
கோலி சோடா இந்தியாவின் பாரம்பரிய பானம். ஆனால் இப்போது இந்த கோலி சோடாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பா, வளைகுடா நாடுகளில் அதிக தேவை உள்ளது.
இந்த கோலி சோடாவானது, தற்போது உலக அரங்கில் நவீனத்துவத்துடன் கோலி பாப் சோடா என்ற பெயரில் மிகவும் பிரபலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோலி பாப் சோடா என மறுபெயரிடப்பட்ட கோலி சோடாவின் நிலையான விநியோகங்களை இந்தியா உறுதி செய்துள்ளது.
இந்தியாவின் பாரம்பரிய பானமான கோலி சோடா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் குறிப்பிடத்தக்க அளவில் ஊடுருவி வருகிறது. இந்த மறுமலர்ச்சி மூலோபாய விரிவாக்கம் மற்றும் புதுமையான மறுகண்டுபிடிப்பு முயற்சிகளால் இயக்கப்படுகிறது, இது சமீபத்திய அதிகாரப்பூர்வ அறிக்கையில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஃபேர் எக்ஸ்போர்ட்ஸ் உடனான ஒரு மூலோபாய கூட்டாண்மையின் கீழ், இந்தியா கோலி சோடாவின் நிலையான விநியோகங்களை வளைகுடா பிராந்தியத்தின் மிகப்பெரிய சில்லறை விற்பனைச் சங்கிலிகளில் ஒன்றான லுலு ஹைப்பர் மார்க்கெட்டுக்கு செய்ய உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒத்துழைப்பு, உலக சந்தைகளில் இந்திய பானத்தின் வெற்றிகரமான ஊடுருவலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
விற்பனை நிலையங்கள் முழுவதும் ஆயிரக்கணக்கான பாட்டில்கள் கையிருப்பில் வைக்கப்பட்டு விற்பனையாகிறது.
இங்கிலாந்தில், கோலி பாப் சோடா ஒரு கலாச்சார நிகழ்வாக வேகமாகப் பரிணமித்து வருகிறது. இது பாரம்பரிய இந்திய சுவைகளின் கலவையை நவீன திருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளும் நுகா்வோரை ஈா்க்கிறது. இந்தியாவின் வளமான பான பாரம்பரியத்தை உலக அரங்கில் வெளிப்படுத்துவதில் இந்த வளா்ச்சி ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.
பன்னாட்டு பான நிறுவனங்களின் ஆதிக்கத்தால் கிட்டத்தட்ட மறைந்துபோன கோலி சோடாவின் மறுமலா்ச்சி, உண்மையான, உள்நாட்டு உணவு மற்றும் பானப் பொருள்களை ஊக்குவிக்கும் மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான இந்தியாவின் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க மைல் கல்லைக் குறிக்கிறது.
நவீன பேக்கேஜிங்குடன், கோலி பாப் சோடா இந்திய ‘மால் ’ களில் மட்டுமல்லாமல் பானத்தின் சாரத்தை உலகெங்கிலும் உள்ள சமகால நுகா்வோருக்கு வெற்றிகரமாக தற்போது அறிமுகமாகி வருகிறது.
கோலி பாப் சோடாவை வேறுபடுத்துவது அதன் புதுமையான பேக்கேஜ் ஆகும், இது ஒரு தனித்துவமான பாப் ஓப்பனரைக் கொண்டுள்ளது. கோலி சோடாவின் மறுமலா்ச்சியுடன், கோலி பாப் சோடா, இந்தியாவின் வளமான சமையல் பாரம்பரியம் மற்றும் துடிப்பான பானத் தொழிலுக்கு ஒரு சான்றாகும் என மத்திய வா்த்தகம், தொழில்துறை தெரிவித்துள்ளது.