வீட்டில் உள்ள எறும்புகளை தலை தெரிக்க ஓட வைக்க செம டிப்ஸ்!

Ants
Ants
Published on

மழைக்காலம் வந்தாலே, நம் வீட்டுக்கு வரும் முக்கிய விருந்தாளிகளில் ஒன்று இந்த எறும்புக் கூட்டம். சர்க்கரை டப்பாவில் இருந்து, சுவரின் மூலை வரை, ஒரு லைன் கட்டி அணிவகுத்துச் செல்லும் இந்த எறும்புகளைப் பார்க்கும்போதே நம்மில் பலருக்கும் ஒருவித எரிச்சல் ஏற்படும். சில சமயம் நம்மையும் கடித்து வைத்துவிடும்.

இதற்காக கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த சாக்பீஸ், ஸ்ப்ரே போன்றவற்றை பயன்படுத்தினால், அது சமையலறையில் உணவுப் பொருட்களில் படுமோ, வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்கள் கையில் படுமோ என்ற பயம் இருக்கும். ஆனால், எந்தவிதமான கெமிக்கலும் இல்லாமல், நமது அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் சில பொருட்களை வைத்தே, இந்த எறும்புத் தொல்லையை நிரந்தரமாக விரட்டலாம்.

வாசத்துக்குப் பின்னால் இருக்கும் விஞ்ஞானம்:

முதலில், இந்த எளிய முறை எப்படி வேலை செய்கிறது என்பதைப் புரிந்துகொள்வோம். எறும்புகள் ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாறிக்கொள்வதற்கும், தாங்கள் கண்டுபிடித்த உணவு இருக்கும் இடத்திற்கு மற்ற எறும்புகளை வழிநடத்திச் செல்வதற்கும் 'ஃபெரமோன்கள்' (Pheromones) என்ற ஒருவிதமான வாசனைப் பாதையை உருவாக்குகின்றன. 

பெருங்காயத்தின் கனமான வாசனையும், மிளகின் காரமான நெடியும், எறும்புகளின் இந்த வாசனைப் பாதையை முற்றிலுமாகச் சிதைத்து, அவற்றைக் குழப்பிவிடும். வழி தெரியாமலும், தகவல் பரிமாற முடியாமலும் போகும்போது, எறும்புகள் அந்த இடத்திற்கு வருவதையே நிறுத்திவிடும். 

1. பொடி வடிவில்: இது மிகவும் சுலபமான முறை. எறும்புகள் வரிசையாகப் போகும் இடங்கள், சமையலறை மேடை, ஜன்னல் ஓரங்கள், வீட்டு வாசல்படி ஓரங்கள் போன்ற இடங்களில், பெருங்காயத் தூளையும், மிளகுத் தூளையும் சம அளவில் கலந்து, ஒரு கோடு போல மெல்லியதாகத் தூவி விடுங்கள். 

இதையும் படியுங்கள்:
காதினுள் எறும்பு புகுந்துவிட்டால்..?
Ants

இது ஒரு ‘லட்சுமண ரேகை’ போலச் செயல்பட்டு, எறும்புகள் அந்த எல்லையைத் தாண்டி உள்ளே வராமல் தடுக்கும். குறிப்பாக சர்க்கரை டப்பா, இனிப்புப் பலகாரங்கள் வைத்திருக்கும் இடத்தை சுற்றி இப்படி ஒரு கோடு போட்டு வைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

2. ஸ்ப்ரே வடிவில்:

ஒரு கப் தண்ணீரில், ஒரு டீஸ்பூன் பெருங்காயத் தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். இந்தக் கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, எறும்புகள் வரும் மூலை முடுக்குகள், சுவரில் உள்ள விரிசல்கள், கதவுகளின் ஓரங்கள் போன்ற இடங்களில் ஸ்ப்ரே செய்யுங்கள். இந்த ஸ்ப்ரேயின் வாசனை காற்றில் பரவி, அந்தப் பகுதி பக்கமே எறும்புகள் வராமல் தடுக்கும். இதன் வாசனை குறைந்தவுடன், மீண்டும் ஒருமுறை ஸ்ப்ரே செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
நமது கைகளில் ஒரு புகைப்பட ஸ்டூடியோ! ஸ்மார்ட்போன் கேமராவின் உண்மை முகம்!
Ants

அவ்வளவுதான், கெமிக்கல் இல்லாத, நமது குழந்தைகளுக்கும் செல்லப் பிராணிகளுக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத, செலவே இல்லாத ஒரு இயற்கை பூச்சிக்கொல்லி நமது சமையலறையிலேயே இருக்கிறது. மேலே குறிப்பிட்ட இந்த சிம்பிளான டெக்னிக்கை முயற்சி செய்து பாருங்கள். எறும்புகள் உங்கள் வீட்டைக் காலி செய்துவிட்டுத் தலை தெறிக்க ஓடுவதை நீங்களே நேரடியாகப் பார்ப்பீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com