மீந்துபோன சாதத்தில் நான்கு வகை ரெசிபிகள் செய்து அசத்தலாமே!

samayal recipes in tamil
tasty samayal recipes
எஸ்.ராஜம்

என் வயது 84. கல்கி இதழ் பிறந்ததிலிருந்தே என் தாயார் கல்கி இதழை படித்ததை பார்த்து, பார்த்து வளர்ந்ததால் எனக்கும் படிப்பார்வம் பிறந்தது. பின்னர் எழுத்தார்வம் உருவானது. கல்கி இதழுக்கு 16 வயதில் இருந்து என் படைப்புகளை அனுப்ப ஆரம்பித்தேன். பிறகு மங்கையர் மலர் பிறந்ததும் அதற்கு கதை, கவிதைகள், கட்டுரைகள் துணுக்குகள் ஜோக்ஸ், டிப்ஸ், கோலங்கள் என்று அனுப்பி கொண்டிருக்கிறேன். அவை பிரசுரமாகி எனக்கு உற்சாகமூட்டுகின்றன. கல்கி குழும இதழ்கள் நடத்திய போட்டிகளில் பங்கு கொண்டு பல பரிசுகள் பெற்றுள்ளேன். ராஜம் எனும் என் பெயரிலும் ராஜலட்சுமி பாரதி மகள் ஆகிய துணை பெயர்களிலும் இன்று வரை தொடர்ந்து எழுதி வருகிறேன். தலைமுறை தலைமுறையாக கல்கி குழுமத்துடன் நாங்கள் உறவு வைத்திருப்பது எனக்கு பெருமை தருகிறது.

Updated on

சாத போண்டா 

தேவை:

பழைய சாதம் - 6 கப் 

உளுந்தம் பருப்பு - 4 டேபிள்ஸ்பூன் 

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 ஸ்பூன் 

பச்சை மிளகாய் - 1 

மல்லித்தழை - சிறிது 

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப 

செய்முறை:

உளுத்தம் பருப்பை ஊறவைத்து, நீரை முழுவதும் வடித்துவிட்டு, கெட்டியாக அரைத்து, சாதத்துடன் கலந்து, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மல்லித்தழை சேர்த்து பிசையவும். பின்னர்  வாணலியில் காய்ந்த எண்ணெயில், பிசைந்த கலவையை போண்டாக்களாக உருட்டிப் போட்டு, பொரித்து எடுத்தால், சுவையான சாத போண்டா தயார்.

சாதம் தோசை

தேவை:

மீந்த சாதம் - 6 கப் 

மைதா மாவு, ரவை - தலா அரை கப் 

நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன் 

கடுகு, சீரகம் - தலா 1 ஸ்பூன் 

பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவைக்கேற்ப 

எண்ணெய் - தேவைக்கேற்ப 

செய்முறை:

ரவை மைதா மாவு இரண்டையும் வாணலியில் போட்டு வறுக்கவும். பழைய சாதத்தை மிக்ஸியில் அரைத்து அதனுடன் சேர்க்கவும். கடுகு,  சீரகம் தாளித்து, வெங்காயம், உப்பு பச்சை மிளகாயை வதக்கி, மாவில் சேர்க்கவும். தோசைக் கல்லைக் காயவைத்து, இந்த மாவை தோசைகளாக வார்க்கவும்.

இதையும் படியுங்கள்:
மழை ஈசல்கள் ஒளியை சுற்றி வட்டமிடுவதற்கு காரணம் என்ன?
samayal recipes in tamil

சாதம் முறுக்கு

தேவை: 

மீந்த சாதம் - 4 கப்,   

கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன் 

மிளகு சீரகத்தூள் - 1 ஸ்பூன் கப், 

எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்,, 

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை: 

கடலை மாவை மீந்த சாதத்துடன் சேர்த்து, மிளகு சீரகத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு கலந்து, கெட்டியாக பிசைந்து, முறுக்கு அச்சில் நிரப்பி, காய்ந்த எண்ணெயில் பிழிந்து பொன்னிறமாகப் பொரித்து எடுத்தால், மொறு மொறு சாத முறக்கு தயார்.

சாதம் வடகம் 

தேவை: 

மீந்த சாதம் - 6  கப் 

பச்சை மிளகாய் - 2

எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன்

சீரகம் - 2 ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: 

பச்சை மிளகாயுடன் உப்பு கலந்து அரைத்து, சாதத்தில் கலந்து, சீரகம் சேர்த்து பிசையவும்.  இதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். பிசைந்த கலவையை உருட்டி, தட்டி தட்டி, எண்ணெய் தடவிய வாழை இலையில் வைத்து, வெயிலில் காய வைத்து எடுத்தால், சுவையான சாத வடகம் தயார்.

logo
Kalki Online
kalkionline.com