பண்டிகை காலம் வந்தாச்சு... குடும்பத்துடன் கொண்டாடும் நேரமாச்சு...

Festival time with family
Festival time
எஸ்.ராஜம்

என் வயது 84. கல்கி இதழ் பிறந்ததிலிருந்தே என் தாயார் கல்கி இதழை படித்ததை பார்த்து, பார்த்து வளர்ந்ததால் எனக்கும் படிப்பார்வம் பிறந்தது. பின்னர் எழுத்தார்வம் உருவானது. கல்கி இதழுக்கு 16 வயதில் இருந்து என் படைப்புகளை அனுப்ப ஆரம்பித்தேன். பிறகு மங்கையர் மலர் பிறந்ததும் அதற்கு கதை, கவிதைகள், கட்டுரைகள் துணுக்குகள் ஜோக்ஸ், டிப்ஸ், கோலங்கள் என்று அனுப்பி கொண்டிருக்கிறேன். அவை பிரசுரமாகி எனக்கு உற்சாகமூட்டுகின்றன. கல்கி குழும இதழ்கள் நடத்திய போட்டிகளில் பங்கு கொண்டு பல பரிசுகள் பெற்றுள்ளேன். ராஜம் எனும் என் பெயரிலும் ராஜலட்சுமி பாரதி மகள் ஆகிய துணை பெயர்களிலும் இன்று வரை தொடர்ந்து எழுதி வருகிறேன். தலைமுறை தலைமுறையாக கல்கி குழுமத்துடன் நாங்கள் உறவு வைத்திருப்பது எனக்கு பெருமை தருகிறது.

Updated on
mangayar malar strip
mangayar malar strip

ஆடி மாதம் பிறந்து விட்டாலே, அடுத்தடுத்து பண்டிகைகள் வரிசையாக வரும். அதற்கான பொதுவான பண்டிகை டிப்ஸ்கள் சில:

1. பண்டிகைக்கான செலவு, வாங்க வேண்டிய துணிமணிகள், மளிகை பொருட்கள் முதலியவற்றை பட்டியல் போட்டு வையுங்கள். வருமானத்தை கணக்கிட்டு அதற்கேற்ப, அவசியமான செலவுகளைச் செய்யுங்கள்.

2. பண்டிகைகளுக்கான வேலைகளை நாமே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதை விட, குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகள் உட்பட அனைவரையும் பங்கேற்கச் செய்தால் அவர்களுக்கும் மகிழ்ச்சி. நமக்கும் நல்லது. அவரவர் முடிந்த வேலைகளைச் செய்யலாம்.

3. பண்டிகைகள் வருவதற்கு சில நாட்கள் முன்னதாகவே வீடு சுத்தம் செய்தல், பொருட்கள் வாங்குதல் போன்ற வேலைகளை முடித்து விட்டால், கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கலாம்.

4. ஸ்மார்ட் ஃபோனிலேயே மூழ்கிக் கிடக்கும் இந்தக் காலக் குழந்தைகளுக்கு பண்டிகைகளின் மகத்துவங்களையும், மதிப்புகளையும் எடுத்துக் கூறி, அவர்களையும் பண்டிகையில் முழு மனதோடு கலந்து கொள்ள செய்யுங்கள்.

5. பண்டிகை காலங்களில், உணவு மற்றும் பானங்களில் கவனம் செலுத்துவது முக்கியம். அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

6. நம் வீட்டில் வயதானவர்கள், ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகள் இருந்தால், அதற்கு ஏற்ற வகையில், பட்சணங்கள் செய்து கொடுங்கள்.

7. பண்டிகை நாட்களில் டிவி, ஸ்மார்ட் ஃபோன் ஆகிய இரண்டையும் தவிர்த்து, நண்பர்கள், உறவினர்களுடன் நேரத்தை செலவிட்டுப் பாருங்கள். பண்டிகை டபுள் கொண்டாட்டமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பலாப்பழ பிரியாணி: அசைவம்போல ஒரு சைவம்! ரெசிபி இதோ!
Festival time with family

8. பண்டிகைகள் வரும் முன், அதாவது இரண்டு நாட்களுக்கு முன், பட்சணங்கள் செய்யத் தேவையான பொருட்களைத் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

9. பண்டிகை நாட்களில் வீடு சுத்தம் ஆவது போல, நாமும் நல்ல உடையுடன், பளிச்சென்ற தோற்றத்துடன் இருக்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com