ஆண்களைக் கவரும் பெண்களின் 5 அம்சங்கள்!

ஆண்களைக் கவரும் பெண்கள்
ஆண்களைக் கவரும் பெண்கள்
Published on

பெண்களின் தோற்றம், உடலமைப்பு இவைதான் ஆண்களைக் கவரும் என்று நாம் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால், அது தவறானது. பெண்களின் பழக்க வழக்கம், சில நடவடிக்கைகள், வாழ்வியல் ரீதியான மாறுதல்கள் இவை கூட ஆண்களுக்குப் பெண்களைப் பிடித்துப்போக காரணமாய் அமைகிறது. பெண்களிடம் ஆண்களுக்கு இந்த 5 அம்சங்கள் இருந்தால் நிச்சயமாகப் பிடிக்கும்.

1. நம்பிக்கை: உயர்ந்த சுயமரியாதை கொண்ட ஒரு பெண்ணை விட வேறு எதுவும் ஒரு ஆணுக்கு ஈர்க்காது. ஒரு தன்னம்பிக்கையான பெண் சுதந்திரமானவள். அவளால் தனது வாழ்க்கையில் எந்தச் சூழலையும் சமாளிக்க முடியும். இவர்கள் நேர்மையாகவும் தெரிவார்கள். அதனால் ஆண்களுக்கு இந்த மாதிரியான பெண்களை மிகவும் பிடிக்கும்.

2. நகைச்சுவை உணர்வு: நகைச்சுவை உணர்வு இல்லாத ஒரு நபர் உற்சாகமற்ற மற்றும் சலிப்பை ஏற்படுத்துகிறார். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. நகைச்சுவையாகவும் இருப்பது மிகவும் முக்கியமானது. ஒரு பெண் புத்திசாலித்தனமான நகைச்சுவைகளை வெளிப்படுத்தும்போது பல ஆண்கள் அதை மிகவும் கவர்ச்சியாகக் கருதுகின்றனர் மற்றும் அவர்களின் நகைச்சுவையால் ஒரு கூட்டத்தை உயிர்ப்பிக்க முடியும். அதனால் எப்போதும் நகைச்சுவையாகவும் சிரித்த முகத்துடன் இருந்தால் அந்தப் பெண்களை ஆண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்.

3. ஃபேஷன்: நன்கு உடையணிந்த பெண்ணால் ஒரு ஆணின் கவனத்தை ஈர்க்க முடியும். அதனால் பார்த்தவுடன் மனதை ஈர்ப்பது போல உடை அணிந்து சிரித்த முகத்துடன் இருந்தால் அந்தப் பெண்களை ஆண்களுக்கு மிகவும் பிடிக்குமாம். தன்னுடைய அழகு, சுத்தம், ஆடையில் கவனம் இல்லாமல் இருக்கும் பெண்களை ஆண்களுக்கு அவ்வளவாகப் பிடிப்பது இல்லையாம்.

இதையும் படியுங்கள்:
மாவிலையின் இறைத்தன்மையும் நன்மைகளும்!
ஆண்களைக் கவரும் பெண்கள்

4. வெற்றியான பெண்கள்: வெற்றிகரமான ஒரு பெண் ஆண்களுக்கு மிகவும் கவர்ச்சியாக தெரிகிறாள். பொருளாதார ரீதியாகப் பாதுகாப்பாக இருப்பது முதல் தொழில் ரீதியாக வெற்றி பெறுவது வரை, தொழிலைக் கொண்ட பெண்கள் ஆண்களை மிகவும் ஈர்க்கிறார்கள். வெறும் பணத்துக்காக பெண்கள் தங்களோடு இல்லை என்ற மனநிறைவை அது அவர்களுக்கு அளிக்கிறது.

5. புத்திசாலித்தனம்: பொது அறிவு இல்லாத பெண்ணை யாருக்கும் பிடிக்காது. ஒரு ஆண், தனது வாழ்நாள் முழுவதையும் தனது துணையுடன் செலவிடத் திட்டமிட்டால், அவன் ஒருவேளை அறிவார்ந்த பெண்களை இலக்காகக் கொள்வான். வாழ்க்கையில் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் உணர்வும் அறிவும் கொண்ட பெண்ணையே அவன் விரும்புவான்.

ஆக, பெண்களின் உடல் அழகு மட்டும் ஆண்களை எப்போதும் ஈர்க்காது. மற்ற அறிவுபூர்வமான அம்சங்களும் அவர்களைக் கவரும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com