நோயாளியின் பாதுகாப்பை உறுதி செய்யும் 10 வழிகள்!

செப்டம்பர் 17, உலக நோயாளி பாதுகாப்பு தினம்
World Patient Safety Day
World Patient Safety Day
எஸ்.விஜயலட்சுமி

விஜி ரவி என்கிற பெயரில் இதுவரை 40 சிறுகதைகள், 55 ஒரு பக்க கதைகள் 17 புத்தக விமர்சனங்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகளை கல்கி, மங்கையர் மலர், அவள் விகடன் பெண்கள் மலர, குங்குமம் தோழி போன்ற பிரபல இதழ்களில் எழுதியுள்ளார். மங்கையர் மலர், வைகை இணைய இதழ் அனிச்சம், ஆனந்தசந்திரிகை மின்னிதழ் சங்கப் பலகை முகநூல் குழுமம் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளை பெற்றுள்ளார். தோனி எஃப் எம் ல் வாரம் ஒரு முறை கதை சொல்கிறார். கல்கி இணைய இதழில் தன்னம்பிக்கை, குடும்பம் வாழ்வியல், ஆரோக்கியம் ஆன்மீகம், ஃபேஷன், உளவியல் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on

நோயாளியின் பாதுகாப்பை உறுதி செய்ய சுகாதார பாதுகாப்பு வளங்களின் பல்வேறு அம்சங்களை கையாளும் ஒரு விரிவான அணுகுமுறை தேவைப்படுகிறது. மருத்துவப் பிழைகளை குறைப்பதற்கும் ஒட்டுமொத்த மருத்துவமனைகளின் பராமரிப்பு தரத்தை மேம்படுத்துவதற்கும், நோயாளியின் பாதுகாப்பிற்கும் பின்பற்ற வேண்டிய மிக முக்கியமான காரணிகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. ஹெல்த் கேர் தொடர்பு: சுகாதார நிபுணர்களின் தவறான தகவல் தொடர்பு, மருத்துவப் பிழைகளுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. டாக்டர்கள், நர்சுகள், உதவியாளர்கள் ஷிப்ட் மாறும்போது அடுத்துப் பணிக்கு வருபவர்களுக்கு முறையான தகவல் தொடர்பை வழங்க வேண்டும். அப்போதுதான் நோயாளிகளின் நோயறிதல், சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை சரியாகக் கொடுக்க முடியும். மருந்து அளவு, நேரம் போன்றவற்றை குறிப்பிடுவது அவசியம். இரு முறை சரி பார்க்க வேண்டும். மருந்துகள் தெளிவாக லேபிளிடப்பட வேண்டும்.

2. தரமான மருத்துவக் கருவிகள்: அறுவை சிகிச்சைக் கருவிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகள் தரமானதாக இருக்க வேண்டும். உலக சுகாதார மையம் பரிந்துரைத்த விதிகளின்படி அவை இருக்க வேண்டும். சுகாதார உபகரணங்கள் கிருமி நீக்கம் செய்தல், தொற்று தடுப்புக்கான நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துதல் போன்றவை பின்பற்றப்பட வேண்டும்.

3. நோயாளியின் அடையாளம்: நோயாளியின் பாதுகாப்பில் மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று நோயாளி சரியான சிகிச்சை பெறுவதை உறுதி செய்வது. மருந்து, இரத்தம் எடுப்பது போன்ற நடைமுறைகளை செய்வதற்கு முன் நோயாளியின் அடையாளத்தை சரிபார்க்க குறைந்தது பெயர் மற்றும் பிறந்த தேதி போன்ற இரண்டு அறிகுறிகளை சரிபார்க்க வேண்டும்.

4. பார்கோடு சிஸ்டம்: பார்கோடு தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டு, நோயாளியின் மணிக்கட்டுப் பட்டைகளை ஸ்கேன் செய்வதற்கும் முறையான நடைமுறையை பயன்படுத்த வேண்டும்.

5. சுகாதார பணியாளர் பயிற்சி: நோயாளிகளின் பாதுகாப்பு நெறிமுறைகள், புதிய சிகிச்சைகள் மற்றும் தொழில்நுட்பம் குறித்து சுகாதாரப் பணியாளர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சி அவசியம். பாதுகாப்பு அபாயங்களை கண்டறிந்து திறம்பட செயல்படுவதற்கு பயிற்சி உதவும்.

6. சோர்வு மேலாண்மை: சுகாதாரப் பணியாளர்கள், குறிப்பாக அதிக மன அழுத்த சூழல்களில், அவர்களின் செயல்திறன் உகந்ததாக இருப்பதையும், பிழைகள் குறைக்கப்படுவதையும் உறுதிப்படுத்த, சரியான வேலை, வாழ்க்கை சமநிலை, போதுமான ஓய்வு மற்றும் சமாளிக்கக்கூடிய பணிச்சுமை ஆகியவை தேவை.

7. தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு: சோப்பு அல்லது ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பான்கள், அவற்றைப் பயன்படுத்தும் முறைகள், மேலும் உபகரணங்களின் ஸ்டெரிலைசேஷன் போன்றவை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
குடல் இயக்கம் சரியாக நடைபெறாவிட்டால் என்னென்ன பிரச்னைகள் உண்டாகும் தெரியுமா?
World Patient Safety Day

8. தொழில்நுட்பம்: எலக்ட்ரானிக் ஹெல்த் ரெக்கார்டுகள் சுகாதாரப் பணியாளர்களுக்கிடையே தகவல் தொடர்புகளை மேம்படுத்துகின்றன மற்றும் நோயாளியின் துல்லியமான புதுப்பித்த தகவல்களை தெரிவிக்கின்றன. நகல் சோதனைகள் மற்றும் தவறவிட்ட ஒவ்வாமை போன்ற பிழைகளை தவிர்க்க உதவுகின்றன.

9. நோயாளிகளின் ஈடுபாட்டை ஊக்குவித்தல்: நோயாளிகளைக் கேள்விகளைக் கேட்க ஊக்குவிப்பதன் மூலமும், மருந்துகளை இருமுறை சரிபார்ப்பதன் மூலமும், முடிவெடுப்பதில் பங்கேற்பதன் மூலமும் நோயாளிகளை அவர்களின் பராமரிப்பில் ஈடுபடுத்துவது பாதுகாப்பை மேம்படுத்துகிறது. நோயாளிகளுக்கு அவர்களின் நிலைமைகளைப் பற்றிக் கற்பிப்பது சாத்தியமான அபாயங்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது மற்றும் அவர்களின் சொந்த கவனிப்பில் அவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கிறது.

10. தொடர்ச்சியான கண்காணிப்பு: நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பாதுகாப்பு கவலைகளைப் பற்றிய புகார்கள் தருவதற்கும் மேம்பாடுகளை பரிந்துரைப்பதற்கும் பின்னூட்டங்கள் அமைக்க ஏற்றவாறு சூழல்கள் இருக்க வேண்டும். இவை தொடர்ச்சியான தர மேம்பாட்டிற்கு உதவுகின்றன.

logo
Kalki Online
kalkionline.com