சூடான சாதத்தில் இந்த ஒரு உருண்டை இருந்தால் போதும்.. சட்டி சோறும் காலி!

Pappad Chammandhi
Pappad Chammandhi
Updated on

சில நேரங்களில் நமக்குக் குழம்பு வைக்கவோ, ரசம் வைக்கவோ நேரமிருக்காது; அல்லது உடல்நலம் சரியில்லாத போது நாக்குக்கு ருசியாக எதையாவது சாப்பிடத் தோன்றும். வழக்கமாக நாம் அப்பளத்தைப் பொரித்துச் சாதத்திற்குத் தொட்டுக்கொண்டு தான் சாப்பிட்டிருப்போம். ஆனால், அந்த அப்பளத்தையே பிரதான உணவாக மாற்றி, காரம், புளிப்பு, உப்பு என எல்லாச் சுவையும் கலந்து ஒரு உருண்டை செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்?

 கேரளாவில் மிகவும் பிரபலமான, ருசியான 'பப்பட சம்மந்தி' (Pappad Chammandhi) பற்றித்தான் பார்க்கப் போகிறோம். இது இருந்தால், தட்டு நிறைய சோறு இருந்தாலும் உள்ளே இறங்குவதே தெரியாது.

தேவையான பொருட்கள்

  • கேரள அப்பளம் – 4 அல்லது 5

  • சின்ன வெங்காயம் – 10

  • காய்ந்த மிளகாய் – 5 

  • தேங்காய்த் துருவல் – ¼ கப் 

  • புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு

  • இஞ்சி – ஒரு சிறு துண்டு

  • சீரகம் – ½ தேக்கரண்டி

  • கறிவேப்பிலை – ஒரு கொத்து

  • தேங்காய் எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

  • உப்பு – மிகக் குறைவாக 

செய்முறை ரகசியம்:

இந்த டிஷ்ஷின் ருசியே நாம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயிலும், சின்ன வெங்காயத்திலும்தான் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
சளி, காய்ச்சலுக்கு நிவாரணம் தரும் பச்சிலை மூலிகை ஆவி!
Pappad Chammandhi
  1. முதலில் வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அப்பளங்களை நன்றாகப் பொரித்து எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு, அதே சூடான எண்ணெயிற் காய்ந்த மிளகாயைப் போட்டு வறுத்து எடுங்கள். கூடவே, எடுத்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தில் பாதியளவு வெங்காயத்தைப் போட்டு லேசாக நிறம் மாறும் வரை வதக்கித் தனியாக வையுங்கள்.

  2. இப்போது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் வதக்கிய மிளகாய், வதக்கிய வெங்காயம், மீதமுள்ள பச்சையான சின்ன வெங்காயம், புளி, இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை மற்றும் மிகக் குறைந்த அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். தண்ணீர் எதுவும் ஊற்றாமல் 'கொரகொரப்பாக' அரைக்க வேண்டும். பச்சையாகச் சேர்க்கும் வெங்காயம் ஒரு தனிச் சுவையைக் கொடுக்கும்.

  3. ஓரளவுக்கு அரைபட்டதும், அதில் தேங்காய்த் துருவலைச் சேர்த்து ஒரே ஒரு சுற்று மட்டும் சுற்றவும். தேங்காய் நைஸாக அரைபடக்கூடாது. இப்போது இந்த அரைத்த மசாலாவை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளுங்கள்.

  4. பொரித்து வைத்துள்ள அப்பளங்களைக் கைகளால் நன்கு நொறுக்கி, அந்த மசாலா கலவையுடன் சேர்க்கவும். உங்கள் கைவிரல்களால் மசாலாவையும், நொறுக்கிய அப்பளத்தையும் நன்றாகப் பிசைந்து, கெட்டியான உருண்டைகளாகப் பிடிக்கவும். அப்பளத்தில் உள்ள எண்ணெயே உருண்டை பிடிக்கப் போதுமானது.

இதையும் படியுங்கள்:
குளியல் மற்றும் ஆவி பிடிப்பதால் சருமம் அழகு பெறுமா?
Pappad Chammandhi

ஒரு தட்டில் ஆவி பறக்கும் சுடு சாதத்தைப் போட்டு, அதன் மேல் ஒரு ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி, இந்தச் சம்மந்தி உருண்டையை வைத்துப் பிசைந்து சாப்பிட்டுப் பாருங்கள். அப்பளத்தின் மொறுமொறுப்பு, புளியின் புளிப்பு, மிளகாயின் காரம் என ஒவ்வொரு கவளமும் அமிர்தமாக இருக்கும்.

வீட்டில் காய்கறி இல்லாத நாட்களிலோ அல்லது மழை பெய்யும் நேரத்திலோ செய்வதற்கு இது மிகச்சிறந்த உணவு. பழைய சாதத்திற்கு இது மிகச்சிறந்த காம்பினேஷன். சமையலறையில் அதிக நேரம் செலவழிக்காமல், ஐந்தே நிமிடத்தில் ஒரு திருப்தியான மதிய உணவைச் சாப்பிட நினைப்பவர்கள் கண்டிப்பாக இதை முயற்சி செய்து பாருங்கள். ஒருமுறை சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் செய்வீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com