அறுசுவை தெரியும், அதென்ன ‘உமாமி’ சுவை?

அறுசுவை உணவு...
அறுசுவை உணவு...
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

ன்றைய நாகரீகக் காலத்தில் பல வகையான உணவுகள், பல பெயர்களில் தயாரிக்கப்பட்டு சுவைக்கப்பட்டு வருகின்றன. எத்தனை வகையான உணவுகள் தயாரித்தாலும், எந்தப் பெயரில் தயாரித்தாலும், அது அறுசுவை உணவுகளில் ஒன்றாகத்தான் இருக்கும் என்பது நம் முன்னோர்களின் கருத்தாக இருக்கிறது. நாக்கு அறியக்கூடிய சுவைகளாக, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு என்ற வகையில், சுவைகள் ஆறாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை ‘யாக்கை’ என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்க்கண்ட தொடர்புகளையுடையதாக இருக்கின்றன என்பது உங்களுக்கு ஆச்சர்யமூட்டும் தகவலாக இருக்கலாம்.

* இனிப்பு - தசையை வளர்க்கின்றது

* புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது

* கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது

* உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது

* துவர்ப்பு - ரத்தத்தைப் பெருக்குகின்றது

* கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது

அக்கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக்கொண்டே இருந்து வந்தன. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற பழமொழிகூட ஏற்பட்டது என்று சொல்வார்கள்.

இந்தியாவில் சுவையினை ஆறு வகையாக, அறுசுவை என்று வகைப்படுத்தினாலும், மேற்கத்திய நாடுகள் சுவையினை உவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு என்று நான்கு அடிப்படைச் சுவைகளாகவே வகைப் படுத்துகின்றன. தற்போது, புதிதாக ஐந்தாவது சுவையாக ‘உமாமி’ எனும் ஒரு சுவையினை அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. உமாமி எனும் சுவைக்கு சீன, ஜப்பான் மொழிகளைத் தவிர்த்து, வேறு எந்த மொழியிலும் நேரான பெயர் இல்லை. ஜப்பான் மொழியில் ‘உமாமி’ என்றழைக்கப்படும் இச்சுவையினை, சீன மொழியில் ‘சியன் வெ’ என்றழைக்கின்றனர். அதாவது, புதுச்சுவை என்கின்றனர்.

குளுட்டாமெட் (Gulutamate) எனும் வேதியியல் பொருளை நாவிலிருக்கும் சுவை மொட்டுகள் உணர்வதால் ஏற்படும் சுவை என்று கண்டுபிடித்துள்ளார்கள். குளுட்டாமெட்டின் சுவையினை 1908ஆம் ஆண்டில் ஜப்பானைச் சேர்ந்த கிக்குனே இக்கேடா (Kikunae Ikeda) என்பவர், கடல் களைச்செடியாக (seaweed) உள்ள கொம்பு (Kombu) என்னும் பொருளில் உள்ள சுவையில் இருந்து கண்டுபிடித்தார். இச்சுவையை அண்மையில்தான் மேற்கு நாடுகளில் தனியான ஒரு சுவையாக அறிந்து ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இச்சுவையினை ஆங்கிலத்தில் தற்போது, ‘நற்சுவை’ (Deliciousness, Savory) என்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
தூங்கும்போது ஏற்படும் குறட்டையும் நிவாரணமும்!
அறுசுவை உணவு...

இச்சுவையை நாவில் உள்ள சிறப்பான (தனித்தேர்வு) சுவைமொட்டுகள் உணர்கின்றன என்றும் கண்டு பிடித்துள்ளார்கள். இச்சுவைக்கு இயற்கையில் உள்ள குளூட்டாமிக் காடி அல்லது குளூட்டாமேட்தான் காரணம் என்று கருதுகிறார்கள். இது இறைச்சி, பால்திரளி (cheese), மற்றும் புரதம் நிறைந்திருக்கும் பொருட்களில் காணப்படுகின்றது. உணவில் மோனோ சோடியம் குளூட்டாமேட் கலந்து இருந்தால் நாவில் உள்ள இந்த உமாமி சுவை உணரும் சுவை மொட்டுகள் தூண்டப்பட்டு, நற்சுவை தருவதாக மக்கள் உணர்கின்றார்கள்.

இந்த குளூட்டாமிக் காடி ஆசிய உணவுகளில் பரவலாகப் நெடுங்காலமாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. தமிழர்களின் சமையலில் பல்வேறு பருப்புகளிலும், கிழக்கு ஆசிய நாடுகளில் சோயா சாசு (Soy Sauce), மீன் சாசு (Fish Sauce) போன்றவற்றிலும், இத்தாலிய பார்மீசான் பால்திரளி (Parmesan Cheese) ஆகியவற்றிலும் காணப் படுகின்றது. இது நேரடியாக மோனோ சோடியம் குளூட்டாமேட்டில் இருந்தும் கிடைக்கின்றது.

logo
Kalki Online
kalkionline.com