பருவ மழைக்கு முன்பு அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டிய மின்சார பாதுகாப்பு நடவடிக்கைகள்!

Electrical safety measures
Monsoon rain danger
Published on

டகிழக்கு பருவ மழை இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. இக்காலகட்டங்களில் அடிக்கடி மின் விபத்துக்கள் நிகழ்வது வழக்கம். அந்த வகையில் பொதுமக்களும் விவசாயிகளும் மின் விபத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சில வழிமுறைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* வீடுகளில் ஏற்படும் மின் கசிவு விபத்தை தவிர்க்க ஆர்.சி.டி பொருத்த வேண்டும்.

* கட்டடத்திற்கு அருகே உள்ள மின் பாதைக்கும் கட்டடத்திற்கும் 6 அடி இடைவெளியும் தாழ்வழுத்த மின்பாதைக்கும் கட்டடத்திற்கும் 4 அடி இடைவெளியும் கட்டாயம் இருக்க வேண்டும்.

* மின் கம்பங்கள் மற்றும் ஸ்டே கம்பிகளில் கயிறு கட்டி துணி காய வைப்பது, கால்நடைகளைக் கட்டுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
99 ரூபாய் விலையிலிருந்து ஆரம்பமாகும் புதுமையான 7 வீட்டு உபயோக பொருட்கள்!
Electrical safety measures

* மின் பாதைகளுக்குக் கீழேயும் அருகிலும் நீளமான உலோகக் கம்பிகள் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்லக் கூடாது.

* மின் கம்பிகள் அறுந்து தரையில் விழுந்தால் அதன் அருகில் செல்லவோ அதைத் தொட முயற்சிக்கவோ கூடாது. உடனே அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

* மின்வாரிய அலுவலர்கள் அங்கு வரும் வரை வேறு யாரையும் அந்த மின்கம்பிகளைத் தொடாமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டும்.

* மின்சாரம் சார்ந்த பொருட்களில் தன்னிச்சையாக செயல்படாமல் சம்பந்தப்பட்ட மின்வாரிய பிரிவு அலுவலருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

* மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகே உள்ள மரக்கிளைகளை தன்னிச்சையாக வெட்டாமல் மின்வாரிய அலுவலர்களை அணுகி உதவி கோர வேண்டும்.

* ஈரக் கைகளோடு சுவிட்சுகள், ப்ளக்குகள் இயக்குவதை பெரும்பாலும் தவிர்த்திட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உண்மையான வாழ்வின் மகிழ்ச்சி: நிம்மதியைக் கண்டுபிடிக்க உதவும் 6 மந்திரங்கள்!
Electrical safety measures

* பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் கடைகளில் ஒயரிங் செய்யும்போது தரமான முத்திரையிட்ட மின் உபகரணங்களை பொருத்துவதோடு பழுதான உபகரணங்களை உடனே மாற்றிட வேண்டும்.

* பச்சை மரங்களிலும், இரும்பு கிரில்களிலும் அலங்கார சீரியல் விளக்குகள் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

* மின்வேலி அமைப்பது கிரிமினல் குற்றம் என்பதால் அதனை தவிர்த்திட வேண்டும்.

* விவசாயிகள் பம்பு செட்டில் ஒயரிங் பாதுகாப்பாக உள்ளதா என அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களின் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

* கனரக வாகனங்களை மின் கம்பிகளுக்கு அடியில் நிறுத்தி பொருட்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ கூடாது.

மேற்கூறிய வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதன் மூலம் பெருமளவு மின்கசிவு விபத்து அபாயத்தைத் தவிர்க்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com