முருங்கை விதை பத்து இருந்தா போதும்! இதெல்லாம் பறந்து போயிடும்!

பொதுவாகவே, வயதாக ஆக எலும்பு தேய்மானமும் மூட்டு வலி, கால்சியம் பிரச்சனை வந்து பாடாய்ப்படுத்தும். எலும்பு தேய்மானம் அதிகமாக இருந்தால் எழுந்து நடக்கக்கூட மிகவும் கஷ்டப்படுவார்கள் முதியவர்கள்.
முதியவர்களுக்கு மட்டுமல்ல 40 வயதை தாண்டி விட்டாலே எழும்பு தேய்மானமும் சரி, கால்சியம் பிரச்சனையும், மூட்டு வலியும் சேர்ந்து வந்து விடுகிறது.
முருங்கை விதை பத்து என்ற அளவிற்கு நீங்கள் பயன்படுத்தும் பொழுது நிச்சயமாக எலும்பு தேய்மானம், கால்சியம் பிரச்சனை ஆகியவை ஓடியே விடும்.
எலும்பு தேய்மானம், கால்சியம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த முருங்கை விதைகளை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து இப்போ இங்கே காணலாம்.
இதற்கு தேவையான பொருட்கள்:
1. முருங்கை விதை- 5 g
2. நெய் 1 ஸ்பூன்
3. பால்- 1 டம்ளர்
4. நாட்டு சர்க்கரை
செய்முறை:
முதலில் முருங்கை விதைகளை நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளுங்கள்.
அப்படி இல்லையெனில் மிகவும் முத்திய முருங்கைக்காய் உங்கள் வீட்டில் இருந்தால் அந்த விதைகளை மட்டும் தனியே எடுத்து காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அந்த முருங்கை விதை உள்ளே பருப்பு இருக்கும் அந்த பருப்பை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
5 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய்யை ஊற்றி இந்த முருங்கை விதைகளை போட்டு நன்கு வறுக்கவும்.
நன்கு வறுத்த உடன் இதனை பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதை ஒரு ஸ்பூன் அளவிற்கு பாலில் சேர்த்து கொதிக்க வைத்து சுவைக்கு ஏற்ப நாட்டுச்சர்க்கரை கலந்து குடித்து வந்தால் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.
கண் பிரச்சனை, கண் மங்குதல், கால்சியம் குறைபாடு, எலும்பு பிரச்சனை, எலும்பு தேய்மானம், கால் வீக்கம், கெட்ட கொழுப்பு ஆகிய அனைத்தும் நீங்கும்.