சூப்பரான வாழைப்பூ சாம்பார்- பச்சைப்பயிறு குருமா செய்யலாம் வாங்க!

Banana flower sambar-green gram kurma!
Banana flower sambar-green gram kurma!Image Credits: YouTube
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

ன்றைக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான வாழைப்பூ சாம்பார் மற்றும் பச்சைப்பயிறு குருமா வீட்டிலேயே சிம்பிளாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.

வாழைப்பூ சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்;

எண்ணெய்-2 தேக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

வரமிளகாய்-4

கருவேப்பிலை-சிறிதளவு.

வெங்காயம்-1

தக்காளி-1

வாழைப்பூ-1கப்.

கேரட்-1கப்.

முருங்கைக்காய்-1

உப்பு- தேவையான அளவு.

சாம்பார் பொடி-1 தேக்கரண்டி.

துவரம் பருப்பு-1கப்.

வாழைப்பூ சாம்பார் செய்முறை விளக்கம்;

முதலில் அடுப்பில் கடாயை வைத்து  2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி 1 தேக்கரண்டி கடுகு, வரமிளகாய் 4, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து பொரித்துக்கொண்டு நறுக்கிய வெங்காயம்1, நறுக்கிய தக்காளி 1 சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

இப்போது இதில் பொடியாக நறுக்கிய வாழைப்பூ 1 கப் சேர்த்து விட்டு,  சிறிதாக நறுக்கிய முருங்கைக்காய் 1, நறுக்கிய கேரட் 1 கப் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இதில் சிறிது தண்ணீர் சேர்த்துவிட்டு உப்பு தேவையான அளவு சேர்த்துவிட்டு 1 தேக்கரண்டி சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும். கடைசியாக வேக வைத்த 1 கப் துவரம் பருப்பை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான வாழைப்பூ சாம்பார் தயார். நீங்களும் விட்டிலே இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

பச்சைப்பயிறு-1/2கப்.

சின்ன வெங்காயம்-3

பச்சை மிளகாய்-1

பூண்டு-3

இஞ்சி-1 துண்டு.

கரம் மசாலா-1 தேக்கரண்டி.

சோம்பு-1/2 தேக்கரண்டி.

கசாகசா-1/2 தேக்கரண்டி.

பட்டை-1

ஏலக்காய்-2

முந்திரி-4

தயிர்-1 தேக்கரண்டி.

துருவிய தேங்காய்-1/4 கப்.

தேங்காய் எண்ணெய்-1 தேக்கரண்டி.

வெங்காயம்-1கப்.

தக்காளி-1கப்.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

உப்பு-1 தேக்கரண்டி.

கொத்தமல்லி-சிறிதளவு.

இதையும் படியுங்கள்:
இனிப்பான செட்டிநாடு கந்தர் அப்பம் - தேங்காய் ரவா லட்டு செய்யலாமா?
Banana flower sambar-green gram kurma!

பச்சைப்பயிறு குருமா செய்முறை விளக்கம்.

முதலில் ½ கப் பச்சைப்பயிறை மூன்று நிமிடத்திற்கு வறுத்துவிட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.

இப்போது மிக்ஸியில் 3 சின்ன வெங்காயம், 3 பூண்டு, பச்சை மிளகாய் 1, கரம் மசாலா 1 தேக்கரண்டி, இஞ்சி 1 துண்டு, ½ தேக்கரண்டி சோம்பு, கசகசா ½ தேக்கரண்டி, பட்டை 1, கிராம்பு 1, ஏலக்காய் 2, முந்திரி 4, தயிர் 1 தேக்கரண்டி, ¼ கப் தேங்காய் சேர்த்து தண்ணீர்விட்டு பேஸ்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

கடாயில் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு 1 கப் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி 1, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, உப்பு 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கிய பின் பச்சைப்பயிறை சேர்த்து கலந்துவிடவும். இத்துடன் 2கப் தண்ணீர் சேர்த்து கொதிவந்ததும் அரைத்த விழுதை சேர்த்து 4 விசில் குக்கரில் வைத்து எடுக்கவும். கடைசியாக சிறிது கொத்தமல்லி தூவி கொதிவிட்டு இறக்கவும். அவ்வளவு தான். சுவையான மற்றும் ஆரோக்கியமான பச்சைப்பயிறு குருமா தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

logo
Kalki Online
kalkionline.com