உலகின் மிகப்பெரிய நிலவிலங்கு என்ற பெருமையைப் பெற்ற யானைகள் தங்கள் அழகு, அறிவு மற்றும் சமூக வாழ்க்கை ஆகியவற்றால் மனிதர்களை ஈர்த்து வருகின்றன. ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா ஆகிய இரு கண்டங்களில் வாழும் இவை, பல நூற்றாண்டுகளாக மனித நாகரீகத்துடன் இணைந்து இருக்கின்றன. இந்தப் பதிவில் யானைகளின் பல்வேறு தனித்துவ அம்சங்கள் மற்றும் அவற்றின் நடத்தைகள் பற்றிய முழு தகவல்களைப் பார்க்கலாம்.
யானைகளின் தத்துவமான அம்சங்கள்:
யானைகள் தங்களின் தனித்துவமான உடல் அமைப்பால் எளிதில் அடையாளம் காணப்படுகின்றன. அவற்றின் நீண்ட தந்தங்கள், பெரிய காதுகள் மற்றும் தடிமனான கால்கள் இவற்றின் தனிச்சிறப்புகளாகும். தந்தங்கள், உணவு உண்பதற்கும், பொருட்களை எடுத்துச் செல்வதற்கும், தற்காப்பு ஆகியவற்றிற்கும் பயன்படுகின்றன. காதுகள், உடல் வெப்பத்தை குறைக்கும் விசிறி போல செயல்படுகின்றன.
யானைகள் மிகவும் அறிவுமிக்க சிக்கலான சமூக அமைப்புகளைக் கொண்டு, குடும்ப உறவுகளை முறையாகப் பின்பற்றி வாழ்கின்றன. அவற்றின் நீண்ட கால நிலைவாற்றல் மற்றும் ஒத்துழைக்கும் தன்மை ஆகியவை அவற்றின் அறிவின் அளவை எடுத்துரைக்கும் அம்சங்களாகும்.
யானைகள் கூட்டமாக வாழும் சமூக விலங்குகள். அவை எப்போதும் பெரிய குழுக்களாக வாழ்கின்றன. இதில் பல தலைமுறைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருப்பார்கள். இவற்றின் குடும்ப உறவுகள் மிகவும் வலுவானவை. மேலும், குழு உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து பாதுகாப்பாளர்களாக இருப்பார்கள்.
பல்வேறு வழிகளில் தங்களுக்குள் தொடர்புகொள்ளும் யானைகள், குரல், முகபாவனைகள், உடல் மொழி ஆகியவற்றை முக்கிய தொடர்பு மொழியாகப் பயன்படுத்துகின்றன. அவை ஒவ்வொரு யானையின் குரல் மற்றும் தந்தங்களின் அதிர்வுகளை அடையாளம் காணும் திறன் கொண்டவை.
யானைகளின் நடத்தை:
யானைகள் தாவர உண்ணிகள். அவை பல்வேறு வகையான தாவரங்களை உண்கின்றன. இதில் இலைகள், பழங்கள், பட்டைகள் மற்றும் வேர்கள் ஆகியவை அடங்கும். ஒரு நாளைக்கு சுமார் 150 கிலோ உணவுகள் வரை அவை உட்கொள்ளும்.
யானைகளுக்கு நீர் என்றால் அதிகம் பிடிக்கும். அவை தினமும் குளித்து, தண்ணீரை மேலே தெளித்துக் கொள்ளும். நீர் அவற்றின் உடல் வெப்பத்தைக் குறைக்கவும், உடலில் உள்ள தூசி அழுக்கு போன்றவற்றை அகற்றவும் உதவுகிறது. யானைகள் நீண்ட தூரம் பயணிக்கும் விலங்குகள். அவை உணவு மற்றும் நீர் தேடி தங்கள் வாழ்விடத்தை அவ்வப்போது மாற்றுகின்றன.
யானைகள் பொதுவாகவே நின்று கொண்டு உறங்கும். அவை ஒவ்வொரு நாளும் 2-4 மணி நேரம் உறங்கக்கூடியவை.
யானைகள் இயற்கையின் மாபெரும் அதிசயங்கள். அவற்றின் அறிவு, உணர்ச்சிகள் மற்றும் சமூக வாழ்க்கை ஆகியவை மனிதர்களை ஆச்சரியப்படுத்துகின்றன. ஆனால், மனித நடவடிக்கைகள் காரணமாக யானைகள் இன்று அழிந்து வரும் நிலையில் உள்ளதால், அவற்றை பாதுகாப்பது என்பது நம் அனைவரின் பொறுப்பு. இதற்காக நாம் யானைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவற்றின் வாழ்விடத்தைப் பாதுகாக்க வேண்டும்.