
இன்றைக்கு சுவையான நூல்கோல் குருமா மற்றும் சிகப்பு கீரை கடையல் ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
நூல்கோல் குருமா செய்ய தேவையான பொருட்கள்.
பேஸ்ட் செய்ய,
தேங்காய்-1/4 கப்.
பச்சை மிளகாய்-3
பட்டை-1
கிராம்பு-1
ஏலக்காய்-1
சோம்பு-1 தேக்கரண்டி.
கசகசா-1 தேக்கரண்டி.
முந்திரி-5
குருமா செய்ய,
எண்ணெய்-1 தேக்கரண்டி.
பிரிஞ்சி இலை-1
சோம்பு-1 தேக்கரண்டி.
வெங்காயம்-2
தக்காளி-1
நூல்கோல்-2
மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.
கல்உப்பு-1 தேக்கரண்டி.
கொத்தமல்லி-சிறிதளவு.
நூல்கோல் குருமா செய்முறை விளக்கம்:
முதலில் மிக்ஸியில் ¼ கப் துருவிய தேங்காய், 3 பச்சை மிளகாய், 1 துண்டு பட்டை, 1 ஏலக்காய், கிராம்பு 1, சோம்பு 1 தேக்கரண்டி சேர்த்துக்கொள்ளவும். இதனுடன் 5 முந்திரி, 1 தேக்கரண்டி கசகசாவை சுடுத்தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைத்து இத்துடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது குக்கரில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு 1 தேக்கரண்டி, பிரிஞ்சி இலை 1, நறுக்கிய வெங்காயம் 2, இஞ்சிபூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி சேர்த்து வதக்கிவிட்டு நறுக்கிய 2 நூல்கோலை சேர்த்து அத்துடன் நறுக்கிய தக்காளி 1 சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு ½ தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி கல்உப்பு சேர்த்து விட்டு அரைத்த பேஸ்ட்டை சேர்த்து 2 கப் தண்ணீர் விட்டு 2 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும். கடைசியாக கொத்தமல்லி தூவி பரிமாறவும். அவ்வளவுதான் நூல்கோல் குருமா தயார். நீங்களும் இந்த சுவையான ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
சிகப்பு கீரை கடையல் செய்ய தேவையான பொருட்கள்.
நல்லெண்ணெய்-1 தேக்கரண்டி.
கடுகு-1/2 தேக்கரண்டி.
உளுந்து-1/2 தேக்கரண்டி.
சீரகம்-1/2 தேக்கரண்டி.
காய்ந்த மிளகாய்-4
பூண்டு-12
புளி-நெல்லிக்காய் அளவு.
சின்ன வெங்காயம்-10
தக்காளி-1
சிகப்பு கீரை-1 கட்டு
உப்பு-1/2 தேக்கரண்டி.
சிகப்பு கீரை கடையல் செய்முறை விளக்கம்.
முதலில் கடாயில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய், ½ தேக்கரண்டி கடுகு, ½ தேக்கரண்டி உளுந்து, ½ தேக்கரண்டி சீரகம், 12 பூண்டு, 4 காய்ந்த மிளகாய், 1 நெல்லிக்காய் அளவு புளியை வதக்கிக்கொள்ளவும்.
இப்போது இதில் 10 சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி 1 சேர்த்து வதக்கியதும் நறுக்கி வைத்திருக்கும் சிகப்பு கீரை 1 கட்டை சேர்த்துக்கொள்ளவும். இதற்கு ½ தேக்கரண்டி உப்பு, ½ கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். தண்ணீர் சற்று சுண்டி வந்ததும் எடுத்து கடையவும். இந்த சிகப்பு கீரை கடையல் ரத்த சோகை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. அவ்வளவுதான் சிகப்பு கீரை கடையல் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.