மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கைக்கு உதவும் 10 ரகசியங்கள்!

ஆகஸ்ட் 18, தேசிய தம்பதியர் தினம்
மகிழ்ச்சியான தம்பதி
மகிழ்ச்சியான தம்பதிhttps://www.thehansindia.com
Published on

திருமணம் செய்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் ஒரு பலம் மற்றும் ஒரு பலவீனம் உள்ளது. எனவே, உங்கள் துணையின் பலத்தில் கவனம் செலுத்துவதை விட்டு, பலவீனத்தில் கவனம் செலுத்தினால் அவருடைய சிறந்த திறமைகளை, சிறந்த விஷயங்களை உங்களால் பெற முடியாது.

ஒவ்வொருவருக்கும் ஒரு இருண்ட வரலாறு உண்டு. யாரும் இங்கு உத்தமர் இல்லை. நீங்கள் திருமணம் செய்து கொள்ளும்போது ஒருவரின் கடந்த காலத்தைத் தோண்டி எடுப்பதை நிறுத்துங்கள். உங்கள் துணையின் தற்போதைய வாழ்க்கை மிகவும் முக்கியமானது. கடந்த கால  விஷயங்கள் மறைந்து விட்டன என மறந்து, இனி நல்ல எதிர்காலத்தில் கவனம் செலுத்துங்கள்.

ஒவ்வொரு திருமணமும் சவால்கள் நிறைந்ததே. திருமணம் என்பது ரோஜாக்களின் படுக்கை அல்ல. ஒவ்வொரு நல்ல திருமணமும் நெருப்பில் நீந்துவதை போன்றது. உண்மையான அன்பு, சவாலான நேரங்களில் நிரூபிக்கப்பட வேண்டும்.  தேவைப்படும் சமயங்களில் உங்கள் துணையுடன் நிற்க மனதை உறுதி செய்யுங்கள். நோயிலும் ஆரோக்கியத்திலும் இணைந்திருக்கப் போவது நீங்கள் இருவர் மட்டுமே.

ஒவ்வொரு திருமணமும் வெற்றியின் வெவ்வேறு நிலைகளைக் கொண்டுள்ளது. உங்கள் திருமணத்தை வேறு யாருடனும் ஒப்பிடாதீர்கள். இங்கு யாரும் சமமாக இருக்க முடியாது. சிலருக்கு விரைவில் நடக்கலாம். சிலருக்கு கால தாமதமாகலாம். திருமண அழுத்தங்களைத் தவிர்த்து, பொறுமையாக இருங்கள், நம்பிக்கையோடு இருங்கள். காலப்போக்கில் உங்கள் திருமணக் கனவுகள் நனவாகும்.

திருமணம் செய்துகொள்வது என்பது போர் களத்தில் நிற்பதற்கு ஒப்பானது.தாம்பத்ய வாழ்வில் எதிரில் நிற்கும் சில எதிரிகள் அறியாமை , மன்னிக்காத தன்மை, மூன்றாம் மனிதர் செல்வாக்கு , கஞ்சத்தனம், பிடிவாதம், அன்பு இல்லாமை, முரட்டுத்தனம், சோம்பல், அவமரியாதை,  ஏமாற்றுதல். உங்கள் திருமண பந்தத்தை காப்பாற்ற இவர்களை எதிர்த்து போராடத் தயாராக இருங்கள்.

திருமண வாழ்க்கை என்பது அதீத கவனம் தேவைப்படும் கடினமான வேலை. திருமணம் என்பது சரியான பராமரிப்பு மற்றும் சரியான கவனம் தேவைப்படும் ஒரு கார் போன்றது. இதைச் செய்யாவிட்டால், அது எங்காவது ரிப்பேர் ஆகி, உரிமையாளருக்கு ஆபத்து அல்லது சில ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளை வெளிப்படுத்தும். திருமண வாழ்க்கையில்  அலட்சியமாக இருக்க வேண்டாம்.

நீங்கள் விரும்பும் ஒரு முழுமையான வாழ்க்கை துணையை கடவுளால் கூட உங்களுக்குக் கொடுக்க முடியாது. நீங்கள் விரும்பும் நபரை நீங்கள் விரும்பி  மாற்றிக்கொள்ளும் வகையில்  செய்ய காதல், அக்கறை, அன்பு, விசுவாசம்  மற்றும் பொறுமை மூலம் மட்டுமே அதை அடைய முடியும்.

இதையும் படியுங்கள்:
பாதங்கள் மனித உடலின் எடை தாங்கி மட்டுமா?
மகிழ்ச்சியான தம்பதி

திருமண வாழ்வில்  எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று கணிக்க முடியாது. சூழ்நிலைகள் மாறக்கூடும். எனவே, மாற்றங்களுக்கு இடம் கொடுக்கத் தயாராக  இருங்கள். கணவர் தனது நல்ல வேலையை இழக்க நேரிடலாம் அல்லது நீங்கள் குழந்தைகளைப் பெறத் தவறலாம். மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை.

திருமணம் என்பது தற்காலிக ஒப்பந்தம் அல்ல. அது நிரந்தரமானது. அதற்கு முழு ஈடுபாடு தேவை. காதல் என்பது ஜோடியை இணைக்கும் பசை. விவாகரத்து பெறுவதைப் பற்றிய எண்ணங்களை ஒருபோதும் ஆதரிக்காதீர்கள். விவாகரத்து செய்வதாக உங்கள் மனைவியை ஒருபோதும் அச்சுறுத்தாதீர்கள். இயலாமையின் வெளிப்பாடே ஒருவரை அச்சுறுத்துவது.

ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு விலை கொடுக்க வேண்டும். திருமணம் என்பது வங்கிக் கணக்கு போன்றது. நீங்கள் டெபாசிட் செய்யும் பணம்தான் நீங்கள் திரும்பப் பெறுகிறீர்கள். உங்கள் திருமணத்தில் அன்பு, அமைதி மற்றும் அக்கறையை நீங்கள் டெபாசிட் செய்யவில்லை என்றால், நீங்கள் ஒரு ஆனந்தமான வாழ்வை எதிர்பார்க்க  முடியாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com