உங்கள் நிலத்தை ‘பச்சை பொன்’ நிலமாக்க வேண்டுமா? மக்கானா விவசாயத்தின் மாயாஜாலங்கள்!

Makhana cultivation
Makhana cultivation
Published on

க்கானா (Makhana) சாகுபடி என்பது நீர்நிலைகளில் நடைபெறும் ஒரு சிறப்பான மற்றும் லாபகரமான விவசாய முறையாகும். இது, ‘ஈழநீர் தாமரை’ என்றும் அழைக்கப்படும். இதன் விதைகள் சத்துமிக்க உணவாகவும், ஆயுர்வேத மருந்தாகவும் பயன்படுகின்றன. இந்தியாவில், குறிப்பாக பீகார் மாநிலத்தில் இது மிகப்பெரிய அளவில் சாகுபடியாக நடைபெறுகிறது. தற்போது மக்கானாவை, ‘பச்சை பொன்’ (Green Gold) எனவும் அழைப்பது உண்டு.

1. நிலத் தேர்வு: நீர்நிலைகள், நிலக் குளங்கள், அழுத்தமான நீர் வைத்திருக்கும் நிலங்கள். நீரின் ஆழம் 1.5 முதல் 2.5 மீட்டர் வரை நீர் இருக்க வேண்டும். நிலத்தில் நீர்த்தேக்கம் 6 மாதங்கள் இருந்தால் சாகுபடிக்கு ஏற்றது.

2. விதை தேர்வு: பயிரிட முந்தைய பருவத்தில் சேகரிக்கப்பட்ட உயர் தர விதைகள் பயன்படுத்தப்படும். 3 முதல் 4 மாதங்களுக்கு முன்னர் (ஜனவரி, பிப்ரவரி) விதைகள் நீரில் ஊறவைக்கப்படுகின்றன.

3. விதை விதைத்தல்: மார்ச், ஏப்ரல் மாதங்களில் விதை நடவு செய்யப்படும். விதைகள் நேரடியாக குளங்களில் போட்டுவிடப்படுவதில்லை. முதலில் அவை நன்கு தயாரிக்கப்பட்ட சிறு தொட்டிகளில் (nursery ponds) நட்டுவிடப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
காதலுக்காக பறவைகள் ஆடும் ஆட்டம்! நம்ப முடியாத உண்மை!
Makhana cultivation

4. பிரதான குளத்திற்கு மாற்றுதல்: விதை முதிர்ந்த தாவரங்கள் 1 முதல் 1.5 அடி உயரம் அடைந்ததும் இடமாற்றம் (Transplantation) செய்கின்றனர். மே மாதம் முதல் தாவரங்கள் பெரிய குளங்களில் மாற்றப்படுகின்றன. தாவரங்கள் தண்ணீரின் மேல் மிதக்கும் வகையில் வளருகின்றன.

5. பராமரிப்பு: நச்சு நீக்கம், வெடிப்பூச்சி கட்டுப்பாடு தேவையில்லை. சாகுபடி செலவு குறைவாகவும் பராமரிப்பு எளிதாகவும் இருக்கும். ஒரு முறையாகவே உரமிட்டாலே போதும் (சரியான கொழுப்பு மண்ணே இதற்குப் போதுமானது).

6. அறுவடை: அக்டோபர், நவம்பர் மாதங்களில் காய்கள் பழுத்து, தன்னிச்சையாக நீரில் விழும். நீச்சலாளர்கள் அல்லது தொழில்நுட்ப கருவிகள் கொண்டு விதைகள் சேகரிக்கப்படுகின்றன. மக்கானா தாவரத்தின் விதைகள் மற்றும் அதன் தோல் பாகம் (outer seed coat) மிகவும் கடினமானது. மிகவும் கெட்டியாக, முட்கள் போன்ற உறைந்த வெளிப்புறத்துடன், தொட்டால் காயப்படுத்தக்கூடியது. அதனால் ‘Prickly’ என இது அழைக்கப்படுகிறது. சேகரிக்கும்போது கையினை காயப்படுத்தலாம். அதற்காக கையுறை (gloves) அணிவது அவசியம்.

இதையும் படியுங்கள்:
சிந்து நதி வெறும் ஆறு அல்ல; ஆதி நாகரிகத்தின் தாய்! நீங்கள் அறியாத பக்கங்கள்!
Makhana cultivation

7. வெடிக்கச் செய்வது (Popping process): சேகரிக்கப்பட்ட விதைகள் உலர்த்தப்பட்டு, சூடான மணலில் (hot sand) வாட்டப்படுகின்றன. வெடித்து வரும் விதைகள்தான் உணவாகப் பயன்படும் ‘பாப் மக்கானா.’ நீர்நிலைகள் மாசுபடாமல் பாதுகாப்பது, மக்கானா உற்பத்திக்கு மிகவும் முக்கியம்.

வருமானம்: ஒரு ஹெக்டேரில் சுமார் 2.5  முதல் 3 டன் வரை மக்கானா விளைச்சல் கிடைக்கலாம். சந்தையில் இது கிலோ 400 ரூபாய் முதல்  700 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும், நன்கு திரட்டப்பட்ட விதைகளை விற்பனை செய்தாலும் நல்ல லாபம் உள்ளது.

சிறப்பம்சங்கள்: இந்தப் பயிர் காலம் 6 முதல் 7 மாதங்கள். நீர் தேவை அதிகம் (pond-based crop). உரம், பூச்சிக்கொல்லி மிகக் குறைவாகவே தேவை.

மக்கானா சாகுபடி என்பது ஒரு சுத்தமான இயற்கை விவசாயம். நீர் வளம் உள்ள பகுதிகளில் குறைந்த செலவில், அதிக வருமானம் தரும் பயிராக இது உள்ளது. அதேசமயம், இது ஒரு சுற்றுச்சூழலை சீராக்கும் பயிராகவும் விளங்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com