காய்கறிகள், பழங்கள் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை.

காய்கறிகள், பழங்கள் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை.
எஸ்.ராஜம்

என் வயது 84. கல்கி இதழ் பிறந்ததிலிருந்தே என் தாயார் கல்கி இதழை படித்ததை பார்த்து, பார்த்து வளர்ந்ததால் எனக்கும் படிப்பார்வம் பிறந்தது. பின்னர் எழுத்தார்வம் உருவானது. கல்கி இதழுக்கு 16 வயதில் இருந்து என் படைப்புகளை அனுப்ப ஆரம்பித்தேன். பிறகு மங்கையர் மலர் பிறந்ததும் அதற்கு கதை, கவிதைகள், கட்டுரைகள் துணுக்குகள் ஜோக்ஸ், டிப்ஸ், கோலங்கள் என்று அனுப்பி கொண்டிருக்கிறேன். அவை பிரசுரமாகி எனக்கு உற்சாகமூட்டுகின்றன. கல்கி குழும இதழ்கள் நடத்திய போட்டிகளில் பங்கு கொண்டு பல பரிசுகள் பெற்றுள்ளேன். ராஜம் எனும் என் பெயரிலும் ராஜலட்சுமி பாரதி மகள் ஆகிய துணை பெயர்களிலும் இன்று வரை தொடர்ந்து எழுதி வருகிறேன். தலைமுறை தலைமுறையாக கல்கி குழுமத்துடன் நாங்கள் உறவு வைத்திருப்பது எனக்கு பெருமை தருகிறது.

Updated on

தினசரி உணவில் இடம்பெறும் காய்கறி, பழங்களை தேவைக்கேற்ப அவ்வப்போது வாங்கினால் போதும். கடைகளிலோ வீட்டிலோ அவை இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் சத்துக்களை இழக்கின்றன. நிறைய வாங்கி ஃபிரிட்ஜில் திணிப்பதால் பயனில்லை.

ஃப்ளூரசன்ட் விளக்குகளின் கீழே வைக்கப்பட்டுள்ள பழங்கள், ரசாயன மாற்றம் ஏற்பட்டு, அவற்றில் உள்ள சத்துக்கள் குறைந்து விடுவதால், அவற்றை வாங்குவதை தவிர்த்தல் நல்லது.

நிலத்துக்கடியில் விளையும் கிழங்கு வகைகள் மண்மூடி இருப்பதையே வாங்க வேண்டும். வீட்டில் இரண்டு மூன்று நாட்கள் வைத்திருக்க நேர்ந்தால் கழுவாமல் மண்ணுடன் வைத்தால் கெடாமல், காய்ந்து போகாமல் இருக்கும்.

வரில் போட்டு வைத்திருக்கும் பழங்கள், காய்களை விட, வெளியே கொட்டி வைத்த காய்கறிகளே சிறந்தது. தரமானதை பார்த்து வாங்கலாம்.

வெண்டைக்காய், வெள்ளரி போன்றவற்றை தொட்டுப் பார்த்து இளசாக உள்ளவற்றை வாங்கலாம்.

முள்ளங்கி, காலிஃபிளவர் போன்ற காய்களை வாங்கும் போது, நிறைய இலைகள் உள்ளதாக பார்த்து வாங்க வேண்டும். அப்போதுதான் நிறைய புரதச்சத்தும் இருக்கும், சுவையாகவும் இருக்கும், கெடாமலும் இருக்கும்.

மால்களிலும், டிபார்ட்மென்டல் ஸ்டோர்களிலும் காய்கறிகள், பழங்கள் வாங்காமல், வீட்டு வாசலில் வரும் காய்கறி, பழக்காரர்களிடம் வாங்கி, சிறு வியாபாரிகளை ஊக்குவிக்கலாமே.

logo
Kalki Online
kalkionline.com