காளான் கொத்துக்கறி: சுவைக்கும் ஆரோக்கியத்துக்கும் நாங்க கேரண்டி! 

காளான் கொத்துக்கறி
காளான் கொத்துக்கறி
Published on

காளான்கள் இயற்கை நமக்கு வழங்கிய ஒரு அற்புதமான உணவு வகையாகும். இது சுவையாக இருப்பது மட்டுமின்றி நம் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை வழங்குகிறது. குறைந்த கலோரி, அதிக நார்ச்சத்து, விடமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த காளான்கள் எல்லா வயதினருக்கும் ஏற்ற ஒரு சிறந்த உணவாகும். இந்தப் பதிவில் காளான் கொத்துக்கறி எப்படி செய்வது என்பதை விரிவாகப் பார்ப்போம். 

தேவையான பொருட்கள்: 

  • 500 கிராம் காளான்கள் (பெரிய அளவில் வெட்டவும்)

  • 2 பெரிய வெங்காயம் (நறுக்கியது)

  • 3 பச்சை மிளகாய் (நறுக்கியது)

  • 1 தக்காளி (நறுக்கியது)

  • 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது

  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்

  • 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்

  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா

  • 1/4 தேக்கரண்டி உப்பு

  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

  • கொத்தமல்லி தழை (அலங்கரிக்க)

செய்முறை:

காளான்களை சுத்தமாகக் கழுவி பெரிய அளவில் வெட்டிக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்குங்கள். 

அடுத்ததாக தக்காளி சேர்த்து அது மென்மையாக வேகும் வரை வதக்கவும். பின்னர் மஞ்சள்தூள் மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இது அப்படியே இரண்டு நிமிடங்கள் வதங்கியதும் வெட்டிய காளானை சேர்த்து அனைத்தும் நன்றாக கலக்கும்படி கிளறி விடுங்கள். 

இப்போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் தீயைக் குறைத்து, அப்படியே மூடி போட்டு பத்து நிமிடங்கள் வேக வைக்கவும். 

இதையும் படியுங்கள்:
சுகர் நோயாளிகள் காளான் சாப்பிடலாமா? திடுக்கிடும் உண்மைகள்! 
காளான் கொத்துக்கறி

இறுதியாக காளான் நன்றாக வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவி அலங்கரித்தால், சூப்பரான சுவையில் காளான் கொத்துக்கறி தயார். 

இதில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மற்ற காய்கறிகளையும் சேர்க்கலாம். கொத்தமல்லித் தழைக்கு பதிலாக கருவேப்பிலை அல்லது புதினா தழையையும் பயன்படுத்தலாம். இன்னும் சுவையை அதிகரிக்க தேங்காய் துருவல் சேர்த்தால் நன்றாக இருக்கும். 

இந்த காளான் கொத்துக்கறியை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட வேற லெவல் டேஸ்டில் இருக்கும். குறிப்பாக, சாதத்துடன் சாப்பிடும்போது நன்றாக இருக்கும். இதை இன்றே முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com