
இன்றைக்கு சுவையான நெல்லிக்காய் சாதம் மற்றும் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
1. நெல்லிக்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய்-4
இஞ்சி-1 துண்டு.
மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.
உப்பு-1 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
எண்ணெய்-1 குழிக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
முந்திரி-5
கருவேப்பிலை-சிறிதளவு.
வேர்க்கடலை-1 தேக்கரண்டி.
காய்ந்த மிளகாய்-5
சாதம்-2 கப்.
கொத்தமல்லி-சிறிதளவு.
நெல்லிக்காய் சாதம் செய்முறை விளக்கம்.
முதலில் பவுலில் துருவிய 4 நெல்லிக்காயை சேர்த்துக் கொள்ளவும். இத்துடன் துருவிய 1 துண்டு இஞ்சி, 1 தேக்கரண்டி உப்பு, ½ தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து நன்றாக பிசைந்துவிடவும். இதை 10 நிமிடம் ஊற வைக்கவும்.
இப்போது கடாயில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, வேர்க்கடலை 1 தேக்கரண்டி சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இத்துடன் 5 காய்ந்த மிளகாய், முந்திரி 5, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
இப்போது இதில் பிசைந்து வைத்திருக்கும் நெல்லிக்காயை சேர்த்து 2 நிமிடம் வதக்கிக் கொள்ளவும். இதில் வடித்து ஆற வைத்த சாதம் 2 கப்பை சேர்த்து நன்றாக கிளறவும். கடைசியாக கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் நெல்லிக்காய் சாதம் தயார்.
2. பருப்பு உருண்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
பருப்பு உருண்டை செய்ய:
கடலைப்பருப்பு-1 கப்.
துவரம் பருப்பு-1/4 கப்.
காய்ந்த மிளகாய்-4
சோம்பு-1 தேக்கரண்டி.
உப்பு-தேவையான அளவு.
கருவேப்பிலை, கொத்தமல்லி-சிறிதளவு.
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-2
குழம்பு செய்ய:
எண்ணெய்-1 குழிக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.
வெந்தயம்-1 தேக்கரண்டி.
பூண்டு-4
காய்ந்த மிளகாய்-4
கருவேப்பிலை-சிறிதளவு.
சின்ன வெங்காயம்-15.
தக்காளி-1
சாம்பார் பொடி-4 தேக்கரண்டி.
புளி-எழுமிச்சைப்பழ அளவு.
தேங்காய்ப்பால்-1 கப்.
பருப்பு உருண்டை குழம்பு செய்முறை விளக்கம்.
3 மணி நேரம் ஊற வைத்த கடலைப்பருப்பு 1 கப், துவரம் பருப்பு ¼ கப், காய்ந்த மிளகாய் 4, சோம்பு 1 தேக்கரண்டி, உப்பு 1 தேக்கரண்டி சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இப்போது அதை பவுலில் மாற்றிவிட்டு பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, நறுக்கிய பச்சை மிளகாய் 2 சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டை பிடித்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது கடாயில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, வெந்தயம் 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, பூண்டு 4, காய்ந்த மிளகாய் 4, கருவேப்பிலை சிறிதளவு, நறுக்கிய சின்ன வெங்காயம் 15, பொடியாக நறுக்கிய தக்காளி 1 ஆகியவற்றை நன்றாக வதக்கிவிட்டு சாம்பார் பொடி 4 தேக்கரண்டி சேர்த்து கலந்துவிடவும்.
இதில் எழுமிச்சை பழ அளவு புளியை கரைத்து சேர்த்துக் கொள்ளவும். தண்ணீர் இரண்டு கப் சேர்த்து குழம்பு நன்றாக கொதித்ததும் தேங்காய்ப்பால் 1 கப் சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக உருண்டைகளை குழம்பில் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும். அவ்வளவு தான் பருப்பு உருண்டை குழம்பு தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.