பச்சை நிறமுள்ள உருளைக்கிழங்கு விஷமாம்: உஷார்!

Green potatoes are poisonous: caution
Green potatoes are poisonous: cautionhttps://www.foodrepublic.com

ருளைக்கிழங்கு வாங்கும்பொழுது அதில் பச்சை திட்டுகள் உள்ள உருளைக்கிழங்குகளை வாங்காதீர்கள். அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. நம்மில் பலருக்கு உருளைக்கிழங்கு மிகவும் பிடித்த உணவு. கிழங்கு வகை உணவுகளில் மக்கள் அதிகம் உண்ணக்கூடியவை ஒன்றாகவும் உருளைக்கிழங்கு உள்ளது. நாம் வாங்கும் சில உருளைக்கிழங்குகள் சிறிது பச்சை நிறத்தில் காணப்படும். இந்த உருளைக்கிழங்குகள் முழுவதும் பச்சையாக இருப்பதில்லை.

நாம் சாப்பிடும் சாதாரண வகை உருளைக்கிழங்குகளில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பச்சை நிறமாக இருக்கும். அப்படி நீங்கள் வாங்கும் உருளைக்கிழங்கில் பச்சை நிறமாக இருப்பின் இந்த பாகங்களை மட்டும் வெட்டி வீசி விடுங்கள். ஒரு உருளைக்கிழங்கில் பச்சை திட்டுகள் உள்ளது எனில், அது சோலனைன் எனப்படும் நச்சு கலவையால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

தொழில்நுட்ப ரீதியாக உருளைக்கிழங்கில் அந்த பச்சை நிறத்தை குளோரோபில் கொடுக்கிறது. இந்த நிறமியானது உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்றாலும், அதை வெட்டி எறிவதே நல்லது. ஏனெனில், இந்த உருளைக்கிழங்கை சூரிய வெளிச்சத்திற்குக் கொண்டு வரும்போது இதில் அதிக அளவு சோலனைன் உற்பத்தியாகக் கூடும். சோலனைன் அதிகமாக உள்ள உருளைக்கிழங்கை நீங்கள் உட்கொண்டால் அது குமட்டல், தலைவலி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். அதையே நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது காய்ச்சல், மெதுவான சுவாசம் மற்றும் வயிற்றில் வலி ஆகியவை ஏற்படுகின்றன.

உருளைக்கிழங்கை வாங்கியவுடன் கழுவக் கூடாது. இதனால் அவை அழுகும் நிலை உண்டாகலாம். உருளைக்கிழங்கில் ஈரப்பதம் அதிகரிப்பதால் அதன் இருப்பு நாள் குறைகிறது. அதேபோல், அதிக வெப்பம் இருக்கும் இடங்களில் வைக்க வேண்டாம். இதனாலும் உருளைக்கிழங்கு அழுகலாம். அதே நேரம், உருளைக்கிழங்கை பிரிட்ஜில் வைப்பதால் அதன் சுவை மாறி விடும். குளிர்சாதன பெட்டியின் அதிகபட்ச குளிர்ச்சி, உருளைக்கிழங்கின் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றம் செய்து விடுகிறது.

இதையும் படியுங்கள்:
இந்த உணவுகளில் இவ்வளவு கார்போஹைட்ரேட் இருக்கா?
Green potatoes are poisonous: caution

கடையில் அல்லது சந்தையில் இருந்து உருளைக்கிழங்கை வாங்கும்போது, நிறமாற்றம் இல்லாத, உறுதியான, சுருக்கம் எதுவும் இல்லாத உருளைக் கிழங்கை பார்த்து வாங்க வேண்டும். எந்த ஒரு வெட்டும் சேதமும் இல்லாத கிழங்காக இருக்க வேண்டும். வீட்டில் வளர்க்கப்பட்ட உருளைக்கிழங்கையும் நல்ல முறையில் பாதுகாத்து வைக்க வேண்டும். அழுகிய உருளைக்கிழங்கு துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு, மற்ற கிழங்குகளையும் அழுகச் செய்யும்.

இனிமேல், உருளைக்கிழங்கை சமையல் செய்யும்பொழுது மிக ஜாக்கிரதையாக இருங்கள். பச்சை நிறம் தென்பட்டால் அதை வீசி எறிந்து விடுங்கள். அதேபோல், முளைவிட்ட உருளைக்கிழங்கை உண்பதும் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com