Hair loss
Hair loss

தலைமுடி உதிர்வு: வெறும் மூடநம்பிக்கையா அல்லது ஆரோக்கிய முறையா?

Published on

னித உடலின் ஒரு முக்கிய அங்கமாக தலைமுடி விளங்குகிறது. தலைமுடி அழகுக்கும் ஆரோக்கியத் துக்கும் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஆனால் இயற்கையாகவே தினமும் சில தலைமுடிகள் உதிர்வது சாதாரணமான ஒன்று. இந்த உதிர்ந்த தலைமுடியை எவ்வாறு கையாளவேண்டும் என்பது குறித்து நமது சமூகத்தில் சில பழக்கவழக்கங்கள் உள்ளன. “உதிர்ந்த தலைமுடியை வெளியே போடக் கூடாது” என்று பெரியவர்கள் கூறுவது ஏன்? இதன் பின்னணியில் உள்ள காரணங்களை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது.

சுகாதார காரணங்கள்: தலை வாரும்போது உதிரும் முடியை வாசலிலோ, தோட்டத்திலே போடக்கூடாது என்று பழைய காலத்தில் இருந்தே கூறி வருகிறார்கள். உதிர்ந்த தலைமுடியை வீட்டின் வெளியே அல்லது தரையில் போடுவது சுத்தமின்மையை ஏற்படுத்தும். தரையில் கிடக்கும் முடி மிக லேசாக இருப்பதால் அது காற்றில் பறந்து உணவுப் பொருட்களில் விழலாம். அந்த உணவை உட்கொண்டோ மானால் நமது வயிற்றில் கோளாறுகள் ஏற்படும்.

குளியலறை அல்லது கழிவுநீர் வடிகால்களில் சேர்ந்து அடைப்பை ஏற்படுத்தலாம். நீண்ட நாட்கள் அப்படியே இருந்தால் தூசி மற்றும் கிருமிகள் சேர்ந்து அசுத்த சூழலை உருவாக்கும். எனவே, உதிர்ந்த முடியை சேகரித்து குப்பைத் தொட்டியில் போடுவது நல்ல சுகாதார பழக்கமாகும்.

பாதுகாப்பு காரணங்கள்: தரையில் கிடக்கும் முடி வழுக்கி விழுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம். குறிப்பாக குளியலறை போன்ற ஈரமான இடங்களில் இது ஆபத்தாகும். மேலும், வீட்டு செல்லப்பிராணிகள் (நாய், பூனை போன்றவை) அந்த முடியை விழுங்கினால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம்.

இதையும் படியுங்கள்:
50-க்கு பின் நிம்மதி வேண்டுமா? நீங்கள் தவிர்க்க வேண்டிய 7 முக்கிய விஷயங்கள்!

Hair loss

சுற்றுச்சூழல் காரணங்கள்: தலைமுடி எளிதில் அழுகி கலையாத ஒன்று. அது நீண்ட நாட்கள் மண்ணில் இருந்தாலும் சிதைவதற்கு காலம் எடுக்கும். அதனால் அதை வெளியில் எங்கும் வீசிவிடுவது சுற்றுச்சூழலுக்கு ஏற்றதல்ல. தோட்டங்களில் போடப்படும் முடி, செடி, கொடிகளில் சுற்றி நிற்கும். அந்த செடி கொடிகளை பசுக்கள் மேயும் போது அதிலுள்ள முடி பசுவின் வயிற்றுக்குள் சென்று அதற்கு உபாதைகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு. சுத்தமான முறையில் அகற்றுவது நல்லது.

கலாசார மற்றும் நம்பிக்கை காரணங்கள்: நமது நாட்டில் தலைமுடி மனித உடலின் ஒரு பகுதியாக இருப்பதால் அதை மரியாதையுடன் கையாளவேண்டும் என்ற எண்ணம் நிலவுகிறது. எனவே பெரியவர்கள் உதிர்ந்த முடியை மண்ணில் குழிதோண்டி புதைத்து அகற்றுவது வழக்கமாக வைத்துள்ளனர். முடி எளிதில் மக்கி விடாது. இருந்தாலும் படிப்படியாக அது மண்ணோடு மண்ணாக மக்கி போகும். மேலும், “முடியை வெளியே போட்டால் யாராவது தீய நோக்கத்திற்குப் பயன்படுத்தலாம்” என்ற நம்பிக்கையும் சில இடங்களில் காணப்படுகிறது. ஆனால், இவ்வகை நம்பிக்கைகளுக்கு அறிவியல் ஆதாரம் இல்லை என்பதையும் உணரவேண்டும்.

முடி முருங்கை மரத்திற்கு சிறந்த உரம் என்று கூறப்படுகிறது. எனவே உதிரும் முடிகளை முருங்கை மர மூட்டில் போட்டு மூடி விடவேண்டும். முருங்கை மரம் நல்ல பயன் தரும்.

இதையும் படியுங்கள்:
சீட் பெல்ட் முதல் வாகனப் பராமரிப்பு வரை: பாதுகாப்புப் பயணத்திற்கான கையேடு!

Hair loss

“உதிர்ந்த தலைமுடியை வெளியே போடக்கூடாது” என்பது வெறும் மூடநம்பிக்கை மட்டுமல்ல; அதன் பின்னால் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய உண்மையான காரணங்களும் உள்ளன. சுத்தம் மற்றும் ஒழுங்கு என்பது ஒவ்வொருவரின் கடமையாகும். உதிர்ந்த தலைமுடியை முறையாக சேகரித்து குப்பைத் தொட்டியில் போடுவது நல்ல பழக்கமாகும். எனவே, பழமையான பழக்கங்களின் பின்னணியை அறிந்து, அறிவியல் பார்வையுடன் நல்லவற்றை கடைப்பிடிப்பதே சிறந்த நடைமுறையாகும்.

logo
Kalki Online
kalkionline.com