பச்சிளம் குழந்தைகள் பற்றிய 6 சுவாரஸ்ய உண்மைகள்!

Interesting facts about Newborn babies
Interesting facts about Newborn babies
Published on

குழந்தைகளைப் பார்த்த உடனேயே எவ்வளவு துயரம் இருந்தாலும், அவையெல்லாம் பனி போல விலகி விடும். அதிலும் புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் காணும்போது இன்னும் சிறப்புதான். புதிதாகப் பிறந்த குழந்தைகளிடம் நிறைய வினோதங்கள் இருக்கும். இப்படிப் புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகளின் 6 கவர்ச்சிகரமான பழக்க வழக்கங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. ஏன் கண்ணீர் வருவதில்லை?: பச்சிளம் குழந்தைகள் அழுதுகொண்டே இருக்கும்போது உண்மையான கண்ணீர் வருவதில்லை. ஏனெனில், அவர்களின் கண்ணீர் குழாய்கள் வளரும் பருவத்தில் இருக்கின்றன. பச்சிளம் குழந்தைகளின் கண்கள் வறண்டு போகாமல் இருக்க போதுமான ஈரப்பதத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றாலும், கண்ணீருக்குத் தேவையான முழு நீள கண்ணீர் குழாய்கள் வளர்வதற்கு சில வாரங்கள் தேவைப்படும்.

2. 300 எலும்புகள்: பெரியவர்களுக்கு 206 எலும்புகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகளின் சிறிய உடலில் சுமார் 300 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் பல குருத்தெலும்புகளாக இருப்பதால் குழந்தை வளரும்போது ஒன்றாக இணைகின்றன. உதாரணமாக, அவர்களின் மண்டை ஓட்டில் உள்ள பல எலும்புகள்பிறக்கும்போதே தனித்தனியாக இருக்கும். காலப்போக்கில், இந்த எலும்புகள் ஒன்றிணைந்து, பெரியவர்களிடம் நாம் காணும் கட்டமைப்பை உருவாக்குகின்றன.

இதையும் படியுங்கள்:
கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் உருவான வரலாறு தெரியுமா?
Interesting facts about Newborn babies

3. 10,000 சுவை மொட்டுகள்: புதிதாகப் பிறந்த குழந்தைகள் சுமார் 10,000 சுவை மொட்டுகளுடன் பிறக்கின்றன. பெரியவர்களிடம் 2000 முதல் 10000 சுவை மொட்டுகள் உள்ளன. இந்த சுவை மொட்டுகள் அவர்களின் நாக்கில் மட்டுமல்லாமல், கன்னங்களின் உட்புறங்களிலும், வாயின் மேற்புறங்களிலும் தொண்டையிலும் கூட உள்ளன. இந்த சுவை உணர்வு இனிப்பு, கசப்பு மற்றும் புளிப்பு சுவைகளை வேறுபடுத்தி அறிய அனுமதித்தாலும், இனிப்பு சுவைகளுக்கே இயற்கையான விருப்பத்தைக் காட்டுகின்றன. குழந்தைகள் வளரும்போது, ​​சுவைமொட்டுகளின் எண்ணிக்கையும் குறைகிறது.

4. மூச்சு விடுவதை நிறுத்திவிடுவார்கள்: புதிதாகப் பிறந்த குழந்தைகள் சுவாசத்திற்கு இடையில் சில நொடிகள் சுவாசிப்பதை இடைநிறுத்த வாய்ப்புள்ளது. ஏனென்றால், அவர்களின் சுவாச அமைப்பு இன்னும் கற்றுக்கொண்டு வருவதால், இடைநிறுத்தங்கள் பொதுவானவை. ஒருவேளை இடைநிறுத்தங்கள் நீண்டதாக தோன்றினால் மருத்துவரை அணுகுவது  நல்லது.

5. வலது பக்கம் தலை திருப்புவார்கள்: பச்சிளம் குழந்தைகளில் 70 முதல் 85 சதவிகிதம் படுக்கும்போது தலையை வலப்புறமாகத் திருப்புகிறார்கள். இது அவர்களின் மூளை வளர்ச்சி மற்றும் இயந்திர ஒருங்கிணைப்புடன் தொடர்புடையது என்று ஆய்வொன்று கூறுகிறது. குழந்தைகள் வளரும்போது இந்த விருப்பம் சமமாவதோடு அவர்களின் கழுத்து தசைகள் சிறந்த கட்டுப்பாட்டைப் பெறுகின்றன.

இதையும் படியுங்கள்:
வெள்ளி நகைகள் அணிவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளின் அறிவியல் பின்னணி!
Interesting facts about Newborn babies

6. முதல் புன்னகைக்கு கொஞ்சம் நேரம் எடுக்கும்: பச்சிளம் குழந்தையின் அழகான பல் இல்லாத புன்னகையை பார்க்க ஆவலாக இருக்கும். பெரும்பாலான குழந்தைகள் தங்கள் முதல் புன்னகையை ஒளிரச் செய்ய சுமார் 6 முதல் 8 வாரங்கள் எடுத்துக் கொள்கிறார்கள். ஆரம்பத்தில், நீங்கள் பார்க்கும் முக இழுப்புகள் பிரதிபலிப்பு மட்டுமே. ஆனால், அவர்கள் முகங்களையும் குரல்களையும் அடையாளம் காணத் தொடங்கும்போது,​​ சிரிப்பை வெளிப்படுத்துவார்கள்.

பச்சிளம் குழந்தைகளின் செய்கைகளைக் கண்டுபிடிப்பது மர்மமாகவே இருந்தாலும், மேற்கண்ட செயல்களை மனதில் வைத்துக்கொண்டால் அவர்களின் செய்கைகளை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com