
இன்றைக்கு சுவையான இன்ஸ்டன்ட் போன்டா மற்றும் பருப்பு கறி ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
இன்ஸ்டன்ட் போன்டா செய்ய தேவையான பொருட்கள்.
இட்லி மாவு-4 கரண்டி
அரிசி மாவு-1/4 கப்
வெங்காயம்-2
சீரகம்-1 தேக்கரண்டி
மிளகு-1 தேக்கரண்டி
பச்சை மிளகாய்-2
இஞ்சி-1 துண்டு
பெருங்காயத்தூள்-1/2 தேக்கரண்டி
உப்பு-1/2 தேக்கரண்டி
எண்ணெய்-தேவையான அளவு
கருவேப்பிலை, கொத்தமல்லி-1 கைப்பிடி
இன்ஸ்டன்ட் போன்டா செய்முறை விளக்கம்.
முதலில் பவுலில் 4 கரண்டி இட்லி மாவு எடுத்துக் கொள்ளவும். இதில் ¼ கப் அரிசி மாவை சேர்த்து விட்டு 1 தேக்கரண்டி சீரகம், மிளகு 1 தேக்கரண்டி இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள்.
இத்துடன் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது 2, இஞ்சி 1 துண்டு துருவி சேர்த்துக் கொள்ளவும். பெருங்காயத்தூள் ½ தேக்கரண்டி, உப்பு ½ தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய வெங்காயம் 2, நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி 1 கைப்பிடி சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
இப்போது கடாயில் எண்ணெய் தேவையான அளவு ஊற்றி காய்ந்ததும், மாவை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு நன்றாக பொன்னிறமாக வெந்ததும் எடுத்துப் பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான இன்ஸ்டன்ட் போன்டா தயார்.
நீங்களும் இந்த ஈஸியான ரெசிபியை வீட்டில் ட்ரை பண்ணிப் பாருங்கள்.
பருப்பு கறி செய்ய தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு-100 கிராம்
மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்-1/2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய்-1 தேக்கரண்டி
கருவேப்பிலை-சிறிதளவு
தக்காளி-1
துருவிய தேங்காய்-1/2 கப்
பச்சை மிளகாய்-2
சின்ன வெங்காயம்-10
சீரகம்-1 தேக்கரண்டி
கருவேப்பிலை-சிறிதளவு
பூண்டு-3
உப்பு-1 தேக்கரண்டி
தாளிக்க,
எண்ணெய்-தேவையான அளவு
கடுகு-1 தேக்கரண்டி
சீரகம்-1 தேக்கரண்டி
உளுந்து-1 தேக்கரண்டி
வரமிளகாய்-2
கருவேப்பிலை- சிறிதளவு
சின்ன வெங்காயம்-4
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி
கொத்தமல்லி-சிறிதளவு
பருப்பு கறி செய்முறை விளக்கம்:
முதலில் பேனில் 100 கிராம் பாசிப்பருப்பை நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அந்த பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து அதை குக்கரில் சேர்த்து 2 கப் தண்ணீர் விட்டு ½ தேக்கரண்டி மஞ்சள் தூள், ½ தேக்கரண்டி பெருங்காயத்தூள், 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், கருவேப்பிலை சிறிதளவு, தக்காளி 1 நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். இரண்டு விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது மிக்ஸியில் துருவிய ½ கப் தேங்காய், பச்சை மிளகாய் 2, சின்ன வெங்காயம் 10, கருவேப்பிலை சிறிதளவு, பூண்டு 3, சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது அரைத்த தேங்காய் பேஸ்டை பருப்புடன் சேர்த்து கலந்துவிட்டு 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்துவிட்டுக் கொதிக்க விடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, வரமிளகாய் 2, கருவேப்பிலை சிறிதளவு, நறுக்கிய சின்ன வெங்காயம் 4 சேர்த்து வதக்கி மிளகாய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்துவிட்டு செய்து வைத்திருக்கும் பருப்பை இதில் சேர்த்து கலந்துவிடவும்.
கடைசியாக கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து இறக்கவும். சுவையான பருப்பு கறி தயார். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.