வேர்களும் அதன் மருத்துவ பலன்களும்!

வேர்களும் அதன்  மருத்துவ பலன்களும்!

* வெட்டிவேர்: வெட்டிவேர் ஊறிய நீரை குடித்தால் காய்ச்சல், நீர் எரிச்சல், நீர் கடுப்பு, உடல்சோர்வு, தோல் நோய்கள் மற்றும் மனஅழுத்தம் போன்றவை குறையும்.

* ஆவாரை வேர்: முகத்தில் வெண்மையான தேமல் இருந்தால், ஆவாரை வேரை எலுமிச்சைச் சாறு கலந்து அரைத்து பூசினால் வெண்மை தேமல் மறையும்.

* வெள்ளைக் கற்றாழை வேர்: வெள்ளை கற்றாழை வேரை நிழலில் உலர்த்தி அதை நன்றாகப் பொடி செய்து நெய்யில் குழப்பி கண்ணில் ஒற்றிக்கொள்ள கண்ணில் உள்ள பூ போகும்.

* கொன்றை வேர்: கொன்றை வேர், கொழுந்து இவற்றை ஊற வைத்து, அரைத்து, துவையல் செய்து சாப்பிட்டால் மலக் சிக்கல் தீரும்.

* ஆடா தொடா வேர்: ஆடாதொடா வேர் நாலைந்துடன், 1 துண்டு வசம்பு சேர்த்து அரைத்து வேனில் கட்டி மேல் பூசி வர, கட்டி பழுத்து உடையும்.

* நொச்சி வேர்: நொச்சி வேர் ஒருபிடி, வேப்பெண்ணெய் ½ லிட்டர் சேர்த்து மண்சட்டியில் விறகு அடுப்பில் காய்ச்சி மார்பு, விலா, முதுகு ஆகிய இடங்களில் தடவி வர ஆஸ்துமா குறையும்.

* கீழாநெல்லி வேர்: கீழாநெல்லி வேருடன், சீரகம் கொஞ்சம் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு உருண்டையை தினமும் சாப்பிட்டு காய்ச்சிய பசும்பால் 1 டம்ளர் குடித்துவர, சிறுநீர் கடுப்பு பிரச்னை நீங்கும்.

* தூதுவளை வேர்: தூதுவளை வேரையும், தூதுவளைக் கீரையுடன் ஓமம், பூண்டு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் சூதக வாயு சம்பந்தமான வியாதிகள் குணமாகி, மலத்தை இளக்கும்.

* தென்னைமர வேர்: ஈறுகளும், பற்களும் நன்றாகப் பலப்பட, தென்னை மரத்து வேரை உலர்த்திப் பொடி செய்து வெற்றிலை பாக்கில் பொடியை மென்று தின்ன குணமாகும்.

* ஆலமர வேர்: ஆலமரத்தின் இளம் வேர்களுடன், செம்பருத்திப் பூவையும் காய வைத்து இடித்துத் தூள் செய்து தலைக்கு தேய்த்து வந்தால், முடி கருப்பாக வளரும்.

* நன்னாரி வேர்: நன்னாரி வேரை கற்றாழைச்சோற்றுடன் கலந்துண்ண விஷக்கடியினால் உண்டாகும் பக்க விளைவுகள் குணமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com