பழம் பொரி கேரளாவில் மிகவும் பிரபலமான சாலை உணவாகும். இது அங்கே சிறந்த டீ டைம் ஸ்நாக்ஸ். இதை ‘எத்தக்காய் அப்பம்’ என்றும் அழைப்பார்கள். இனிப்பு சுவையுடன் பஜ்ஜி போன்று இருப்பது அனைவராலும் விரும்பப்படுகிறது. அத்தகைய பழம் பொரியை வீட்டிலேயே எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
நேந்திரம் பழம்-2
மைதா -1/2 கப்.
அரிசி மாவு-2 தேக்கரண்டி.
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
சக்கரை- 2 தேக்கரண்டி.
ஏலக்காய்-1/4 தேக்கரண்டி.
எண்ணெய்- தேவையான அளவு.
உப்பு- தேவையான அளவு.
செய்முறை விளக்கம்:
முதலில் நேந்திரம் வாழைப்பழத்தை எடுத்து, நீளமாக பஜ்ஜி போடுவதற்கு வெட்டுவது போல வெட்டி வைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு பவுலில் ½ கப் மைதா, 2 தேக்கரண்டி அரிசி மாவு, 2 தேக்கரண்டி சக்கரை, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, ¼ தேக்கரண்டி ஏலக்காய் தூள், உப்பு தேவையான அளவு. இப்போது எல்லாவற்றையும் நன்றாக கலக்கி விட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது வெட்டி வைத்திருக்கும் நேந்திரப்பழத்தை கரைத்து வைத்திருக்கும் மாவில் முக்கி மாவு நன்றாக எல்லா இடத்திலும் படும்படி பிரட்டி விட்டு, எடுத்து அடுப்பில் எண்ணெயை காய வைத்து அதில் போடவும். பழம் பொரி நன்றாக இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் போது எடுத்து விடவும். இப்போது இதன் மீது கொஞ்சம் தேங்காய் தூவி டீயுடன் பரிமாறவும் செம டேஸ்டாக இருக்கும்.