிழ்நாடு தண்ணீர் பற்றாக்குறை பிரச்னைகளை எதிர்கொள்கிறது. குறிப்பாக, நெல் போன்று நீர் அதிகம் தேவைப்படும் பயிர்கள் சாகுபடியில் இந்த பிரச்னை அதிகம் உள்ளது. இதை சமாளிப்பதற்கு நிலையான நீர்பாசன நடைமுறைகள் மற்றும் நீர் திறனுள்ள தொழில்நுட்பங்களின் தேவை முக்கியமானது.

நெல் விவசாயத் துறை, சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகும் துறையாகும். இதனால் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களின் விலை நிச்சயமற்றவை. இதனால் அவர்களுடைய நிதியை திறம்பட திட்டமிடுவது சவாலாக உள்ளது. சில சமயங்களில் அவர்கள் செலவு செய்த பணம் கூட கிடைக்காமல் நஷ்டத்தையே சந்திக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
வளிமண்டலத்தில் உயரும் நீராவியால், அதிகரிக்கும் வெப்பமயமாதல்!
Pros and Cons of Paddy Farming in Tamil Nadu

ஒரு நிலத்தில் தொடர்ந்து நெல் பயிர் செய்வதால் மண் சிதைவு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படலாம். ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டால் மண்ணின் ஆரோக்கியமும் நீரின் தரமும் மோசமாகிறது. எனவே, ஒரு நிலத்தில் தொடர்ந்து நெல் விவசாயம் செய்து வந்தால், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு எதிர்பார்க்கும் மகசூல் அதில் கிடைப்பதில்லை.

நெல் விவசாயம் லாபகரமானதா?

நெல் விவசாயத்தைப் பொறுத்தவரை இது நிச்சயம் லாபம் கொடுக்கும் என்று எவ்விதமான உத்திரவாதமும் கொடுக்க முடியாது. ஆனால், மகசூல் நன்றாக வந்து அதற்கு ஏற்றவாறு விலையும் கிடைத்தால் நெல் விவசாயம் லாபகரமானதுதான். ‘விவசாயி கணக்கு பார்த்தால் கோமணம் கூட மிஞ்சாது’ என்ற சொல்லாடல் உண்டு. விவசாயத்துறையில் உள்ள நிலைத்தன்மையற்ற சூழ்நிலையால், எதையும் நாம் உறுதியாக சொல்ல முடியாது. விவசாயத்தைப் பொறுத்தவரை கொடுத்தால் மொத்தமாகக் கொடுக்கும், கெடுத்தால் மொத்தமாகக் கெடுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com