
முகப்பரு தொந்தரவு என்பது இக்காலத்தில் நிறைய பேருக்கு உள்ளது. முகத்தின் அழகைக் கெடுப்பதுடன், வலியும் ஏற்படும். அப்படிப்பட்ட முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும்? அதற்கான முத்தான டிப்ஸ் பற்றி இங்கே காண்போம்.
* திருநீற்றுப்பச்சிலையை அரைத்து முகப்பரு உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் எளிதில் குணம் கிடைக்கும்.
* ஒரு ஆஸ்பிரின் மாத்திரையை நசுக்கி, சில துளிகள் தண்ணீரை சேர்த்து பேஸ்டாக மாற்றவும். பருவில் பேஸ்டைப் பயன்படுத்துங்கள்.
* துத்தி இலையை அரைத்துப் பருக்கள் மீது தடவிவரப் பருக்கள் மறையும்.
* திரிபலா பொடி கஷாயத்தால் முகம் கழுவி வந்தாலும் பருக்கள் நீங்கும்.
* பசுஞ்சாணத்தில் செய்யப்பட்ட விபூதியை தண்ணீரில் குழைத்துத் தேய்த்துவந்தாலும் பருக்கள் மறையும்.
* பாசிப் பருப்புப் பொடியுடன் நெல்லிக்காய் தூள் கலந்து சோப்புக்குப் பதில், தினசரிக் குளிக்கப் பயன்படுத்தினால் பரு மாறி உடல் ஒளிபெறும்.
* சாதிக்காய், சந்தனம், மிளகு ஆகிய மூன்றையும் அரைத்துப் பற்று போட, பரு மறையும்.
* எலுமிச்சைச் சாற்றுடன் நீர் சேர்த்து, பரு உள்ள இடங்களில் தடவி இரண்டு முதல் மூன்று மணி நேரம் கழித்து முகம் கழுவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் பருக்கள் மறையும்.
* ஒரு சிறிய க்ரீன் டீ பையை தண்ணீரில் காய்ச்சவும், பின்னர் அதனை குளிர வைக்க வேண்டும். அது குளிர்ந்தவுடன் அதனை பரு மீது வைக்கவும். இது ஒரு பயனுள்ள தீர்வு.
* வெள்ளரிப் பிஞ்சை தக்காளி ஜூஸில் ஊற வைத்துத் தொடர்ந்து முகம் கழுவி வர விரைவில் பருக்கள் மறையும்.
* சில ஐஸ் கட்டிகளை எடுத்து அவற்றை நன்றாக துணியால் மூடி வைக்கவும். அதனை பருக்கள் மீது வைக்கவும். சருமத்தில் நேரடியாக ஐஸ் கட்டியை பயன்படுத்த வேண்டாம். விரைவில் பருக்கள் மறையும்.
* வாழைப்பழத்தின் தோலை அரைத்து அதனுடன் குறைந்தளவு தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி ஊற வைத்து பின்னர் கழுவினால் முகப்பரு மற்றும் தழும்புகளிலிருந்து விடுபடலாம்.
* கற்றாழை ஜெல்லை முகப்பருவுக்கு மேல் பயன்படுத்துவதன் மூலம் ஒரே இரவில் பருவை நீக்க முடியும்.
* வேப்பிலை கலந்த சுடு நீரில் ஆவி பிடித்தால் முக துவாரங்கள் திறந்து, அதிலுள்ள அழுக்குகள், இறந்த செல்கள் தளர்ந்துவிடும். இதன் மூலமாக மாசு நிறைந்த இறந்த செல்கள் முழுவதுமாக வெளியேறி பருக்கள் நீங்கும்.
* பருக்கள் உள்ள இடங்களில் தேனை தடவி சிறிது நேரம் ஊற வைத்த பிறகு பால் கொண்டு கழுவி, குளிர்ந்த நீரில் கழுவினால் பருக்களை போக்கலாம்.
* அரிசி மாவில் செய்யப்பட்ட நாமக்கட்டியை உரசி தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும் பரு நீங்கும்.
* கடலை மாவு, சந்தனப் பொடி, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால் பருக்கள் நீங்கும்.