Sapria Himalayana: இது பூ அல்ல, அதிசயம்! 

Sapria Himalayana
Sapria Himalayana
Published on

இமயமலையின் அடர்ந்த காடுகளில் ஒளிந்து வாழும் ஒரு அதிசய பூவான சப்ரியா ஹிமாலயானா தனது தனித்துவமான தோற்றம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பிரபலமடைந்துள்ளது. இந்த அறிய பூவின் வாழ்க்கை சுழற்சி, அதன் சூழலியல் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்புத் தேவைகள் ஆகியவற்றை பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.‌

சப்ரியா ஹிமாலயனா என்பது ஒரு பாரசைட்டிக் தாவரமாகும். அதாவது வேறு ஒரு தாவரத்தின் மீது வாழ்ந்து அதன் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி வளரும் ஒருவகை தாவரம். இது பொதுவாக இமயமலையின் குறிப்பிட்ட உயரத்தில் மட்டுமே காணப்படும், ஒருவகை கொடி தாவரத்தின் வேர்களில் ஒட்டிக்கொண்டு வளரும். இந்தப் பூவின் தோற்றம் மிகவும் வித்தியாசமானது. மிகவும் பெரிய அளவில் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அதன் இதழ்கள் பல அடுக்குகளாக அமைந்து ஒரு அழகான வடிவத்தை உருவாக்கும். 

சப்ரியா ஹிமாலயனாவின் வாழ்க்கை சுழற்சி மிகவும் சுவாரசியமானது.‌ இது விதைகளை உற்பத்தி செய்து பரப்பாது. அதற்கு பதிலாக அதன் வேர் மற்றொரு தாவரத்தின் வேர்களில் ஊடுருவி அதன் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி வளரும். இந்த செயல்முறை மிகவும் மெதுவாக நடைபெறும். பல ஆண்டுகள் கழித்து இந்த பூ முழுமையாக வளர்ந்து பூக்கும். இதன் பூக்கும் காலம் குறுகியதாகவும், சில நாட்கள் மட்டுமே நீடிக்கும் வகையிலும் இருக்கும்.‌

சப்ரியா ஹிமாலயனா இமயமலை சூழலில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இது பல வகையான பூச்சிகள், பறவைகளுக்கு உணவு மற்றும் வாழ்விடத்தை வழங்குகிறது. மேலும், இந்த பூவின் இருப்பு அந்த பகுதியில் சூழலியல் ஆரோக்கியத்தைக் குறிக்கும் ஒரு அறிகுறியாகும்.‌ இருப்பினும் இந்தத் தாவரம் அழிந்து வரும் தாவரங்களில் ஒன்றாக உள்ளது. 

இதையும் படியுங்கள்:
மனித ரோபோக்களை அடுத்த ஆண்டு களமிறக்கும் எலான் மஸ்க்!
Sapria Himalayana

காடுகளின் அழிப்பு, காலநிலை மாற்றம் மற்றும் மனித நடவடிக்கைகள் போன்ற காரணங்களால் இந்த பூவின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. இந்த அரிய பூவை பாதுகாக்க இமயமலை காடுகளை பாதுகாப்பது மிகவும் முக்கியம். மேலும், இந்தப் பூவின் வாழ்க்கை சுழற்சி மற்றும் சூழலியல் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com