வேற லெவல் சுவையில் மணத்தக்காளி கீரை பொரியல் - மல்லி பொங்கல் ரெசிபிஸ்!

Manathakkali Spinach Poriyal-Malli Pongal
Manathakkali Spinach Poriyal-Malli Pongal
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

ன்றைக்கு சுவையான மணத்தக்காளி கீரை பொரியல் மற்றும் மல்லி பொங்கல் ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

மணத்தக்காளி கீரை பொரியல் செய்ய தேவையான பொருட்கள்.

மணத்தக்காளி கீரை-1 கட்டு

எண்ணெய்-சிறிதளவு

கடுகு-1 தேக்கரண்டி

சீரகம்-1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி

துருவிய தேங்காய்-1 கைப்பிடி.

வெங்காயம்-1

வரமிளகாய்-2

உப்பு-தேவையான அளவு

கருவேப்பிலை-சிறிதளவு

மணத்தக்காளி கீரை பொரியல் செய்முறை விளக்கம்.

முதலில் பேனில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, வரமிளகாய் 2, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்கவும்.

இப்போது பொடியாக நறுக்கி வைத்திருக்கும் மணத்தக்காளி கீரை 1 கட்டு சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் சுண்டியதும் துருவிய தேங்காய் 1 கைப்பிடி சேர்த்து கலந்துவிடவும். அவ்வளவு தான் சுவையான மற்றும் ஆரோக்கியமான மணத்தக்காளி கீரை பொரியல் தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

மல்லி பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:

சீரகசம்பா அரிசி-1/2 கப்

பாசிப்பருப்பு-1/4 கப்

உப்பு-தேவையான அளவு

இஞ்சி- 1 துண்டு

நெய்-1 தேக்கரண்டி

முந்திரி-10

மிளகு-1 தேக்கரண்டி

சீரகம்-1 தேக்கரண்டி

பெருங்காயத்தூள்-1 தேக்கரண்டி

கொத்தமல்லி-1 கைப்பிடி

பச்சை மிளகாய்-1

மல்லி பொங்கல் செய்முறை விளக்கம்.

முதலில் குக்கரில் ½ கப் சீரக சம்பா அரிசியும், ¼ கப் பாசிப்பருப்பும் சேர்த்து நன்றாக கழுவிவிட்டு 3 கப் தண்ணீர் விட்டு 20 நிமிடம் ஊற வைக்கவும்.

இதில் தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி 1 துண்டு சேர்த்துவிட்டு நன்றாக வேகவைத்து எடுக்கவும். நன்றாக மசித்துவிட்டுக் கொள்ளவும்.

இப்போது கடாயில் நெய் 2 தேக்கரண்டி சேர்த்து 10 முந்திரியை வறுத்துவிட்டு அத்துடன் 1 தேக்கரண்டி மிளகு, 1 தேக்கரண்டி சீரகம், பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும்.

மிக்ஸியில் கொத்தமல்லி 1கைப்பிடி, பச்சை மிளகாய் 1 சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதை தாளித்து வைத்திருக்கும் முந்திரியுடன் சேர்த்து 2 நிமிடம் கிளறிவிடவும். கடைசியாக மசித்து வைத்திருக்கும் பொங்கலை இத்துடன் சேர்த்து கலந்துவிட்டு பரிமாறினால் சுவையான மல்லி பொங்கல் தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.

இதையும் படியுங்கள்:
இஞ்சி - எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன்?
Manathakkali Spinach Poriyal-Malli Pongal
logo
Kalki Online
kalkionline.com