குளிர்காலத்தில் தண்ணீரைக் கண்டாலே அலர்ஜியா? ஒரு சொட்டு நீர் இல்லாமல் வீட்டைச் சுத்தம் செய்யும் ட்ரிக்!

House cleaning Tips
House cleaning Tips
Published on

House cleaning Tips: மார்கழி மாசம் காலையில் பைப்பைத் திறந்தாலே தண்ணீர் ஐஸ் கட்டி மாதிரி இருக்கும். அந்தத் தண்ணீரில் கை வைத்துத் துணி துவைப்பதோ, வீட்டைத் துடைப்பதோ நினைத்துப் பார்க்கவே முடியாத காரியம். "போனா போகுது, வெயில் வந்த பிறகு பார்த்துக்கலாம்" என்று நாம் சுத்தம் செய்வதைத் தள்ளிப் போடுவோம். 

ஆனால், நாம் செய்யும் அந்தத் தாமதம்தான் வினை. ஜன்னல்களைச் சாத்தியே வைப்பதால் வீட்டுக்குள் சேரும் தூசியும், பூஞ்சையும் குளிர்காலத்தில் நமக்குச் சளி, தும்மல் போன்ற உபாதைகளைத் தந்துவிடும். கவலையை விடுங்க. தண்ணீரில் கையை நனைக்காமலேயே, ஸ்மார்ட்டாக வீட்டைச் சுத்தம் செய்வது எப்படி என்று சில எளிய வழிகளைப் பார்ப்போம்.

உங்க வீட்டில் 'Vacuum Cleaner' இருக்கா? உடனே வாங்க...

வேக்கம் கிளீனர்!

தண்ணீர் இல்லாத துப்புரவு பணிக்கு வேக்கம் கிளீனர் ஒரு சிறந்த நண்பன். வாரத்திற்கு ஒரு முறையாவது வீட்டைச் சுத்தம் செய்வது அவசியம். உங்களிடம் வேக்கம் கிளீனர் இருந்தால், தரையை மட்டும் சுத்தம் செய்யாமல், தூசி படியும் திரைச்சீலிகள், சோஃபா இடுக்குகள், மெத்தை மற்றும் மிதியடிகள் என எல்லா இடங்களிலும் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத தூசியை உறிஞ்சி எடுத்துவிடுங்கள். வேக்கம் கிளீனர் இல்லையா? கவலை வேண்டாம். நல்ல தரமான துடைப்பத்தைக் கொண்டு, ஒட்டடை மற்றும் தூசியைத் தட்டிவிட்டாலே பாதி வேலை முடிந்தது.

மைக்ரோஃபைபர் துணி!

நம்ம ஊரில் இதை 'குடல் துண்டு' என்று சொல்வார்கள். இந்த மைக்ரோஃபைபர் துணி குளிர்காலத்திற்கு மிகச் சிறந்தது. இதை ஈரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. காய்ந்த நிலையில் இருக்கும்போதே, இது தூசியைக் காந்தம் போல ஈர்த்துக்கொள்ளும். டிவி ஸ்கிரீன், கண்ணாடி டீப்பாய், ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் சமையலறை மேடைகளைத் துடைக்க இதைப் பயன்படுத்தலாம். ஈரம் இல்லாததால், காய்வதற்குக் காத்திருக்க வேண்டியதில்லை, நீர்க் கறையும் படியாது. கைக்கும் குளிர் இருக்காது.

இதையும் படியுங்கள்:
கோடை வெயில் vs ஏசி குளிர்: உடல்நலம் பாதிக்கும் திடீர் மாற்றங்கள் - தவிர்ப்பது எப்படி?
House cleaning Tips

பெட்ஷீட், கார்பெட் சுத்தம் செய்வது எப்படி?

இதுதான் இல்லத்தரசிகளின் மிகப்பெரிய தலைவலி. குளிர்காலத்தில் கனமான போர்வைகளையோ, கார்பெட்டையோ துவைத்தால் ஒரு வாரம் ஆனாலும் காயாது. ஈர வாடை அடிக்கும். இதற்கு நம் சமையலறையில் இருக்கும் பேக்கிங் சோடா மற்றும் உப்பு போதும்.

ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் பேக்கிங் சோடாவையும், உப்பையும் கலந்து கொள்ளுங்கள். லேசாகத் தண்ணீர் தெளித்து ஒரு கலவையாக மாற்றிக் கொள்ளுங்கள். இந்தக் கலவையை உங்கள் கார்பெட், பாய் அல்லது மெத்தையின் மீது லேசாகத் தெளித்து விடுங்கள். ஒரு 20 லிருந்து 25 நிமிடம் அப்படியே ஊற விடுங்கள்.

இந்தக் கலவை உள்ளே இருக்கும் கெட்ட வாசனையையும், கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் மற்றும் பூஞ்சையையும் உறிஞ்சி எடுத்துவிடும். பிறகு, ஒரு பிரஷ் வைத்துத் தட்டிவிட்டாலோ அல்லது வேக்கம் கிளீனர் வைத்து உறிஞ்சினாலோ போதும். பிறகு சிறிது நேரம் வெயிலில் காய வைத்தால், துவைத்தது போலப் பளபளப்பாகவும், வாசனையாகவும் மாறிவிடும்.

இதையும் படியுங்கள்:
குளிர் / மழைக் காலத்தில் அவசியம் சேர்க்க வேண்டிய 'கதகதப்பான' உணவு: நெய்!
House cleaning Tips

குளிர்காலத்தில் நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, வீடு சுத்தமாக இருப்பது மிக அவசியம். மேலே சொன்ன இந்த எளிய முறைகளைப் பின்பற்றினால், குளிரிலிருந்தும் தப்பிக்கலாம், வீட்டையும் நோய்க்கிருமிகள் இல்லாமல் கண்ணாடி போலப் பராமரிக்கலாம்.

உங்க வீட்டில் 'Vacuum Cleaner' இருக்கா? உடனே வாங்க...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com